பொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா? "ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா! நோaயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்.

Thursday, December 30, 2010

எந்தை தந்தை தம்மானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே



திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி


1068
வில் பெரு விழவும் கஞ்சனும் மல்லும்* வேழமும் பாகனும் வீழச்*
செற்றவன் தன்னை புரம் எரி செய்த* சிவன் உறு துயர் களை தேவை*
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன் நின்றானை*
சிற்றவை பணியால் முடி துரந்தானைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே* 2.3.1


வில் பெரு விழவும் - பெரிய வில் விழாவும்
கஞ்சனும் - (அதை நடத்திய) கம்சனும்,
மல்லும் வேழமும் பாகனும் - மல்யுத்த வீரர்களும் யானையும், யானை ஓட்டுபவனும்
வீழச் செற்றவன் தன்னை - (கீழே) விழ அழித்தவன்
புரம் எரி செய்த சிவன் உறு துயர் களை தேவை - திரிபுரம் எரிக்க செய்த சிவனின் துன்பம் நீக்கிய தேவனும்
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு - எதிரிகள் அழியுமாறு சாட்டை கையில் கொண்டு
பார்த்தன் தன் தேர் முன் நின்றானை - அர்ச்சுனன் தேர் முன் நின்றவனை
சிற்றவை பணியால் முடி துரந்தானைத் - சின்னம்மா உத்தரவால் அரச பதவியை விட்டு கொடுத்தவனை
திருவல்லிக்கேணிக் கண்டேனே - திருவல்லிகேணியில் கண்டேனே

விளக்கம்:-
(பெரிய வில் விழாவை (நடத்திய) கம்சனும், (கம்சன் அனுப்பிய) வலிமை வாய்ந்த வீரர்களும் ,யானையும், பாகனும் (கீழே மண்ணை கவ்வுமாறு) விழ (செய்து) அழித்தவன் கண்ணன் (ஹே சூப்பரு !), திரிபுரம் எரிக்க செய்த (நம் அன்பு) சிவன் (திரிபுர அசுரர்களை கொல்ல முடியாமல் தவிக்க அவருக்கு ஏற்பட்ட) துன்பத்தை நீக்கிய தேவனை
,கௌரவர்களான) எதிரிகள் அழிய) (எவனா இருந்தாலும் வாங்கடா! என்பது போல தில்லா!) கையில் சாட்டை கொண்டு அர்ச்சுனன் தேரில் முன் நின்றவனை, (தனது) சின்னம்மா கைகேயியின் கட்டளையால் அரச பதவியை (ஏற்காமல்) விட்டு கொடுத்தவனை திருவல்லிக்கேணியில் கண்டேனே. (Hey Hey jolly)


பாசுர விளக்கத்திற்கு ஏற்ற கண்ணனின் ஐந்து உண்மை கதைகளை பார்ப்போமா!

முதல் கதை
கொடிய அரக்கன் கம்சன் தங்கை தேவகியின் வயிற்றில் பிறக்கக்கூடிய எட்டாவது குழந்தை அரக்க சுபாவம் கொண்ட அந்த அரசனை கொல்லப் போகின்றது என்பதை முன்பே அறிந்து. குழந்தைகள் பிறக்கப் பிறக்க அவற்றை ஒவ்வொன்றாக கொல்லவும் செய்தான். பல ஆண்டுகளாக இது தொடர தேவகி எட்டாவதாக ஒரு ஆண் குழந்தையை பெற்றாள். தேவகியின் எட்டாவது குழந்தையை இந்த குழந்தையும் கம்சன் கொள்வான் என் பயந்து யாருக்கும் தெரியாமல் நந்த குலத்தில் உள்ள நந்தகோபரின் வீட்டிற்கு எடுத்து சென்றார்.
கம்சன் தன்னை கொள்ளும் ஒருவன் பிறந்து விட்டன என்பதை தெரிந்து கொண்டு அவனை கொல்ல பல திட்டங்களை போட்டான். அனைத்தும் தோல்வியில் முடிந்து கம்சனும் கண்ணனால் கொல்லபட்டான்.

இரண்டாம் கதை
கம்சன் வில் யாகம் ஒன்று நடத்தினான். அதற்க்கு கண்ணன் வர வேண்டும் என் அழைப்பு விடுக்க கண்ணனும் வந்தான். வில் யாகம் நடக்கிறது என்பதை உணர்த்துவதற்காக யாராலும் தூக்க முடியாத மிகவும் கனமான வில் ஒன்று வைத்திருந்தான்.. அதை பார்த்த கண்ணன் காவலர்களின் பேச்சை எல்லாம் சட்டை செய்யாமல் இடது கையில் Easyaa தூக்கி ஓடித்தான் . இந்த விஷயம் கம்சன் அறிந்த பின்பு கண்ணனின் வலிமையை கண்டு மிரண்டு போனான்


மூன்றாம் கதை
திருதராஷ்டினின் மகன்கள் கௌரவர்கள். திருதராஷ்டினின் தம்பி பாண்டுவின் மகன்கள் பாண்டவர்கள். கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடைப்பட்ட போரில் நல்லவர்களான பாண்டவர்களுக்கு கிருஷ்ணர் துணை இருந்தார், (பாண்டவர்களில் ஒருவரான அர்ச்சுனனுக்கு தேர் பாகனாக இருந்து உதவி செய்தார்)

நான்காம் கதை
சிவபக்தர்களான மூன்று அசுரர்கள் கடுமையாக தவம் புரிந்து வரமாக மூன்று பறக்கும் நகரங்களை பெற்றனர் . திரிபுரம் என்று அழைக்கப்பட்டது.பறக்கும் கோட்டைகள் மூன்றும் மிகவும் பிரகாசமாக ஒளிர்ந்தன. அவை பறக்கும்போது விண்ணிலும் மண்ணிலும் பலருக்கும் அவதி. பூமியில் இறங்கினாலோ மானிடருக்குக் கஷ்டம். விண்ணில் இறங்கினாலோ தேவர்கள் அனைவரும் படாத பாடு படுவார்கள்.. இதனால் சிவபெருமான் திரிபுரத்தை எரித்து அழித்தார். ஆனால் திரிபுர அரக்கர்களை கொல்ல முடியமால் போகவே சிவபெருமான் மிகவும் வருந்தினார் பெருமாள் அம்பாக மாறி சிவனுக்கு உதவி புரிந்தார்
அரக்கர்கள் கொல்ல பட்டனர்.

ஐந்தாம் கதை
தசரதனின் முதல் மனைவியான கோசலை மகன் இராமர். இரண்டாம் மனைவி (இராமருக்கு சிற்றன்னை ஆன) கைகேயி, அவளது மகன் பரதன். தசரதன் இராமன் மன்னனாக இருக்க முடிவு செய்ய கைகேயி சூழ்சிக்கார பெண் மந்தரை பேச்சை கேட்டு இராமரை காட்டுக்கு அனுப்பி தன் மகன் பரதனை மன்னனாக இருக்க ஏற்பாடு செய்தாள் .




1069
வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை* விழுமிய முனிவர் விழுங்கும்*
கோது இல் இன் கனியை நந்தனார் களிற்றைக்* குவலயத்தோர் தொழுது ஏத்தும்*
ஆதியை அமுதை என்னை ஆள் உடை அப்பனை* ஒப்பவர் இல்லா
மாதர்கள் வாழும்* மாட மா மயிலைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே* 2.3.2

வேதத்தை - வேத சொருபமானவனை
வேதத்தின் சுவைப் பயனை - வேதத்தின் சுவை பயனை தருபவனை
விழுமிய முனிவர் விழுங்கும் - உயர்ந்த முனிவர் விழுங்கும்
கோது இல் இன் கனியை - குற்றம் இல்லாத இனிய கனியை
நந்தனார் களிற்றைக் - நந்தகோபலனின் மகன் யானையை போன்றவனை
குவலயத்தோர் தொழுது ஏத்தும் - பூமியில் உள்ளோர் வணங்கி போற்றும்
ஆதியை அமுதை என்னை ஆள் உடை அப்பனை - ஆதியை அமுதை என்னை அடிமை கொண்ட அப்பனை
ஒப்பவர் இல்லா மாதர்கள் வாழும் - ஒப்பில்லாத பெண்கள் வாழும்
மாட மா மயிலைத் - மாடங்கள் சூழ்ந்த மா மயிலைத்
திருவல்லிக்கேணிக் கண்டேனே - திருவல்லிக்கேணியில் கண்டேனே



விளக்கம்:-
வேத ( சொருபமானவனை ) வேதங்களில் (அவரவர் விருப்பங்களின் படி பலன்கள் சொல்லப்பட்டு இருப்பதால் அவரவர் விருப்ப) சுவைக்கு (ஏற்றபடி) பயன் (தருபவனை) , சிறந்த உயர்வான முனிவர்கள் விழுங்கும் குற்றமே இல்லாத இனிய கனியை, நந்தகோபலரின் (செல்ல குட்டி பையன் வலிமையான) யானையை போன்றவனை,பூமியில் உள்ளவர்கள் (அன்போடும், பாசத்தோடும்) வழிபட்டு போற்றும் முழுமுதல் கடவுளை, (தித்திக்கும் தேன்) அமுதை, என்னை அடிமை கொண்ட அப்பனை, (தனக்கு) இணையானவர்கள் யாருமே இல்லாத (அழகான) பொண்ணுங்க வாழும் மாடங்கள் (சூழ்ந்த மயிலாப்பூர் என்ற) மாமயிலை (அருகில் உள்ள) திருவல்லிக்கேணியில் கண்டேனே. (Hey Hey jolly)




1070
வஞ்சனை செய்யத் தாய் உரு ஆகி* வந்த பேய் அலறி மண் சேர*
நஞ்சு அமர் முலை ஊடு உயிர் செக உண்ட நாதனைத்* தானவர் கூற்றை*
விஞ்சை வானவர் சாரணர் சித்தர்* வியந்து துதி செய்யப் பெண் உரு ஆகி*
அஞ்சுவை அமுதம் அன்று அளித்தானைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே* 2.3.3

வஞ்சனை செய்யத் தாய் உரு ஆகி - விசமத்தனம் செய்ய யசோதை உருவம் ஆகி
வந்த பேய் அலறி மண் சேர - வந்த பேய் அலறி தரையில் விழும்படி
நஞ்சு அமர் முலை ஊடு - விஷம் தடவிய முலை வழியாக
உயிர் செக உண்ட நாதனைத் - உயிர் ஒழியும்படி (முலை பாலை) உண்ட இறைவனைத்
தானவர் கூற்றை - அரக்கர் எமனை
விஞ்சை வானவர் சாரணர் சித்தர் - மேலோங்கிய வானவர் முனிவர் சித்தர்
வியந்து துதி செய்யப் பெண் உரு ஆகி - ஆச்சர்யபட்டு வழிபாடு செய்ய பெண் உருவம் ஆகி
அஞ்சுவை அமுதம் அன்று அளித்தானைத் - இனிய சுவை அமுதம் அன்று அளித்தவனைத்
திருவல்லிக்கேணிக் கண்டேனே - திருவல்லிக்கேணியில் கண்டேனே .

விளக்கம்:-
(கம்சன் கண்ணனை அழிக்க அனுப்பிய அரக்கி) நம்ப செய்து (கண்ணனுக்கு தீமை) செய்ய ) அம்மா (யசோதை) போல உருவம் மாறி வந்த பேய் (பூதனை ஆ! என்று பயங்கரமாக) அலறி மண்ணை கவ்வுமாறு , விஷம் தடவிய (மார்பக) முலை வழியாக (நம்ம செல்ல குழந்தை கண்ணன் பாலை குடிப்பது போல அந்த பேயின் உயிர் ஒழிய (முலை பாலை) உண்ட இறைவனை, அரக்கர்களின் எமனை,மேலோங்கிய வானவர், முனிவர், சித்தர் (போன்றோர்) வியந்து (போற்றி) வழிபாடு செய்யும் (நம் பெருமாள் அன்று தீயவர்களான அசுரர்களுக்கு அமிர்தம் சேராமல் தேவர்களுக்கு கிடைக்க) பெண் போல (மோகினி) வடிவம் கொண்டு (அரக்கர்களை மயக்கி தேவர்களுக்கு) இனிய சுவை உடைய அமுதம் அன்று அளித்தவனை, திருவல்லிக்கேணியில் கண்டேனே. (Hey Hey jolly)


பாசுர விளக்கத்திற்கு ஒரு கதை பார்ப்போமா!

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே அடிக்கடி போர் நடந்து கொண்டிருந்தது. அதனால் தங்கள் குலம் அழிந்துவிடுமோ என்று கவலைப்பட்ட தேவர்கள் தங்கள் குறையை பிரம்ம தேவரிடம் சென்று முறையிட்டனர், அவரும் தேவர்களை திருமாலிடம் அழைத்துச் சென்றார். பாற்கடலைக் கடைந்து அதிலிருந்து வரும் அமிர்தத்தை உண்டால் மரணமில்லா பெருவாழ்வு எய்தலாம் என்று பெருமாள் கூற பாற்கடலை கடைந்து தேவர்களும் அசுரர்களும் எம் பெருமாளின் துணையோடு அமிர்தம் எடுத்தனர்


1071
இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த* எழில் விழவில் பழ நடை செய்*
மந்திர விதியில் பூசனை பெறாது* மழை பொழிந்திடத் தளர்ந்து* ஆயர்
எந்தம்மோடு இன ஆநிரை தளராமல்* எம்பெருமான் அருள் என்ன*
அந்தம் இல் வரையால் மழை தடுத்தானைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே*2.3.4

இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த - இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த
எழில் விழவில் பழ நடை செய் - அழகான விழாவில் பழைய நடை முறைப்படி செய்ய
வேண்டிய
மந்திர விதியில் பூசனை பெறாது - மந்திரங்கள் சொல்லி விதிப்படி பூஜை பெறாது
மழை பொழிந்திடத் தளர்ந்து - மழை பொழிந்திட துன்பப்பட்டு
ஆயர் எந்தம்மோடு இன ஆநிரை தளராமல் - ஆயர் எங்களோடு கூட்டமாக உள்ள பசுக்களும் துன்பபடாமல்
எம்பெருமான் அருள் என்ன - எம்பெருமானே அருள் என்று வேண்ட
அந்தம் இல் வரையால் மழை தடுத்தானைத் - அளவில்லாத (மிக பெரிய) மலையால் மழை தடுத்தவனைத்
திருவல்லிக்கேணிக் கண்டேனே - திருவல்லிக்கேணியில் கண்டேனே.

விளக்கம்:-
இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த அழகான விழாவில் பழைய நடை (முறைப்படி) செய்யும் மந்திரங்கள் (ஓதி) விதி (முறைப்படி செய்ய வேண்டிய பூஜைகளை நம்
செல்ல கண்ணன் இந்திரனுக்கு செய்யாமல் கோவர்த்தன மலைக்கு செய்யுங்கள் என்று கூற இதனால் இந்திரன்) பூஜை பெறாமல் (கண்ணன் மற்றும் ஆயர்மக்கள் மேல் மிகுந்த கோபம் கொண்டு ஆலங்கட்டி) மழையை பொழிந்திட (இதனால் மிகவும்) துன்பப்பட்ட ஆயர் (மக்கள்) எங்களோடு கூட்டம் கூட்டமாக (இருக்கும்) பசுக்களையும் துன்பபடாமல் எம்பெருமானே அருள் (என்று) சொல்ல அளவில்லாத மிக பெரிய (கோவர்த்தன மலையை)ஒரு குடை போல Easyaa தூக்கி) மலையால் மழை தடுத்தானை திருவல்லிகேணியில் கண்டேனே. (Hey Hey . Jolly)

பாசுர விளக்கத்திற்கு ஒரு கதை பார்ப்போமா!
ஆயர்பாடி, இந்தியாவில் உத்திர பிரதேச மாவட்டத்தில் டில்லி ஆக்ரா ரயில் பாதையில் மதுராவிலிருந்து 12 Km தொலைவில் உள்ளது. பரம்பொருள் இறைவனான ஸ்ரீமன் நாராயணன் கிருஷ்ணா அவதாரத்தில் வாழ்ந்த இடம் ஆயர்பாடி . ஒரு சமயம் ஆயர்பாடி மக்கள் பழைய நடைமுறைப்படி பலவகையான படையல்களிட்டு இந்திரனைச் சிறப்பு செய்யும் இந்திர விழாவினை, செய்ய வரும்போது, தேவர்களின் தலைவன் என்ற கர்வம் இந்திரனுக்கு இருந்த படியால் நம் அன்பு கண்ணன் வீணாக இந்திரனுக்கு பூஜை செய்யாதீர்கள். அதற்க்கு பதில் பசுக்கள் பசிதீர புல் மேயும் கோவர்த்தன மலைக்குச் செய்யுமாறு ஆயர்களிடம் கூறினான். ஆயர்களும் அவ்வண்ணமே செய்ய,கோபமுற்ற இந்திரன், ஆயர்ப்பாடியில் பயங்கர ஆலங்கட்டி மழையை பொழிய செய்தான். மழையிலிருந்து ஆயர்களையும், பசு க்களையும் காக்க, சிறுவனான கண்ணன், கோவர்த்தன மலையையே குடையாய்ப் பிடித்து, அதனடியில் அனைவரையும் நிற்க வைத்து, ஆலங்கட்டி மழையிலிருந்து அனைவரையும் காத்தான். இறுதியாக, இந்திரன் தன் தோல்வியை ஒப்புக் கொண்டு, இறைவனிடம் மன்னிப்புக் கேட்டான்.

1072
இன் துணைப் பதுமத்து அலர்மகள் தனக்கும் இன்பன்* நல் புவி தனக்கு இறைவன்*
தன் துணை ஆயர் பாவை நப்பின்னை தனக்கு இறை* மற்றையோர்க்கு எல்லாம்
வன் துணை* பஞ்ச பாண்டவர்க்காகி* வாய் உரை தூது சென்று இயங்கும்
என் துணை* எந்தை தந்தை தம்மானைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே* 2.3.5

இன் துணைப் - இனிய துணையான
பதுமத்து அலர்மகள் தனக்கும் இன்பன் - தாமரை மலர் மகள் அவளுக்கும் இன்பன்
நல் புவி தனக்கு இறைவன் - நல்ல பூமி அவளுக்கும் இறைவன்
தன் துணை - தனக்கு துணையான
ஆயர் பாவை நப்பின்னை தனக்கு இறை - ஆயர் பெண் நப்பின்னை அவளுக்கும் இறை
மற்றையோர்க்கு எல்லாம் வன் துணை - மற்றவர்களுக்கு எல்லாம் நீங்காத துணை
பஞ்ச பாண்டவர்க்காகி - பஞ்ச பாண்டவர்களுக்கு ஆகி
வாய் உரை தூது சென்று இயங்கும் - வாய் வார்த்தை தூது சென்று செயல்படும்
என் துணை - என் துணை
எந்தை தந்தை தம்மானைத் - என் அப்பாவுக்கு அப்பா வழிபட்ட இறைவனை
திருவல்லிக்கேணிக் கண்டேனே - திருவல்லிக்கேணியில் கண்டேனே

விளக்கம்:-
(தனக்கு) இனிய துணையான தாமரை மலரில் (பிறந்த) மகள் மகாலட்சுமிக்கும் இனிமையானவன், நல்ல (பொண்ணு பூமா தேவியான நம்) பூமிக்கும் இறைவன், தன்னையே துணையாக (உடைய) ஆயர் (குல பெண்ணும் கண்ணனின் மாமன் மகளும் ஆன) நப்பின்னைக்கும் இறைவன், மற்றுமுள்ள எல்லாருக்கும் என்றுமே நீங்காத துணையாய் (இருப்பவன் முன்பு கிருஷ்ணா அவதாரத்திலே தர்மன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் போன்ற ) பஞ்சபாண்டவர்களுக்காக வாய் வார்த்தை (சொல்ல) தூது சென்று செயல்பட்டவனும், எனக்கு துணையானவனும், என் அப்பாவுக்கு அப்பா (எங்கள் குலமே வழிபட்ட) இறைவனைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே. (Hey Hey Jolly)




1073
அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசர்க்கு இளையவன்* அணி இழையைச் சென்று*
எந்தமக்கு உரிமை செய் எனத் தரியாது* எம் பெருமான் அருள் என்ன*
சந்தம் அல் குழலாள் அலக்கண் நூற்றவர் தம்* பெண்டிரும் எய்தி நூல் இழப்ப*
இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே* 2.3.6

அந்தகன் சிறுவன் - குருடன் (மகன்) துரியோதனன்
அரசர் தம அரசர்க்கு - ராஜாதி ராஜாவுக்கு
இளையவன் - தம்பி (துச்சாசனன்)
அணி இழையை - அழகிய ஆபரணம் அணிந்தவளை
எந்தமக்கு உரிமை செய் எனத் - எங்களுக்கு அடிமை செய் என கூற
தரியாது - (அதனை) பொறுக்க முடியாமல்
எம்பெருமான் அருள் என்ன - எம்பெருமானே அருள் என்று வேண்ட,
சந்தம் அல் குழலாள் - அழகிய கறுத்த கூந்தலை உடையவள்
அலக்கண் - மனவருத்தத்தை
நூற்றவர் தம் - (கௌரவர்களான) நூறு பேரின்
பெண்டிரும் எய்தி நூல் இழப்ப - மனைவிகளும் அடைந்து தாலி இழக்க
இந்திரன் சிறுவன் - இந்திரன் மகன் (அர்ச்சுனன்)
தேர் முன் நின்றானை - தேர் முன் நின்றவனை
திருவல்லிக்கேணிக் கண்டேனே - திருவல்லிக்கேணியில் கண்டேனே

விளக்கம்:-
குருடன் (திருதராஷ்டினின்) மகன் ராஜாதி ராஜாவான துரியோதனன் தம்பி (துச்சாசனன்) அழகான ஆபரணம் (அணிந்த பெண் திரௌபதியிடம்) சென்று எங்களுக்கு அடிமை செய் என (கூற திரௌபதி இதை) பொறுக்க முடியாமல் எம்பெருமானே அருள் (என்று) வேண்ட, அழகிய கறுத்த கூந்தலையுடைய (திரௌபதியின்) மன வருத்தம் (போக்கிய எம்பெருமான், பின்பு கௌரவர்ளுக்கும் பாண்டவர்களுக்கும் நடந்த போரில் கௌரவர்களான) நூறு பேரின் மனைவிகளும் (துன்பம்) அடைந்து தாலியை இழக்குமாறு (கௌரவர்களை அழிக்க எம்பெருமான்) இந்திரன் மகன் (அர்ச்சுனன் தேர் முன் (தேர் ஓட்டுபவனாக தில்லா) நின்றவனை திருவல்லிக்கேணியில் கண்டேனே. (Hey Hey Jolly)


பாசுர விளக்கத்திற்கு ஒரு கதை பார்ப்போமா!

கௌரவர்களின் தந்தையான குருடன் திருதராஷ்டினின் மகன் துரியோதனன். அவன் தம்பி துச்சாதனன் திருதராஷ்டினின் தம்பி பாண்டு மன்னனின் மனைவி குந்தியின் மகனான தருமர் அஸ்தினாபுரத்தில் துரியோதனிடம் சூதாட்டம் ஆடிய போது அனைத்தையும் இழந்தார். தன் மனைவி திரௌபதியையும் பணயம் வைத்து தோற்றார். திரௌபதி அவர்களுக்கு அடிமை ஆனதால் துச்சாதனன் திரௌபதியை அழைத்து நடு சபையில் புடவையை உரிக்க திரௌபதி என்ன செய்வது என்று தெரியாமல் கோவிந்தா! எனக்கு அருள் புரிவாய் என்று கைகளை தலை மேல் கூப்பி வேண்ட உடனே கண்ணன் திரௌபதியின் வருத்தம் போக்கி துச்சாதனன் புடவையை உரிக்க உரிக்க மீண்டும் மீண்டும் கண்ணன் அருளால் புடவை வளர்ந்து கொண்டே இருக்க துச்சாதனன் முடியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்தான். திரௌபதியின் துன்பத்தை நீக்கி மானம் காத்தான் நம் ஆனந்த கண்ணன்.

இந்திரன் சிறுவன் - இந்திரன் மகன் அர்ச்சுனன் (இதை பற்றிய ஒரு சிறு கதை)

முன்பு பாண்டு மன்னனுக்கு மனைவி குந்தியிடம் சேரகூடாது என்ற சாபம் இருக்கிறபடியால் துர்வாச முனிவர் உபதேசித்த மந்திர மகிமையால் எமனால் தருமரையும், வாயு தேவரால் பீமனையும், தேவர்களின் தலைவன் இந்திரனால் அர்ச்சுனனையும் பெற்றாள். என்பது புராண வரலாறு

1074
பரதனும் தம்பி சத்துருக்கனனும்* இலக்குமனோடு மைதிலியும்*
இரவும் நன் பகலும் துதி செய்ய நின்ற* இராவண அந்தகனை எம்மானை*
குரவமே கமழும் குளிர் பொழில் ஊடு* குயிலோடு மயில்கள் நின்றால*
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்து அறியாத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே*2.3.7


பரதனும் தம்பி சத்துருக்கனனும் - *பரதனும் (அவன்) தம்பி சத்துருக்கனும்
இலக்குமனோடு மைதிலியும்*- லட்சுமனோடு ஸ்ரீ ராமர் மனைவி சீதையும்
இரவும் நன் பகலும் துதி செய்ய நின்ற - இரவும் பகலும் இடைவிடாது போற்றி புகழ்ந்து வழிபட நின்ற
இராவண அந்தகனை எம்மானை - இராவணனுக்கு எமனான எம் பெருமானை
குரவமே கமழும் குளிர் பொழில் ஊடு - குரவ மலர்கள் நறுமணம் வீசும் குளிர்ந்த சோலைகளிலே
குயிலோடு மயில்கள் நின்று ஆல - - குயில்களோடு மயில்கள் நின்று ஆரவாரம் செய்ய
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்து அறியாத் - சூரிய ஒலி கதிர்கள் நுழைய முடியாத
திருவல்லிக்கேணிக் கண்டேனே - திருவல்லிக்கேணியில் கண்டேனே

விளக்கம்:-
பரதனும் அவன் தம்பி சத்துருக்கனனும், இலட்சுமனோடு ஸ்ரீ ராமரின் மனைவி சீதையும் இரவும் பகலும் இடைவிடாமல் போற்றி புகழ்ந்து வழிபட நின்ற இராவணனுக்கு எமனான எம் பெருமானை, குரவ மலர்கள் கம கமன்னு நல்ல வாசம் வீசும் (குளிர்ந்த மரம் செடிகள் சூழ்ந்த) சோலைகளுக்கு நடுவில் குயில்களோடு சேர்ந்து மயில்கள் நின்று ஆரவாரம் செய்ய, (சுற்றிலும் சோலைகள் சூழ்ந்து இருப்பதால்) சூரிய ஒலி கதிர்கள் நுழைய முடியாத(அழகான) திருவல்லிக்கேணியில் கண்டேனே. . (Hey Hey Jolly)

பாசுர விளக்கத்திற்கு ஒரு கதை
தசரத‌னி‌ன் முதல் மனைவி கோசலை ஆவாள். அவள் வயிற்றிலிருந்து திருமால் இராமராகப் பிறந்தார். இரண்டாம் மனைவி கைகேயி வயிற்றில் பரதன் பிறந்தான். மூன்றாம் மனைவி சுமத்திரை வயிற்றில் இலக்குவன், சத்துருக்கன் என்ற இருவரும் பிறந்தனர்.

1075
பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன்* வாயில் ஓர் ஆயிரம் நாமம்*
ஒள்ளிய ஆகிப் போத ஆங்கு அதனுக்கு* ஒன்றும் ஓர் பொறுப்பு இலன் ஆகி*
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண்ப் புடைப்ப* பிறை எயிற்று அனல் விழி பேழ் வாய்*
தெள்ளிய சிங்கம் ஆகிய தேவைத்* திருவல்லிக்கேணி கண்டேன்*.2.3.8

பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன் - பள்ளியில் கல்வி கற்று வந்த தன் மகன்
வாயில் ஓர் ஆயிரம் நாமம் - வாயில் ஓர் ஆயிரம் பெருமாள் பெயர்கள்
ஒள்ளிய ஆகிப் போத ஆங்கு அதனுக்கு - ஒளியுடன் ஆகி ஞானத்தால் (பிரகலாதன் கூற) அவ்விடத்தில் அதை
ஒன்றும் ஓர் பொறுப்பு இலன் ஆகி - சிறிதளவும் பொறுக்க இயலாதவன் ஆகி
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண்ப் படைப்ப - மகனை சீறி மிகவும் கோபப்பட்டு தூணை அடிக்க
பிறை எயிற்று அனல் விழி பேழ் வாய் - கூரான வளைந்த பற்களும், நெருப்பு போன்ற
கண்களும், பெரிய வாயும் (உடைய)
தெள்ளிய சிங்கம் ஆகிய தேவைத் - தெளிந்த தூய சிங்க தேவனை
திருவல்லிக்கேணி கண்டேன். - திருவல்லிக்கேணியில் கண்டேனே.

விளக்கம்:-

ஸ்கூலுக்கு சென்று கற்றுக்கொண்டு வந்த தன் மகன் (பிரகலாதன்) வாயில் ஆயிரம் பெருமாள் பெயர்கள் ஒளியுடன் அழகாக ஞானத்தால் (கூறுவதை பார்த்து) அந்த நேரம் சிறிதும் பொறுக்க இயலாதவன் ஆகி தன் மகனை சீறி வெகுண்டு (நாராயணன் எங்கே இருக்கிறான்டா என்று கேட்க, எங்கும் இருப்பான் என்று பிரகலாதன் கூற, எங்கே இந்த தூணில் காட்டுடா பார்ப்போம் என்று) தூணை அடிக்க, வளைந்த கூரான பற்களும், நெருப்பு போன்ற கண்களும், பெரிய வாயும் (உடைய) தெளிந்த தூய்மையான நரசிங்கம் ஆகிய (என் தேவாதி) தேவனை, திருவல்லிக்கேணியில் கண்டேனே. . (Hey Hey Jolly)


பாசுர விளக்கத்திற்கு ஒரு கதை
இரணியன் என்னும் அரக்கன், தன்னையே எல்லோரும் கடவுள் என தொழ வேண்டும் என்று எண்ணினான். இரணியனின் மகன் பிரகலாதன், அதை எதிர்த்தான். பிரகலாதன் ஸ்ரீமன் நாராயணன் ஒருவரையே கடவுள் என்று போற்றி, பூஜித்து வந்தான். இதையறிந்த இரணியன், மகனென்றும் பாராமல் பிரகலாதனை பல வகையில் துன்புறுத்தி, தன்னையே கடவுள் என பூஜிக்கும்படி வற்புறுத்தினான்.

ஒரு சமயத்தில் பள்ளி பாடத்தை முடித்து வந்த மகன் ஸ்ரீ ஹரி நாமம் சொல்வதை பார்த்த பிரகலாதன் மிகுந்த கோபம் கொண்டு எங்கேடா இருக்கிறான் ஹரி என்று கேட்க, அவன் எங்கும் இருப்பான் என்று பிரகலாதன் கூற, எங்கே இந்த தூணில் இருப்பான என்று எதேச்சையாக இரணியன் கேட்டு தூணை தட்ட, அங்கே அப்பொழுதே பரம்பொருளான ஸ்ரீமன் நாரயணன் சிம்ம முகமும் மானிட உருவமும் கலந்த நரசிம்ம உருவத்தில் தூணை பிளந்து வந்து இரணியனை அழித்தார். பிரகலாதனை காத்தார். பிரகலாதன் பக்தியை போன்றே நாமும் ஸ்ரீமன் நாராயணின் மேல் பக்தியோடு இருக்க ஸ்ரீமன் நாராயணனை வேண்டுவோம். அவர் நமக்கு நிச்சயம் தருவார்.



1076
மீன் அமர் பொய்கை நாள் மலர் கொய்வான்* வேட்கையினோடு சென்று இழிந்த
கான் அமர் வேழம் கை எடுத்து அலறக்* கரா அதன் காலினைக் கதுவ*
ஆனையின் துயரம் தீரப் புள் ஊர்ந்து*சென்று நின்று ஆழி தொட்டானை*
தேன் அமர் சோலை மாட மாமயிலைத்*திருவல்லிக்கேணிக் கண்டேனே*2.3.9


மீன் அமர் பொய்கை - மீன்கள் இருக்கும் குளத்தில்
நாள் மலர் கொய்வான் வேட்கையினோடு - நாள்தோறும் மலர் பரிப்பவனான (கஜேந்திர யானை ஒரு நாள்) ஆசையோடு
சென்று இழிந்த - போய் (குளத்தில்) இறங்கிய
கான் அமர் வேழம் கை எடுத்து அலறக் - காட்டில் இருக்கும் கஜேந்திர யானை தும்பிக்கை எடுத்து அலறும்படி
கரா அதன் காலினைக் கதுவ - முதலை அதன் காலினை கவ்வ
ஆனையின் துயரம் தீரப் புள் ஊர்ந்து - யானையின் துயரம் தீர்க்க கருட வாகனத்தில்
சென்று நின்று ஆழி தொட்டானை - சென்று நின்று (முதலை அழியும் படி) சக்கரத்தை செலுத்தியவனை
தேன் அமர் சோலை மாட மாமயிலைத் - தேன் இருக்கும் சோலைகளை உடைய மாடங்கள் சூழ்ந்த திருமயிலைத்
திருவல்லிக்கேணிக் கண்டேனே - திருவல்லிக்கேணியில் கண்டேனே.

விளக்கம்:-
மீன்கள் இருக்கும் குளத்தில் நாள்தோறும் புதிய மலர்களை பறிப்பவன் (கஜேந்திர யானை) , ஆசையோடு சென்று (பூ பறிக்க ஒரு நாள் குளத்தில்) இறங்க, காட்டில் வாழும் (அந்த கஜேந்திர) யானை தும்பிக்கை தூக்கி அலறும்படி, முதலை அதன் காலினை கவ்வ,
யானையின் துயரம் தீர்க்க கருட வாகனத்தில் சென்று (அங்கே) நின்று (முதலை அழியும் படி) சக்கரத்தை செலுத்தியவனை, தேன் (நிறைந்திருக்கும்) சோலைகளும், (விளக்கேற்றும் அழகான) மாடங்களும் (உள்ள) திரு மயிலை (அருகில் உள்ள) திருவல்லிக்கேணியில் கண்டேனே. . (Hey Hey Jolly)

பாசுர விளக்கத்திற்கு ஒரு கதை
பெருமாள் மீது பக்தியுடைய யானை ஒன்று தினமும் குளத்தில் இருந்து தாமரை மலர்களை பறித்து பெருமாளுக்கு சமர்பித்து கொண்டு இருந்தது. ஒரு சமயம் குளத்தில் இறங்கி தாமரையை பறித்த போது முதலை யானையின் காலை பிடிச்சுக்கிச்சி. உடனே யானை தன் உடலை பற்றி சிறிதும் கவலை படாமல் எப்படியாவது தாமரை மலரை பெருமாளுக்கு சமர்பிக்க வேண்டுமே என்ற ஏக்கத்தில் “ஆதி மூலமே” என்று நினைத்து பிளிறிய போது பெருமாள் கருட வாகனத்தில் விரைந்து வந்து முதலையை தன் சக்கரத்தால் அழித்து யானையை காப்பாற்றினார். யானைக்கு மறு பிறவி இல்லாத மோட்சத்தை பெருமாள் அருளினார். கஜேந்திர மோட்சம்

1077
மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும்* மாட மாளிகையும் மண்டபமும்*
தென்னன் தொண்டையர்க் கோன் செய்த நல் மயிலைத்*திருவல்லிக்கேணி நின்றானை* கன்னி நல் மாட மங்கையர் தலைவன்* காமரு சீர்க் கலிகன்றி*
சொன்ன சொல் மாலை பத்து உடன் வல்லார்* சுகம் இனிது ஆள்வர் வான் உலகே* 2.3.10


மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும் - சிறப்புவாய்ந்த குளிர்ந்த மரம் செடிகளும், நீர்நிலைகளும், வெளிப்புற சுற்று சுவர்களும்
மாட மாளிகையும் மண்டபமும் - மாட மாளிகையும், மண்டபமும் (இருக்கும்படி)
தென்னன் தொண்டையர்க் கோன் செய்த - பாண்டிய மன்னன் தொண்டைமான் சக்ரவர்த்தி செய்த
நல் மயிலைத் திருவல்லிக்கேணி நின்றானை - அழகான மயிலாப்பூர் (அருகில் உள்ள) திருவல்லிக்கேணியில் நின்றவனை (வேங்கட கிருஷ்ணனான பார்த்தசாரதியை)
கன்னி நல் மாட மங்கையர் தலைவன் - புதிய அழகான மாடங்கள் உடைய திருமங்கை நாட்டு தலைவன்
காமரு சீர்க் கலிகன்றி - திருமங்கை அழகு பெற்ற செய்யுளால்
சொன்ன சொல் மாலை பத்து உடன் வல்லார் - சொன்ன சொல் மாலை பத்துடன் (சொல்ல) வல்லவர்கள்
சுகம் இனிது ஆள்வர் வான் உலகே - இனிய சுகத்துடன் வான் உலகையே ஆள்வார்கள்.

விளக்கம்:-
சிறப்பு வாய்ந்த குளிர்ந்த (அழகான) மரம் செடிகளும், நீர் நிலைகளும், வெளிப்புற சுற்று சுவர்களும், மாட மாளிகையும், மண்டபமும், பாண்டிய மன்னன் தொண்டைமான் சக்ரவர்த்தி செய்த, அழகான மயிலாப்பூரின் (அருகில் உள்ள) திருவல்லிகேணியில் நின்றவனை (அழகான வேங்கட கிருஷ்ணனான பார்த்தசாரதியை) , புதிய் அழகான மாடங்கள் உடைய திருமங்கை நாட்டு மன்னன் திருமங்கையன் அழகு பெற்ற செய்யுளால் சொன்ன சொல்லால் (தொடுட்ட) மாலை பட்டுடன் (என்னை போலவே பெருமாள் மீது பாசத்துடன் சொல்ல) வல்லவர்கள், இனிய சுகத்துடன் வான் உலகையே ஆள்வார்கள்

திருவல்லிக்கேணி என் அன்பு ஸ்ரீ வேங்கட கிருஷ்ணா கோவில் வரலாறு

இந்த கோவிலில் வீற்றிருக்கும் பார்த்தசாரதி பெருமாள் ‌திரு‌முக‌த்‌தி‌ல் தழு‌ம்புக‌ள் இரு‌க்கு‌ம், மகாபாரத‌ப் போ‌ரி‌ல் அ‌ர்ஜூனனு‌க்கு தேரோ‌ட்டியாக வ‌ந்து, போ‌ரி‌ல் ஏற்ப‌ட்ட ‌விழு‌ப்பு‌ண்க‌‌ளி‌ன் தழு‌ம்புக‌ள்தான் அவை எ‌ன்று ஐதீகம். மேலு‌ம் ‌மீசையுட‌ன் உள்ள ‌கிருஷ‌்ண அவதாரமாகவும் இங்கு இருக்கிறார். மகாபாரத‌த்‌தி‌ல் தேரோ‌ட்டியாக (சார‌தி) வ‌ந்து அ‌ர்‌ஜூனனு‌க்கு (பா‌ர்‌த்தா) அ‌றிவுரை சொ‌ன்ன ‌கிரு‌ஷ‌்ண‌ரே (அவதாரம்) பா‌ர்‌த்தசார‌தி என்று அழைக்கப்பட்டார்.

மூலவரின் பெயர் வேங்கட கிருஷ்ணன். வலப் புறத்தில் ருக்மணி பிராட்டியாரும், வரதமுத்திரையுடன் கையில் கலப்பை ஏந்திய அண்ணன் பலராமனும், இடப்புறத்தில் தம்பி சாத்யகி, மகன் ப்ரத்யும்னன், பேரன் அநிருத்தன் ஆகியோரையும் கொண்டு மூலவர் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுகத்துடன் வீற்றிருக்கிறார். இத்திருத்தலத்தில் பா‌ர்‌த்தசார‌தி‌க்கு‌ம், நர‌சி‌ம்மரு‌க்கு‌ம் த‌னி‌த்‌த‌னி கொடிமர‌ங்க‌ள் அமை‌க்க‌ப்ப‌‌ட்டிருக்கின்றன.
பா‌ர்‌த்தசார‌தி ச‌‌ன்ன‌தி‌க்கு வலது புற‌த்‌தி‌ல் வேதவ‌ல்‌லி‌த் தாயா‌‌ரி‌ன் ச‌ந்ந‌தி அமை‌ந்து‌ள்ளது.

வேதவ‌ல்‌லி‌த் தாயா‌ர் ச‌ந்‌நி‌தி‌க்கு ‌பி‌ன்புற‌த்‌தி‌ல் ‌கிழ‌க்கு நோ‌க்‌கியபடி கஜே‌ந்‌திர வரதராஜ சுவா‌மிக‌ளி‌ன் ச‌ந்‌நி‌தி அமை‌ந்து‌ள்ளது. கஜே‌ந்‌திரா எ‌ன்ற யானை ‌நீ‌ர்‌நிலை ஒ‌ன்‌றி‌ல் த‌ண்‌ணீ‌ர் குடி‌க்க‌ச் செ‌ன்றபோது அ‌ங்‌கிரு‌ந்த முதலை‌யி‌ன் வா‌யி‌ல் ச‌ி‌க்‌கி‌க் கொ‌ண்டது, அப்போது அந்த யானை தனது உ‌யிரை‌க் கா‌ப்பா‌ற்றுமாறு பெருமாளை நினைத்து வே‌ண்டியது. அ‌ப்போது உடனடியாக கருட‌னி‌ல் வ‌ந்த பெருமா‌ள் முத‌லை‌யிட‌ம் சிக்கியிருந்த கஜே‌ந்‌திரனை ‌‌மீ‌ட்டா‌ர், யானை‌க்கு அரு‌ள் பா‌லி‌த்த ‌நிலை‌யி‌ல் இ‌ந்த ச‌ந்‌‌நி‌தி‌யி‌ல் கஜே‌ந்‌திர வரதராஜ சுவா‌மிகளாக வீற்றிருக்கிறார்.

பா‌‌ர்‌த்தசார‌தி ச‌ந்‌‌‌நி‌தி‌யி‌ன் இடது புர‌த்‌தி‌ல் ஆ‌ண்டா‌‌ள் ச‌ந்‌‌நி‌தி அமை‌ந்து‌ள்ளது. இவர் பூதே‌வி எ‌ன்று‌ம் அழை‌க்க‌ப்படு‌கிறா‌ர். இந்த கோவில் தீர்த்தத்தின் பெயர் கைரவினி, இ‌தி‌ல் இந்திர, சோம, மீன, அக்னி, விஷ்ணு ஆ‌‌கிய தீர்த்தங்கள் அடங்கியுள்ளன. இத்திருக்குளத்தில் அல்லி பூக்கள் அதிகமாக காணப்பட்டதால் அல்லிக்கேணி என்ற பெயரும் ஏற்பட்டது.


திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள அருள்மிகு பார்த்தசாரதி பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இ‌ந்த கோ‌விலை பிருந்தாரண்ய ஸ்தலம் பஞ்ச வீரத்தலம் என்றும் அழைக்கப்படுகிறது. வியாசரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆத்ரேயரால் வணங்கப்பட்ட திருத்தலமாகு‌ம். திருவல்லிக்கேணி இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இருக்கும் சென்னை மெரீனா கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளது.

இ‌‌த்‌திரு‌த்தல‌த்‌தி‌ல் பிருகு முனிவர், மார்க்கண்டேயர், மதுமான் மகரிஷி, சப்தரோம அத்ரி மகரிஷி, ஜாபாலி மகரிஷி, தொண்டைமான் சுமதி மன்னன் என பலருக்கு இறைவன் காட்சியளித்திருக்கிறார். திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமாகு‌ம்





திருவல்லிக்கேணி என் அன்பு ஸ்ரீ வேங்கட கிருஷ்ணா மலர் பாதங்களுக்கு சமர்ப்பணம்:

Thursday, December 2, 2010

வெண்ணை (திருடி) உண்டவன் இவன் என்று பெண்களால் (கேலி) பேச நின்ற எம்பெருமான் திருவள்ளூரில் படுத்து கொண்டிருக்கிறானே.

மூலவர்: எவ்வுள்கிடந்தான் (ஸ்ரீ வீரராகவ பெருமாள்)

பெரிய திருமொழி

1058
காசை ஆடை மூடி ஓடிக்* காதல் செய்தான் அவன் ஊர்*
நாசம் ஆக நம்ப வல்ல* நம்பி நம் பெருமான்*
வேயின் அன்ன தோள் மடவார்* வெண்ணெய் உண்டான் இவன் என்று*
ஏச நின்ற எம் பெருமான்* எவ்வுள் கிடந்தானே.2.2.1


விளக்கம்:-
(எம் செல்லமான அண்ணன் ஸ்ரீராமரின் மனைவியான சீதையை இராவணன் கடத்தி சென்று) காவி ஆடையை மூடி (கொண்டு மறைந்து ஒளிந்து) ஓடி காதல் செய்தான். அவனோட ஊரான (இலங்கையை) நாசம் ஆகும்படி (அழித்த என்றுமே நாம்) நம்ப தகுந்த இறைவனான நம்ம பெருமாள் (முன்பு கண்ணனாக அவதாரம் எடுத்து சிறிய வயதில் லூட்டி அடிச்சிக்கிட்டு அங்கிருப்பவர்களின் வீடுகளில் புகுந்து வெண்ணையை திருடி உண்டான். இதை பார்த்த) மூங்கில் போல (வழ வழன்னு அழகா இருக்கிற) அன்ன பறவை (போல மென்மையான தோள்களையுடைய இளமையான பொண்ணுங்க! (தோ இவன்தான்) வெண்ணை (திருடி) உண்டான் என்று (கேலி) பேச நின்ற எம்பெருமான் (திருவள்ளூர் என்ற திரு) எவ்வுளில் படுத்து கொண்டிருக்கிறானே.



1059
தையலாள் மேல் காதல் செய்த* தானவன் வாள் அரக்கன்*
பொய் இலாத பொன் முடிகள்* ஒன்பதோடு ஒன்றும்* அன்று
செய்த வெம்போர் தன்னில்* அங்கு ஓர் செஞ்சரத்தால் உருள*
எய்த எந்தை எம்பெருமான்* எவ்வுள் கிடந்தானே*2.2.2


விளக்கம்:-
(அழகான) பெண்ணான (சீதையின்) மேல் காதல் செய்த அசுரனும், (கையிலே கூரான) கத்தியை (வைத்திருக்கும்) அரக்கனுமான (இராவணனின்) உண்மையான (சுத்த) பொன்னால் (செய்யப்பட்ட கிரீடத்தை வைத்திருக்கும் அவனது) பத்து தலைகளையும் , முன்பு செய்தகொடிய போரில் (எங்க அண்ணன் ) இராமர் (சென்று) அங்கு ஒரே ஒரு
(அனல் பறக்கும்) சிவந்த அம்பினால் (அவனது பத்து தலைகளும் அறுத்து கீழே தரையில் கோலி உருட்டுவது போல) உருள விட்ட என் தந்தை எம்பெருமாள் (திருவள்ளூர் என்ற திரு) எவ்வுளில் படுத்து கொண்டிருக்கிறானே.

1060
முன் ஓர் தூது* வானரத்தின் வாயில் மொழிந்து* அரக்கன்
மன் ஊர் தன்னை* வாளியினால் மாள முனிந்து* அவனே
பின் ஓர் தூது* ஆகி மன்னருக்கு ஆகிப் பெரு நிலத்தார்*
இன்னார் தூதன் என நின்றான்* எவ்வுள் கிடந்தானே*2.2.3

விளக்கம்:-
முன்பு ஒரு செய்தியை ஆஞ்சனேயரிடம் கூறி (இராவணனிடம் தெரிவித்து விட்டு வருமாறு தூது அனுப்பியவனும்) , அரக்கன் (இராவணனின்) சிறந்த ஊரான (இலங்கையை நச் நச்ன்னு கூரான) அம்பினால் கோபப்பட்டு அழித்த (எங்கள் அன்பு அண்ணன் இராமன்) அவனே பின்பு ஓர் தூதனாகி, (அதாவது தருமன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் முதலான பஞ்ச பாண்டவ) மன்னருக்கு தூதனாகி, பெரும் நிலத்தை உடைய (செல்வந்தன் கொடுமைகாரன் அந்த) துரியோதனிடம் தான் பாண்டவர்களின் தூதன் என (கூறி) நின்றான் (என் அண்ணன் கண்ணன் திருவள்ளூர் என்ற திரு) எவ்வுளில் படுத்து கொண்டிருக்கிறானே.

1061
பந்து அணைந்த மெல் விரலாள்* பாவை தன் காரணத்தால்*
வெந்திறல் ஏறு ஏழும் வென்ற* வேந்தன் விரி புகழ் சேர்*
நந்தன் மைந்தன் ஆக ஆகும்* நம்பி நம் பெருமான்*
எந்தை தந்தை தம் பெருமான்* எவ்வுள் கிடந்தானே*2.2.4

பாசுர விளக்கத்திற்கு முன் கண்ணனின் மாமன் மகள்
அழகான பொண்ணு நப்பின்னை பற்றி தெரிந்து கொள்ளலாமா
!:__

கண்ணனின் மாமன் மகள் நப்பின்னை. மாமன் கும்பன் ஒரு நிபந்தனை வைத்தான். அவனிடம் ஏழு முரட்டுக் காளைகள் இருந்தன. இவற்றை அடக்குபவருக்கே தன் மகள் மாலை சூட்டுவாள் என்று சொன்னான். இதை அறிந்த கண்ணன் நப்பின்னையை திருமணம் செய்ய விரும்பி ஏழு முரட்டு எருதுகளை அடக்கி நப்பின்னையைக் கைப்பிடித்தான். நப்பின்னை - கடல்தாயின் அம்சம் - நீளா தேவி

இன்னொரு கதையும் பார்க்கலாமே பாசுர விளக்கத்திற்கு முன், கண்ணன் நந்த கோபரின் வளர்ப்பு மகன் ஆனது எப்படி?
மதுரா நகரத்தின் அரசனான கம்சன் தன் தங்கையான தேவகிக்கு வயது வந்தவுடன் யதுகுலத்தவரான வசுதேவருக்கு அவளை மணமுடித்தான். திருமணம் முடிந்து தானே மணமக்கள் இருவரையும் தேரில் வைத்து மதுரா நகரின் சாலைகளில் ஊர்வலமாக அழைத்துச் சென்றான். அப்போது திடீரென கம்சனின் செவிகளில், எந்தத் தங்கையை அரசன் ஊர்வலமாகக் கொண்டு செல்கின்றானோ, அதே தங்கையின் வயிற்றில் பிறக்கக்கூடிய எட்டாவது குழந்தை அரக்க சுபாவம் கொண்ட அந்த அரசனை கொல்லப் போகின்றது எனும் வார்த்தைகள் ஒலித்தன. அதைக் கேட்ட அரசன், தங்கை என்றும் பாராமல் உடனே தேவகியைக் கொல்ல முற்பட்டான். வசுதேவர், பிறக்கும் குழந்தைகளை உனக்கே தந்துவிடுகிறேன் ஆனால் என் மனைவியை ஒன்றும் செய்துவிடாதே, எனக் கம்சனிடம், கெஞ்சினார். அதற்கு மனம் இளகிய கம்சன், அவர்கள் இருவரையும் கொல்லவில்லை ஆனால் அதற்கு பதிலாக அவர்களைச் சிறையில் அடைத்து வைத்தான். குழந்தைகள் பிறக்கப் பிறக்க அவற்றை ஒவ்வொன்றாக கொல்லவும் செய்தான். பல ஆண்டுகளாக இது தொடர தேவகி எட்டாவதாக ஒரு ஆண் குழந்தையை பெற்றாள். இந்த குழந்தையும் கம்சனால் கொல்லப்படும் என்று பயந்து தேவகியின் கணவர் வாசுதேவர் இரவோடு இரவாக பால கிருஷ்ணரை நந்த குலத்திற்கு எடுத்து சென்றார் வசுதேவர்.விழித்திருந்த காவலர்கள் அனைவரும் மாயையால் உறங்கினர்; சிறைக்கதவுகள் தானாக திறந்து கொண்டன. வெள்ளம் கரை புரண்டு பய்ந்த யமுனை நதி இரண்டாகப் பிளந்து வசுதேவருக்கு பாதை அமைத்தது. மழையிலிருந்து கண்ணனைக் காப்பாற்ற ஆதி சேஷன் வந்து குடைப் பிடித்தான்.பெண் குழந்தை பெற்ற யசோதை தன் உணர்வின்றி உறங்கிக் கொண்டிருந்தாள். கண்ணனை அங்கு விட்டு, வசு தேவர் அந்த பெண் குழந்தையை எடுத்து சிறை திரும்பி வந்தார்; சிறைக்கதவுகள் பூட்டிக் கொண்டன. மாயை விலகி காவலர்கள் விழித்துக் கொண்டனர். அந்தக் குழந்தை அழுதது. குழந்தை பிறந்த செய்தி மன்னனுக்கு பறந்தது. ஆசையுடன் வரவேண்டிய தாய் மாமன் ஆயதத்துடன் வந்தான். ஈவு இரக்கமில்லாமல் பெண் குழந்தை என்றும் பாராமல் கொல்ல முற்பட்டான் . குழந்தை அம்மன் சக்தி வடிவமாக வானத்தில் நின்று உன்னைக் கொல்லப்பிறந்தவன் கோகுலத்தில் உள்ளான் என்னும் உண்மை நிலை உணர்த்தி மறைந்தது. அதன் பின் யசோதையும் நந்தகோபரும் கண்ணனை தன் குழந்தை போல பாசமாக வளர்த்தனர்

விளக்கம்:-
பூ சுற்றி வைத்துள்ள பந்து வைத்திருப்பது (போல) மிருதுவான விரல்களை (உடைய அழகான) பெண் (நப்பின்னையை கல்யாணம் செஞ்சுக்க வேண்டும் என்ற) காரணத்தினால் கொடிய (மூர்க்க தனமான) ஏழு ஆண் எருதுகளை (அடக்கி) வென்ற ராசா (என் அண்ணன் கண்ணன்) எங்கும் பெரும் புகழ் சேரும் (கோகுலத்தில் வசிக்கும்) நந்தனின் (வளர்ப்பு) மகன் ஆக ஆகியவன் (என்றுமே) நம்ப தகுந்தவன் நம் பெருமான் என் தந்தைக்கு தந்தை (தொண்டு செய்து வழிபட்ட) தம் பெருமான் (திருவள்ளூர் என்ற திரு) எவ்வுளில் படுத்து கொண்டிருக்கிறானே.

1062
பாலன் ஆகி ஞாலம் ஏழும் உண்டு* பண்டு ஆல் இலை மேல்*
சால நாளும் பள்ளி கொள்ளும்* தாமரைக் கண்ணன் எண்ணில்*
நீலம் ஆர் வண்டு உண்டு வாழும்* நெய்தல் தண் கழனி*
ஏல நாறும் பைம் புறவில்* எவ்வுள் கிடந்தானே* 2.2.5

விளக்கம்:-
வெகு காலத்திற்கு முன்பு (பிரபஞ்சமே பெரிய அழிவுக்கு உண்டான போது பரம்பொருளான இறைவன் கண்ணன்) குழந்தை ஆகி ஏழு உலகங்களையும் (அப்படியே அல்வா சாப்பிடறா மாதிரி விழுங்கி) உண்டு ஆலமரத்து இலையின் மேலே வெகு நாட்களாக (தேவர் முனிவர் பிரபஞ்சம் என யாருக்கும் எந்த ஆபத்தும் நெருங்காதவாறு தனது வயிற்றுக்குள் சுமந்து கொண்டு ஹாயாக) படுத்து கொள்ளும், தாமரை (மலர் போல அழகான கண்களை உடைய என் அண்ணன்) கண்ணன் (அழகான) எண்ணற்ற நீல நிறமுடைய வண்டுகள் (தேனை) உண்டு வாழும் லில்லி மலர்கள் (சூழ்ந்த) குளிர்ந்த வயல்வெளிகளும்., நல்ல வாசனை உடைய பசுமையான பயிர்கள் வளர்ந்த ( நிலமும் உடைய திருவள்ளூர் என்ற திரு) எவ்வுளில் படுத்து கொண்டிருக்கிறானே.




1063
சோத்த நம்பி என்று* தொண்டர் மிண்டித் தொடர்ந்து அழைக்கும்*
ஆத்த நம்பி செங்கண் நம்பி* ஆகிலும் தேவர்க்கு எல்லாம்*
மூத்த நம்பி முக்கண் நம்பி என்று* முனிவர் தொழுது*
ஏத்தும்* நம்பி எம்பெருமான்* எவ்வுள் கிடந்தானே*2.2.6

விளக்கம்:-
(நல்ல குணங்களை கொண்டவரே) வணங்குகிறோம் இறைவா! என்று தொண்டர்கள் வலிமையுடன் தொடர்ந்து அழைக்கும், (அனைவரும்) விரும்பும் இறைவன், சிவந்த கண்களையுடைய (அழகான) இறைவன், (இப்படிபட்ட சிறப்புகளை உடையவன்
என் அண்ணன் கண்ணன்), ஆகிலும் (அவனை பார்த்து) தேவர்க்கு எல்லாம் மூத்த இறைவனே , மூன்று கண்களுடைய (சிவனுக்கும்) இறைவனே என்று முனிவர்கள் தொழுது போற்றும் இறைவன், எம் பெருமான் (திருவள்ளூர் என்ற திரு) எவ்வுளில் படுத்து கொண்டிருக்கிறானே.

1064
திங்கள் அப்பு வான் எரி கால் ஆகி* திசை முகனார்*
தங்கள் அப்பன் சாமி அப்பன்* பாகத்திருந்த* வண்டுண்
தொங்கல் அப்பு நீள் முடியான்* சூழ் கழல் சூட நின்ற*
எங்கள் அப்பன் எம் பெருமான்* எவ்வுள் கிடந்தானே*2.2.7

விளக்கம்:-
(பரம்பொருளான இறைவன்) நிலவு நீர் வானம் நெருப்பு காற்று (முதலிய பஞ்ச பூதங்கள்)ஆகியவன், (அதுமட்டுமில்லாமல்) நான்கு முகங்களை உடைய பிரம்மனுக்கு அப்பன், சாம வேதங்களின் (ஹீரோவான) பொன் அப்பன், (என் அண்ணன் கண்ணனின் அழகான திருமேனியில் ஒரு) பாகத்தில் இருக்கும் (அது சரி பெருமாள் திருமேனியில் ஒரு பாகத்தில் இருப்பது யாரு? மகாலட்சுமி என்று நினைத்து இருப்பீர்களே! ஹி! ஹி! இன்னொருத்தர் அவர்! யார் தெரியுமா! இதோ!)வண்டுகள் (தேனை விரும்பி உண்ணக்கூடிய அழகான கொன்றை) பூமாலை (அணிந்து கங்கை) நீர் (சூடிய) நீளமான முடியுடைய (அன்புள்ளம் கொண்ட ஈசனின் தலையில் (பெருமாளின் பாதம் இருக்கிறதே! அடடே! என்ன ஒரு பாக்கியம் ஈசனுக்கு, கொடுத்து வச்சவருப்பா! நம்ம அன்பு சிவன், அது கூட தலையில் ஒரு பகுதி மட்டுமல்ல எங்கும் ) சூழ்ந்து (இருக்குமாறு தனது திரு) பாதத்தை சூட நின்ற எங்கள் அப்பன் எம் பெருமான் (திருவள்ளூர் என்ற திரு) எவ்வுளில் படுத்து கொண்டிருக்கிறானே.

1065
முனிவன் மூர்த்தி மூவர் ஆகி* வேதம் விரித்து உரைத்த
புனிதன்* பூவை வண்ணன் அண்ணல்* புண்ணியன் விண்ணவர் கோன்*
தனியன் சேயன் தான் ஒருவன் ஆகிலும்* தன் அடியார்க்கு
இனியன்* எந்தை எம்பெருமான்* எவ்வுள் கிடந்தானே*2.2.8

விளக்கம்:-
(பரம்பொருள் இறைவன்) பெருமாளே! (சிவன், பிரம்மன், பெருமாள் என) மூன்று மூர்த்திகளாகி (என்னாது பெருமாளே பெருமாள் ஆகி! என்று சொல்றாரா ஆழ்வார்!! என்றுதானே நினைக்கிறீங்க!.ஹி! ஹி! ஆமாங்க! அவனே அவனும் ஆகி, SO பெருமாளே மூன்று மூர்த்திகளாகி) வேதத்தை விரிவாக (விளக்கி) சொன்ன புனிதமானவன், காய மலர் போல (நீல) வண்ணமுடையவன், பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய (அண்ணல் என் அண்ணன் கண்ணன்), நல்ல செயல்களையே செய்யும் (புண்ணியன்), வானவர்களுக்கு அரசன், தனி ஒருவன் (யாருக்கும் ஒப்பில்லாதவன்) யாராலும் முழுவதும் அறியமுடியாதவன், (இறைவன்) தான் ஒருவனே ஆகிலும், தன் அடியார்க்கு இனிமையானவன், என் தந்தை, எம் பெருமான் (திருவள்ளூர் என்ற திரு) எவ்வுளில் படுத்து கொண்டிருக்கிறானே.

1066
பந்து இருக்கும் மெல் விரலாள்* பாவை பனி மலராள்*
வந்து இருக்கும் மார்வன்* நீலமேனி மணிவண்ணன்*
அந்தரத்தில் வாழும்* வானோர் நாயகனாய் அமைந்த*
இந்திரற்கும் தம் பெருமான்* எவ்வுள் கிடந்தானே*2.2.9

விளக்கம்:-
பூ சுற்றி வைத்துள்ள பந்து (போல) இருக்கும் மென்மையான (அழகான) விரலுடைய பெண்ணும், குளிர்ந்த தாமரை மலர் (மேல அமர்ந்திருக்கும்) பெண் (அட யாருப்பா இவ்ளோ அழகான்னு கேட்கிறீங்களா! ஹி ஹி மகாலட்சுமி) வந்து (தங்கி) இருக்கும் மார்பை உடையவனும், நீல (நிற அழகான திரு) மேனி ( உடைய நீல)மணி வண்ணன் (செல்லகுட்டி என் அண்ணன் கண்ணன் அதுமட்டுமில்ல) வானத்தில் வாழும் (சூரியன், நிலா, மழை மற்றும் பல) தேவர்களுக்கு தலைவனாய் அமைந்த இந்திரருக்கும் (இறைவன்) தம் பெருமான் (திருவள்ளூர் என்ற திரு)எவ்வுளில் படுத்து கொண்டிருக்கிறானே.

1067
இண்டை கொண்டு தொண்டர் ஏத்த* எவ்வுள் கிடந்தானை*
வண்டு பாடும் பைம் புறவின்* மங்கையர் கோன் கலியன்
கொண்ட சீரால் தண் தமிழ் செய் மாலை* ஈர் ஐந்தும் வல்லார்*
அண்டம் ஆள்வது ஆணை* அன்றேல் ஆள்வர் அமரர் உலகே*2.2.10

விளக்கம்:-
(பூ மற்றும் துளசி முதலிய) மாலைகள் கொண்டு தொண்டர்கள் போற்றி (வழிபடும் திருவள்ளூர் என்று திரு) எவ்வுளில் படுத்து கொண்டிருப்பவனை வண்டுகள் பாடும் பசுமையான வயல்கள் (சூழ்ந்த) திருமங்கை (நாட்டு) மன்னன் போர்வீரனான (திருமங்கை ஆழ்வான்) நேர்த்தியான அழகு கொண்ட குளிர்ந்த தமிழால் செய்த மாலை இரண்டு ஐந்தும் (என்னை போலவே உருக்கமாக பெருமாள் மேல் அன்பு கொண்டு பக்தியோடு சொல்ல) வல்லவர்கள் உலகம் ஆள்வது ஆணை அப்படி இல்லை என்றால் ஆள்வார்கள் தேவர் உலகே.

உற்சவர்: ஸ்ரீ வைத்திய வீர ராகவ பெருமாள்

திருமங்கை ஆழ்வார் பாடிய எவ்வுள் தற்போது காலமாற்றத்தால் திருவள்ளூர் என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் உள்ள சென்னையிலிருந்து 30 Km தொலைவில் திருவள்ளூர் அமைந்துள்ளது.
இங்கு பெருமாள் ஆதிசேஷன் மேல் படுத்த கோலத்தில் அழகாக காட்சியளிக்கிறார். பெருமாளின் பெயர் வீரராகவர். மக்களின் நோய்களை அடியோடு நீக்குபவர் ஆதலால் அன்போடு ஸ்ரீ வைத்திய வீரராகவர் என்று அழைக்க படுகிறார். தாயார் கனகவல்லி தாயார் .

திருமங்கை ஆழ்வார் பாடிய திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவ பெருமாளின் 10 பாசுரங்களின் தூய தமிழில் சொற்பொருள் .

மடவார் - இளமையுடைய பெண்
வேய் – மூங்கில்
தையலாள் - பெண்
தானவன் - அசுரன்
வாள் - ஒளி, கத்தி
பொய் இலாத - உண்மையான
முடிகள் - தலைகள்
வெம் - கொடிய
செஞ்சரம் எய்த - சிவந்த அம்பு விட்ட
எந்தை - என் தந்தை
தூது - செய்தி தெரிவிக்கும் பணி
மன் - சிறந்த
வாளி - அம்பு
வானரம் - குரங்கு, அனுமன், ஆஞ்சநேயர்
மொழிந்து - கூறியது
மாள - இறக்க
முனிந்து – சினந்து , வெறுத்து
பெருநிலத்தார் - அதிகமான நிலம் உடைய பணக்காரன், துரியோதனன்
இன்னார் - தன்னை யாரென்று அறிமுகபடுத்தி கொள்ளுதல்
பந்து அணைந்த - பந்தை தழுவிய (போல)
மெல் - மிருதுவான, மென்மையான, மெல்லிய
பாவை - பெண்
வெந்திறல் - கொடிய திறமை
ஏறு - ஆண் எருது
வேந்தன் - அரசன், மன்னன்
விரி புகழ் - பெரும் புகழ்
பண்டு - வெகு காலம் முன்பு, மிகவும் பழமை வாய்ந்த
ஆல் - ஆலமரம்
சால - மிகவும்,ரொம்ப
நாளும் - நாட்களாக
பள்ளி - படுத்து
எண்ணில் - எண்ணற்ற
ஆர் – பொருந்திய, ஒலி
நெய்தல் - நீரில் பூக்கும் வெள்ளை, நீல நிற லில்லி மலர்கள் உள்ள இடம் (ஆம்பல்)
தண் - குளிர்ந்த
கழனி - வயல் வெளி
ஏல - பொருந்த, இயல
நாறும் - நல்ல மணமிக்க
பைம் - பசுமை
புறவு - காடு, முல்லை நிலம், பயிர்கள் வளர்ந்த நிலம்,
சோத்தம் - வணக்கம்
மிண்டி - வலிமை
ஆத்தன் - விருப்பமானவன்
செங்கண் - சிவந்த கண்கள்
முக்கண் - சிவபெருமான்
நம்பி - இறைவன், நம்ப தகுந்தவர்
திங்கள் - நிலவு
அப்பு - நீர், அப்பா, அன்பாக கூறுவது
வான் - வானம்
எரி - நெருப்பு
கால் - காற்று
திசைமுகனார் - பிரம்மன், நான்கு முகங்களை கொண்டவர்
அப்பன் - தந்தை
சாமி - பொன் , சாமவேதம், இறைவன்
தொங்கல் - பூமாலை
நீள் - நீளமான
சூழ் - சுற்றி
கழல் - பாதம், திருவடி
சூட - அணிந்த
முனிவன் - இறைவன்
மூர்த்தி மூவர் - பிரம்மன், சிவன், திருமால்
அண்ணல் - வணக்கத்திற்கும் போற்றுதலுக்கும் உரியவர், தலைவன்
புண்ணியன் - நற்செயல்களை செய்பவன்
கோன் - அரசன்
தனியன் - தனி ஒருவன், ஒப்பில்லாதவன் தனக்கு இணையாக யாரும் இல்லாதவன்
சேயன் - அறிய முடியாதவன், முருகன்
பந்து - பூவை சுற்றி விட்டு இருப்பது, உருண்டை வடிவம்
பனிமலர் - குளிர்ந்த இடத்தில பூக்கும் மலர், தாமரை
அந்தரம் - நடுவெளி, ஆகாயம்
நாயகன் - தலைவன்
இண்டை - மாலை
ஏத்த - போற்ற
கலியன் - போர்வீரன்
சீர் - அழகு, நேர்த்தி,செய்யுளில் ஒரு வகை வரிசை
தண் - குளிர்ந்த
செய் - செய்த
அண்டம் - உலகம்
அன்றேல் - இல்லை என்றால் , வேண்டாம் என்றால்
அமரர் - வானோர் தேவர்





சரணு சரணு சரணு சரணு ஸ்ரீ வைத்திய வீரராகவர் திருவடியே சரணம்.
ஸ்ரீ வைத்திய வீரராகவருக்கு சமர்ப்பணம். கோவிந்தா! கோவிந்தா! கோவிந்தா!

Friday, November 19, 2010

என்ன பாக்கியம் செய்தாய் என் நெஞ்சமே! திருப்பதி ஏழுமலையானுக்கு அடிமை ஆனாயே!




பெரிய திருமொழி

1048
வானவர் தங்கள் சிந்தை போல* என் நெஞ்சமே! இனிது உவந்து*
மாதவம் ஆனவர் தங்கள் சிந்தை* அமர்ந்து உறைகின்ற எந்தை*
கானவர் இடு கார் அகில் புகை* ஓங்கு வேங்கடம் மேவி*
மாண் குறள் ஆன அந்தணற்கு* இன்று அடிமைத் தொழில் பூண்டாயே*.2.1.1


விளக்கம்:-

(எந்த நேரமும் பெருமாளே என்று ) பெரிய தவம் செய்தவரின் மனதில் (என்றும் நீங்காமல்) அமர்ந்து வசிக்கின்ற என்னுடைய தந்தை! (My sweety! வசிக்கும் இடம்) காட்டிலுள்ள வேடர்கள் மலை வேம்பு மரத்தை (எரித்து) இடும் புகை (எங்கும் பரவி இருக்கும்) உயர்ந்த (மலையான திருப்பதி திரு) வேங்கடம் வாழும் மேன்மையான வாமணன் ஆன அறிவு பண்பு இவற்றில் சிறந்த நல்லவர்க்கு (ஏய்! My dear) என் நெஞ்சமே!வானவர்கள் மனதை போல இனிமையாக விரும்பி இன்று (முதல்) (பெருமாள் சொல்வதை எல்லாம் செய்யும் படி அவருக்கு தொண்டு என்னும்)அடிமைத் தொழிலை செய்ய ஏற்று கொண்டாயே(வாழ்த்துக்கள்!)

1049
உறவு சுற்றம் என்று ஒன்று இலா* ஒருவன் உகந்தவர் தம்மை*மண்மிசைப்
பிறவியே கெடுப்பான்* அது கண்டு என் நெஞ்சம் என்பாய்*
குறவர் மாதர்களோடு* வண்டு குறிஞ்சி மருள் இசை பாடும்* வேங்கடத்து
அறவன் நாயகற்கு* இன்று அடிமைத் தொழில் பூண்டாயே* 2.1.2


விளக்கம்:-
(தனக்கென்று) உறவு, சொந்தம் என்று ஒன்றும் இல்லாத ஒருவன் (நம் பெருமாள்) (தம்மை விரும்பியர் (யாராக இருந்தாலும் இந்த) பூமியின் மேல் (அவர்களுக்கு ஏற்படும்) பிறவி (என்னும் துன்பத்தை அடியோடு) நீக்குவான். அதனை கண்டு (ஏய்! My dear) என் நெஞ்சம் எனப்படும் (நீ!) குறத்தி பொண்ணுங்களோடு வண்டுகள் (சேர்ந்து கொண்டு அழகான) மயக்கும் குறிஞ்சி இசையை பாடும் (திருப்பதி திரு) வேங்கடத்து இறைவன் (நம்மோட) ஹீரோவுக்கு, இன்று (முதல் அவர் சொல்வதை எல்லாம் செய்யும் படி அவருக்கு தொண்டு என்னும்) அடிமைத் தொழிலை செய்ய ஏற்று கொண்டாயே! (வாழ்த்துக்கள்!)

1050
இண்டை ஆயின கொண்டு* தொண்டர்கள் ஏத்துவார் உறவோடும்* வானிடைக் கொண்டு போய் இடவும்*, அது கண்டு என் நெஞ்சம் என்பாய்*
வண்டு வாழ் வட வேங்கட மலை* கோயில் கொண்டு அதனோடும்* மீமிசை
அண்டம் ஆண்டு இருப்பார்க்கு* அடிமைத் தொழில் பூண்டாயே*2.1.3

விளக்கம்:-

(பூ) மாலைகள் கட்டி ( கையில் ஏந்தி) கொண்டு போற்றும் தொண்டர்களோடு (சேர்த்து அவரது) உறவினர்களையும் வானத்தில் இருக்கும் (இன்ப வீட்டிற்கு) கொண்டு போய் விடும் (பெருமாளின் நல்ல) குணத்தை கண்டு (My dear) என் நெஞ்சம் எனப்படும் (நீ!) வண்டுகள் வாழ்கின்ற (திருப்பதி) வட வேங்கட மலை(யில்) கோயில் கொண்டு அதனோடு (சேர்ந்து) மேலுள்ள (வைகுண்டம் மற்றும்) பிரபஞ்சம் (முழுவதும்)ஆட்சி செய்து இருப்பார்க்கு இன்று (முதல் அவர் சொல்வதை எல்லாம் செய்யும் படிஅவருக்கு தொண்டு என்னும்) அடிமைத் தொழிலை செய்ய ஏற்று கொண்டாயே! (வாழ்த்துக்கள்!)

1051
பாவியாது செய்தாய்* என் நெஞ்சமே! பண்டு தொண்டு செய்தாரை* மண்மிசை
மேவி ஆட்கொண்டு போய்* விசும்பு ஏற வைக்கும் எந்தை*
கோவி நாயகன் கொண்டல் உந்து உயர்* வேங்கட மலை ஆண்டு வானவர்
ஆவியாய் இருப்பார்க்கு* அடிமைத் தொழில் பூண்டாயே*2.1.4


விளக்கம்:-

பாவம் எது செய்தாய் (எல்லாம் நன்மையே செஞ்சுட்ட போல இருக்கே! My dear) என் நெஞ்சமே! பூமியின் மேல் (எங்கும்) பரவி முன்பு (அன்போடு) தொண்டு செய்தவர்களை (எல்லாம் அலேக்கா) தூக்கி கொண்டு போய் வானத்தில் (இருக்கும் இன்ப வீடு) ஏற வைக்கும் என் தந்தை, ஆயர்பாடியில் உள்ள பொண்ணுங்களுக்கு ஹீரோ! (வானத்தில் உள்ள) மேகங்களை தள்ளும் (படி உள்ள) மேலோங்கிய (திருப்பதி திரு) வேங்கட மலையை ஆண்டு வானத்தில் (உள்ள தேவர்களுக்கும்) உயிராய் இருப்பார்க்கு இன்று (முதல் அவர் சொல்வதை எல்லாம் செய்யும் படி அவருக்கு தொண்டு என்னும்) அடிமைத் தொழிலை செய்ய ஏற்று கொண்டாயே! (வாழ்த்துக்கள்!)


1052
பொங்கு போதியும் பிண்டியும் உடைப்* புத்தர் நோன்பியர் பள்ளியுள் உறை*
தங்கள் தேவரும் தாங்களுமே ஆக* என் நெஞ்சம் என்பாய்*
எங்கும் வானவர் தானவர் நிறைந்து ஏத்தும்* வேங்கடம் மேவி நின்று அருள்*
அங்கண் நாயகற்கு* இன்று அடிமைத் தொழில் பூண்டாயே*2.1.5


விளக்கம்:-

பொங்கி வருவது (போல நன்றாக செழித்து வளரும்) போதி மரமும், அசோக மரமும் உடைய புத்தர் (மேல் பக்தி கொண்டு விரதம் இருக்கும் பௌத்தரும் சமணரும் புத்த) கோவிலுக்கு உள்ளே வாழும் தங்கள் தேவரும் (புத்தரும்) அவர்களும் ஆக (மட்டுமே இருப்பார்கள் ஆனால் My Dear) என் நெஞ்சம் எனப்படும் (நீ! அங்கெல்லாம் செல்லாமல்) எங்கும் வானவர்களும் அசுரர்களும் நிறைந்து போற்றி புகழும் (திருப்பதி திரு) வேங்கடத்தில்
(எங்கும்) நிறைந்து நின்று அருள் (செய்யும்) அழகான கண்களையுடைய ஹீரோவிற்கு(நம்ம பெருமாளுக்கு )இன்று (முதல் அவர் சொல்வதை எல்லாம் செய்யும் படி அவருக்கு தொண்டு என்னும்) அடிமைத் தொழிலை செய்ய ஏற்று கொண்டாயே! (வாழ்த்துக்கள்!)





1053
துவரி ஆடையர் மட்டையர்* சமண் தொண்டர்கள் மண்டி உண்டு பின்னரும்*
தமரும் தாங்களுமே தடிக்க* என் நெஞ்சம் என்பாய்*
கவரி மாக் கணம் சேரும்* வேங்கடம் கோயில் கொண்ட கண் ஆர் விசும்புடை*
அமர நாயகற்கு* இன்று அடிமைத் தொழில் பூண்டாயே*2.1.6


விளக்கம்:-

காவி ஆடை (அணிந்து கொண்டு மொட்டை அடித்து கொண்டிருக்கும்) புத்தர்களும், சமண தொண்டர்களும் ஒட்டுமொத்தமா கொட்டி இருக்கும் (உணவுகளை ஒருவரோடு ஒருவர்
விழுந்தடித்து கொண்டு வயிறு முட்ட) உண்டு பின்னர் உறவுகளும் தாங்களுமே
(என்று உடலை செமையா வளர்த்து) தடித்து (இருப்பர். ஆனால் My Dear) என் நெஞ்சம்
எனப்படும் (நீ! அங்கெல்லாம் செல்லாமல் உடலில் நிறைய) முடியுடைய விலங்குகள்
கூட்டமாக சேரும் (அழகான திருப்பதி திரு) வேங்கடத்தில் கோயில் கொண்ட (வரும் அதுமட்டுமில்லாமல்) பெருமை வாய்ந்த வானத்தில் (வசிக்கும்) தேவர்களுக்கு ஹீரோவான (நம்ம செல்லம் பெருமாளுக்கு) இன்று (முதல் அவர் சொல்வதை எல்லாம் செய்யும் படி அவருக்கு தொண்டு என்னும்) அடிமைத் தொழிலை செய்ய ஏற்று கொண்டாய (வாழ்த்துக்கள்!)

1054
தருக்கினால் சமண் செய்து* சோறு தண் தயிரினால் திரளை* மிடற்றிடை
நெருக்குவார் அலக்கண்* அது கண்டு என் நெஞ்சம் என்பாய்*
மருள்கள் வண்டுகள் பாடும்* வேங்கடம் கோயில் கொண்டு அதனோடும்* வானிடை
அருக்கன் மேவி நிற்பார்க்கு* அடிமைத் தொழில் பூண்டாயே*2.1.7

விளக்கம்:-

(நாங்கதான் உயர்ந்தவர் என்று திமிருடன்) கர்வத்தினால் சமண (மதத்தை பரவ) செய்து, (வரும் சமணர்கள்) சோற்றில் குளிர்ந்த தயிரினால் உருண்டை (செய்து அப்பு அப்புன்னு சாப்பிட்டு) தொண்டை வரைக்கும் (உணவை நிறைய) உண்டு துன்புறுவர். அதை கண்டு என் நெஞ்சம் எனப்படும் (நீ என்ன நன்மை செய்தாயோ! அங்கெல்லாம் செல்லாமல்) மயக்கம் வைக்கும் இசையுடன் வண்டுகள் பாடும் (திருப்பதி திரு) வேங்கடம் கோயில் கொண்டு அதனோடு வானத்திலுள்ள சூரிய (ஒளியாகவும் எங்கும்) பரவி நிற்பார்க்கு இன்று (முதல் அவர் சொல்வதை எல்லாம் செய்யும் படி அவருக்கு தொண்டு என்னும்) அடிமைத் தொழிலை செய்ய ஏற்று கொண்டாயே! (வாழ்த்துக்கள்!)

1055
சேயன், அணியன், சிறியன், பெரியன் என்பதும்* சிலர் பேசக்
கேட்டிருந்தே* என் நெஞ்சம் என்பாய்!* எனக்கு ஒன்றும் சொல்லாதே*
வேய்கள் நின்று வெண் முத்தமே சொரி* வேங்கடமலை கோயில்
மேவிய* ஆயர் நாயகற்கு* இன்று அடிமைத் தொழில் பூண்டாயே*2.1.8


விளக்கம்:-

(பரம்பொருளான இறைவனை சிலர்) தொலைவில் (உள்ளான்), அருகில் (உள்ளான் என்றும்) சின்னவன் (என்றும்) பெரியவன் (என்றும்) சிலர் பேச கேட்டிருந்தாய்! (அவர்களின் வீண் பேச்சை கேட்காமல் (My Dear)என் நெஞ்சம் எனப்படும் (நீ!) எனக்கு ஒன்றும் சொல்லாமலே (நன்கு வளர்ந்த) மூங்கில்கள் நின்று (கொண்டு) வெள்ளை நிற முத்துக்களை உதிர்க்கும் (அழகிய திருப்பதி திரு) வேங்கட மலை கோயில் (கொண்டு எங்கும்)நிறைந்துள்ள (என் செல்ல கண்ணனுக்கு) ஆயர்களின் ஹீரோக்கு இன்று (முதல் அவர் சொல்வதை எல்லாம் செய்யும் படி அவருக்கு தொண்டு என்னும்) அடிமைத் தொழிலை செய்ய ஏற்று கொண்டாயே! (வாழ்த்துக்கள்!)

1056
கூடி கூடி உரைத்தே உரைத்தாய்* என் நெஞ்சம் என்பாய்! துணிந்து கேள்*
பாடி ஆடிப் பலரும் பணிந்து ஏத்தி* காண்கிலார்*
ஆடு தாமரையோனும் ஈசனும்* அமரர் கோனும் நின்று ஏத்தும்* வேங்கடத்து
ஆடு கூத்தனுக்கு* இன்று அடிமைத் தொழில் பூண்டாயே*2.1.9

விளக்கம்:-

(My Dear) என் நெஞ்சம் எனப்படும் (நீ! இந்த உலக மக்களோடு) கூடி கூடி அவர்கள் (டேய் மச்சான் அந்த பிகர பாருடா என்று கூறினால் நீயும் ஆமா மாமே அந்த பிகர் நல்லா இருக்குடா! என்று அவர்கள்) சொல்வதையே (தலையாட்டி நீயும்) சொன்னாய்.(!சிம்ரன், நயன்தாரா, மும்தாஜ், நமீதா கணக்கா இருப்பவங்களை பற்றி) பாடியும் ஆடியும் (அவர்களை நேரில் பார்த்தால்) பணிந்து போற்றி புகழ்பவர்கள் (பரம்பொருளான என் செல்லம் பெருமாளை) காண இயலாதவர்கள்.(ஆனால் என் நெஞ்சமே நீ அவர்களிடம் சேராமல் அழகாக) தாமரை மலரில் (அமர்ந்திருக்கும்) பிரம்மனும், ஈசனும், தேவர்களின் அரசனான (இந்திரனும்) நின்று போற்றி புகழும் (திருப்பதி திரு) வேங்கடத்து (கண்ணன் குடத்தை வைத்து கொண்டு முன்பு ஆயர்களோடு சேர்ந்து) ஆடும் கூத்தனுக்கு இன்று (முதல் அவர் சொல்வதை எல்லாம் செய்யும் படி அவருக்கு தொண்டு என்னும்) அடிமைத் தொழிலை செய்ய ஏற்று கொண்டாயே! (வாழ்த்துக்கள்!)

1057
மின்னு மா முகில் மேவு* தண் திரு வேங்கட மலை கோயில் மேவிய*
அன்னமாய் நிகழ்ந்த* அமரர் பெருமானை*
கன்னி மா மதில் மங்கையர் கலிகன்றி* இன் தமிழால் உரைத்த*
இம்மன்னு பாடல் வல்லார்க்கு* இடம் ஆகும் வான் உலகே*2.1.10

விளக்கம்:-

(முன்பு படைக்கும் தொழிலை செய்யும் பிரம்மருக்கு) அன்ன வடிவில் வந்து (உபதேசம் செய்தவரும்) தேவர்களுக்கும் (இறைவனான) பெருமாளை அழியாத பெரிய (கனமான) சுற்று சுவரை கொண்ட திருமங்கை (நாட்டு) போர்வீரன் (திருமங்கையன்) இனிமையான தமிழால் கூறிய இந்த சிறந்த பாடலை (என்னை போலவே பெருமாள் மீது ஆசை வைத்து அவருக்கே நான் அடிமை என்ற எண்ணத்தோடு சொல்ல) ஆற்றல் படைத்தவர்களுக்கு இடம் (பெருமாள் வசிக்கும் வைகுண்டமான) வான் உலகம்



திருப்பதி ஏழுமலையானின் திருமங்கை ஆழ்வார் பாடிய பாசுரங்களின் தூய தமிழின் சொற்பொருள்

சிந்தை - மனதில், மன உணர்வு
உவந்து - விரும்பி
மாதவம் - உயர்ந்த or சிறந்த தவம் செய்தவர்கள்
உறை - தங்குதல், வாழ்தல்
கானவர் - வேடர்கள், முல்லை மருத, பாலை நிலா மக்கள்
இடு அகராதி
அகில் -,மலை வேம்பு, வேப்பமரத்தை போன்ற ஒரு மரம், நச்சு தன்மை வாய்ந்தது
கார் - கருமை, மேகம்
ஓங்கு - உயரமான, உயர்வான நிலை, ஒசத்தி
மேவி - பரவி - அல்லது கலந்து
மாண் - இறைவன்,. மாண்புமிகு, மேன்மை
குறள் - குள்ளம், வாமன பெருமாள்
அந்தணர் - அறிவு பண்பு முதலியவற்றில் சிறந்தவர் , மிகவும் நல்லவர், பிராமணர்
பூண்டாயே - ஏற்றாயே,மேற்கொண்டாயே
உறவு - பிறந்த குழந்தை மற்றும் திருமணத்தால் வரும் சொந்தங்கள்
சுற்றம் - சொந்தம்
உகந்து - விரும்பி
மண் - நிலம்
மிசை - மேல்
குறவர் மாதர் - ஊர் ஊராக சென்று வாழும் ஓர் இனத்தை சேர்ந்த பெண்கள்
குறிஞ்சி - மலையும் மலையை சார்ந்த இடமும்
மருள் - தெளிவில்லாமல் குழம்புதல், அச்சம்
அறவன் - பெரியவன்,இறைவன்,அறம் செய்வதை தொழிலாக உடையவர்
நாயகன் - தலைவன், கதாநாயகன், ஹீரோ
இண்டை - மாலை வகை, கொடி வகை
ஏத்து – போற்று, புகழ்ந்து
மீமிசை - மிக்கது, மேலிடத்தில்
அண்டம் - பிரபஞ்சம், பூமி, உலகம்
பாவியாது - தீமை எது
பண்டு - பழமை
தொண்டு - சேவகம்
விசும்பு - வானம்
எந்தை - என் தந்தை
கோவி - கோபியர், ஆயர்பாடி வசிக்கும் பெண்கள்
கொண்டல் - மேகம், மழை
உந்து - தள்ளு
உயர் – உயர்ந்த, மேலோங்கிய
ஆவி - உயிர், ஆன்மா
பொங்கு - நுரைத்து மேலோங்கிய
பிண்டி - அசோக மரம்
பள்ளி - படுத்தல், சமணர் படுக்கும் குகைகள்
உறை - வசிக்கும்
நோன்பு - உணவை குறைத்து கொண்டோ அல்லது எளிய உணவை சாப்பிட்டு இறைவனை நினைத்து செய்யும் விரதம்,
தானவர் - அசுரர்
அம்கண் - அழகான கண்
துவரி - காவி நிறம்
மட்டையர் - மொட்டை அடித்த புத்தர்கள்
சமண் - சமண மதம்
மண்டி - உணவுகளை மொத்த அளவில் விற்பனை செய்யும் இடம்
தமர் - சுற்றத்தார்
கணம் - மொத்தமாக வந்து சேரும்
கண் - பெருமை
ஆர் - வாய்ந்த, நிறைந்த, பொருந்திய
கவரி - மயிர்
மா - விலங்கு, மாடு, மான்
அமரர் - தேவர், மரணம் இல்லாதவர்
தருக்கு - கர்வம்
திரள் - உருண்டை ,கூட்டம், சதைபற்றுடன் குண்டாக காணப்படுதல்,
தண் - குளிர்ந்த
மிடற்றிடை - கழுத்து, தொண்டை வரை
நெருக்கு - அழுத்து
அலக்கண் - துன்பம்
மருள் - மயக்க உணர்வு , அச்சம், தெளிவில்லாமல் குழம்புவது
அருக்கன் - சூரியன்
சேயன் - தொலைவில் உள்ளான்
அணியன் - அண்மையில் உள்ளான்
வேய் - மூங்கில்
வெண் - வெண்மை, வெள்ளை நிறம்
சொரியும் – உதிரும்,விழுதல், பொழிதல், கொட்டுதல்
ஆயர் - ஆடு மாடுகளை மேய்ப்பவர்
உரைத்து - கூறுதல், தெரிவித்தல்
துணிந்து - , பயமில்லாமல், தைரியம்
எத்தி - போற்றி, புகழ்ந்து
காண்கிலார் - காண இயலார்
ஈசன் - சிவன் ,கடவுள், இறைவன், தலைவன்
கோன் - அரசன்
ஆடு - அங்குமிங்கும் அசைதல்
கூத்தன் - நடனம் செய்பவன்
மின் - மின்னல்
மா - பெரிய
முகில் - மேகம்
மேவு - பரவிய
தண் - குளிர்ந்த
அன்னம் - அன்ன பறவை
கன்னி - அழியாதது
மதில் - சுற்று சுவர்
கலியன் - போர்வீரன்
கலிகன்றி - திருமங்கை ஆழ்வார், கலியைக் கெட்டுவிடச் செய்பவன்
இன் - இனிய
மன்னு - சிறந்த
வல்லார் அகராதி
வான் - வானம்

திருமங்கை ஆழ்வார் பாடிய திருவேங்கடம் - திருப்பதி என்று தற்போது அழைக்க படுகிறது.ஆந்திராவில் உள்ளது. திருப்பதி பெருமாளின் பெயர் ஸ்ரீ ஸ்ரீனிவாசன். நின்ற வண்ணம் அழகாக இருக்கிறார்.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க மக்கள் கூட்டம் அலைமோதும் , அனைவரும் சேர்ந்து சொல்லுவோமா! கோவிந்தா! கோவிந்தா! கோவிந்தா !




என் அன்பு ஏழுமலையானின் பொன் மலர் பாதங்களுக்கு சமர்ப்பணம்!

Tuesday, November 2, 2010

அண்ணா! அடியேன் இடரைக் களையாயே.



பெரிய திருமொழி

1038
கண்ணார் கடல் சூழ்* இலங்கைக்கு இறைவன் தன்*
திண் ஆகம் பிளக்கச்* சரம் செல உய்த்தாய்!*
விண்ணோர் தொழும் வேங்கட மா மலை மேய*
அண்ணா! அடியேன்* இடரைக் களையாயே.1.10.1


விளக்கம்:-

கண் (போல பார்த்து கொண்டு வெளியாள் யாரும் நுழைய விடாமல் பாதுகாக்கும் ) கடல் சூழ்ந்துள்ள இலங்கைக்கு இறைவன் (இராவணனின் வலிமை வாய்ந்த) திடமான மார்பை பிளக்க, அம்பை ஒன்றன் பின் ஒன்று வரிசையாக அனுப்பி (இராவணனை அழித்த எங்கள் இராமனே!) விண்ணோர் வழிபடும் (திருப்பதி திரு) வேங்கட உயர்ந்த மலையில் (வாழும் என்) அண்ணா! அடியேனின் துன்பத்தை களையாயே!


1039
இலங்கைப் பதிக்கு* அன்று இறையாய அரக்கர்*
குலம் கெட்டு அவர் மாளக்* கொடிப் புள் திரித்தாய்!*
விலங்கல் குடுமித்* திருவேங்கடம் மேய*
அலங்கல் துளப முடியாய்!* அருளாயே. 1.10.2


பாசுர விளக்கத்திற்கு முன் சிறு குறிப்பு:-

சுமாலி என்பவன் இராவணனுடைய தாயாகிய கேகசிக்குத் தந்தை. அதாவது தாய் வழிப் பாட்டன். இவன் தன் சகோதரர்களான மாலி, மாலியவான் ஆகியோருடன் இலங்கையில் குடிபுகுந்து தேவர்களுக்குப் பல இன்னல்கள் புரிந்து வந்தனர். திருமால் வந்து போர் புரிந்து வென்று மாலி என்பவனைக் கொன்றுவிட, மற்றவர்கள் பாதாளத்தில் பதுங்கிக் கொண்டனர்.(அதாவது மாலியவான், சுமாலி, மாலி என்பவர்கள் இராவணனுக்கு முன்பு இலங்கையை ஆண்டனர்.)

விளக்கம்:-

இலங்கை அரசனான (இராவணனுக்கு) முன்பு (இலங்கையின்) இறைவனான (மாலி முதலிய) அரக்கர் குலமே கெட்டு அவர்கள் (அனைவரும் துண்ட காணோம்! துணிய காணோம்! என்பது போல அலறியடித்து கொண்டு ஓடும்படி) சுற்றி கொண்டே மேலே பறந்து செல்லும் (சக்கர ஆயுதத்தை செலுத்தி அரக்கர்களை) கொன்ற, கருட கொடியோனே!(என் கோவிந்தா!) உயர்ந்த மலை உச்சியான (திருப்பதி) திருவேங்கடத்தில் வாழ்கின்ற (என் கோவிந்தா!) துளசி மாலையை திரு முடியில் (அழகாக அணிந்த என் கோவிந்தா! அடியேனுக்கு) அருளாயே!

1040
நீரார் கடலும்* நிலனும் முழுது உண்டு*
ஏர் ஆலம் இளந்தளிர் மேல்* துயில் எந்தாய்!*
சீரார்* திருவேங்கட மா மலை மேய*
ஆரா அமுதே!* அடியேற்கு அருளாயே. 1.10.3


விளக்கம்:-

(முன்பு உலகம் அழியும் காலத்தில் உலகை காப்பாற்ற) நீரை உடைய கடலும், நிலனும் (மற்றும் உலகம்) முழுதும் உண்டு, (தன் வயிற்றில் வைத்து பாதுகாத்து) அழகான ஆலமரத்து இளம் இலையின் மேலே (ஒன்றும் தெரியாத குழந்தை போல) உறங்கும் (கண்ணனே!) என் தந்தையே! அழகான திரு வேங்கட உயர்ந்த மலை (மேல்) வாழும் (என்றுமே தித்திக்கும்) திகட்டாத அமிர்தமே, அடியேற்கு அருளாயே!

1041
உண்டாய் உறி மேல்* நறு நெய் அமுதாக*
கொண்டாய் குறளாய்* நிலம் ஈர் அடியாலே*
விண் தோய் சிகரத்* திருவேங்கடம் மேய
அண்டா!* அடியேனுக்கு அருள் புரியாயே. 1.10.4

விளக்கம்:-

(பசு மேய்க்கும் பொண்ணுங்க) மேலே கயிற்றால் கட்டி வைத்துள்ள பானைகளில் உள்ள நறுமணம் மிக்க வெண்ணையை அமுதாக உண்டாயே (என் கண்ணா!) . குள்ளமான (வாமன வடிவம் கொண்டு ஒன்றும் தெரியாதது போல மகாபலியிடம் இரண்டடி மண் கேட்க, உன்னை பார்த்து மகாபலி, ஹூம் ஜுஜுபி என்பது போல இரண்டடி தானே எடுத்துக்கோ! என்று சொல்ல உடனே நீ வானளவு உயர்ந்து) இரண்டே அடியில் (உலகத்தை அளந்தாயே என் வாமனா!) விண்ணை தொடுவது (போல காட்சியளிக்கும் உயர்ந்த) மலையான திருவேங்கத்தில் வாழ்கின்ற (உலகத்தை ஆள்பவனே!என்) தேவனே! அடியேனுக்கு அருள் புரியாயே!

1042
தூண் ஆய் அதனூடு* அரியாய் வந்து தோன்றி*
பேணா அவுணன் உடலம்* பிளந்திட்டாய்!*
சேண் ஆர் திருவேங்கட* மா மலை மேய*
கோண் நாகணையாய்!* குறிக்கொள் எனை நீயே.. 1.10.5


விளக்கம்:-

அழகிய தூணை (பிளந்து) அதிலிருந்து நரசிம்ம பெருமாளாய் வந்து தோன்றி, (யாரும்) விரும்பாத (கொடுமைகாரனான) அரக்கன் (இரணியனின்) உடலை (அக்கு வேரா! ஆணி வேரா! ) பிளந்தாயே (என் நரசிம்மா!) பெருமை பொருந்திய (திருப்பதி) திருவேங்கட உயர்ந்த மலையில் வாழும் வளைந்த (நெளிந்த) பாம்பான (ஆதிசேஷனை) மெத்தையாக கொண்ட (கோவிந்தா! நல்லா பாரப்பா!) பார்த்து காப்பாற்றுப்பா! என்னை நீயே!




1043
மன்னா* இம் மனிசப் பிறவியை நீக்கி*
தன் ஆக்கித்* தன் இன்அருள் செய்யும் தலைவன்
மின் ஆர் முகில் சேர்* திருவேங்கடம் மேய*
என் ஆனை என் அப்பன்* என் நெஞ்சில் உளானே. 1.10.6

விளக்கம்:-

(இவ்வுலகை ஆளும்) அரசனே! இந்த மனித பிறவியை நீக்கி (என்னை) உன்னுடைய ஆளாக ஆக்கி, எனக்கு இனிமையான நல்ல (கருணை மனதோடு வாரி வாரி) அருள் செய்யும் (என்) தலைவனே! (தலைவா! வானத்தில் பளிச் பளிச்ன்னு மின்னும்)மின்னலோடு மேகங்கள் (ஒன்று) சேர்ந்து (அழகாக காட்சி தரும் திருப்பதி) திருவேங்கடத்தில் வாழும் (கோவிந்தனே! என் செல்லம்!) என் யானை, என் அப்பா! என் நெஞ்சில் உள்ளானே!

1044
மானே மட நோக்கி* திறத்து எதிர் வந்த*
ஆன் ஏழ் விடை செற்ற* அணி வரைத் தோளா!*
தேனே!* திருவேங்கட மா மலை மேய*
கோனே! என் மனம்* குடி கொண்டு இருந்தாயே. 1.10.7

பாசுர விளக்கத்திற்கு முன் கண்ணனின் மாமன் மகள்
அழகான பொண்ணு நப்பின்னை பற்றி தெரிந்து கொள்ளலாமா!:__
கண்ணனின் மாமன் மகள் நப்பின்னை. மாமன் கும்பன் ஒரு நிபந்தனை வைத்தான். அவனிடம் ஏழு முரட்டுக் காளைகள் இருந்தன. இவற்றை அடக்குபவருக்கே தன் மகள் மாலை சூட்டுவாள் என்று சொன்னான். இதை அறிந்த கண்ணன் நப்பின்னையை திருமணம் செய்ய விரும்பி ஏழு முரட்டு எருதுகளை அடக்கி நப்பின்னையைக் கைப்பிடித்தான்.------நப்பின்னை - கடல்தாயின் அம்சம் - நீளா தேவி

விளக்கம்:-

மான் (போல அழகான கண்களை உடைய) இளமையான (நப்பின்னையை திருமணம் செய்ய வேண்டும்) என்ற குறிக்கோளோடு, (பயங்கரமான) வலிமையுடன் எதிரில் வந்த (ஏழு) எருதுகளை அழித்த, மலையை (கவசமாக) அணிந்தது (போல வலிமையான) தோளா! (செம்ம Arms-டி செல்லம் உனக்கு! என்னோட) தேனே! (திருப்பதி) திருவேங்கட உயர்ந்த மலையில் வாழும் (என்னை ஆளும்) அரசே! என் மனம் (என்னும் கோவிலிலே) குடி கொண்டு இருந்தாயே!

1045
சேயன் அணியன்* என் சிந்தையுள் நின்ற
மாயன்* மணி வாள் ஒளி* வெண் தரளங்கள்*
வேய் விண்டு உதிர்* வேங்கட மா மலை மேய*
ஆயன் அடி அல்லது* மற்று அறியேனே.. 1.10.8

விளக்கம்:-

(கண்ணன்) தொலைவில் உள்ளவன் (என்றும்) அருகில் உள்ளவன் (என்றும் சொல்கிறார்கள் ஆனால் அவன் இளநியின் உள்ளே நீர் வந்தது போலே)என் நெஞ்சின் உள்ளே நின்ற மாயக்காரன், (நீல) மணியை (போன்று) பேரொளி (கொண்ட பிரியமான என் ஆனந்த கண்ணன் குளிர்ந்த பனிகள்) வெள்ளை முத்துக்கள் (மேலிருந்து விழுவதை போல) மூங்கில் (மரங்களை) நீக்கி (அழகாக) உதிர்க்கும் (திருப்பதி) திருவேங்கட உயர்ந்த மலையில் வாழும் என் அன்பு) கண்ணன் அடி தவிர வேறொன்றையும் (நான்) அறியேனே!

1046
வந்தாய் என் மனம் புகுந்தாய்* மன்னி நின்றாய்*
நந்தாத கொழுஞ்சுடரே* எங்கள் நம்பீ!*
சிந்தாமணியே* திரு வேங்கடம் மேய
எந்தாய்!* இனி யான் உன்னை* என்றும் விடேனே. 1.10.9


விளக்கம்:-

(என் அன்பே! எம் பெருமானே! நீ) வந்தாய். என் மனம் புகுந்தாய், (என்னை விட்டு) நீங்காமல் நிறைந்து நின்றாய்.(என்றைக்குமே அழிவில்லாத) அணையாமல் (என்றும் நிலையான) கொழுந்து விட்டு எரிகின்ற சுடரே. எங்கள் (நம்பிக்கைக்கு உரியவனே!) நம்பியே! (என்றுமே ஒளி குறையாத ஒசத்தியான உயர்ந்த வகை மணியை போன்றவனே) சிந்தாமணியே! (திருப்பதி) திரு வேங்கடம் வாழ்கின்ற எனது தந்தையே! இனி நான் உன்னை என்றும் விடவே மாட்டேன்.

1047
வில்லார் மலி* வேங்கட மா மலை மேய*
மல்லார் திரள் தோள்* மணி வண்ணன் அம்மானைக்*
கல்லார் திரள் தோள்* கலியன் சொன்ன மாலை*
வல்லார் அவர்* வானவர் ஆகுவர் தாமே. 1.10.10

விளக்கம்:-

வில்லை உடைய (வேடர்கள்) மிகுந்துள்ள (திருப்பதி திரு) வேங்கட உயர்ந்த மலையில் வாழும் வலிமை வாய்ந்த கனமான பெரிய தோளை (உடைய நீல) மணி (போல வண்ணம் உடைய) இறைவனை, கல்லை (போல) கனமான பெரிய தோளை (உடைய) கலியன் (பாடிய சொல்லால் ஆன) மாலையை (சொல்ல) வல்லவர் (எவரோ) அவர் வானவர் ஆகுவர் தாமே

திருப்பதி ஏழுமலையானின் திருமங்கை ஆழ்வார் பாடிய 10 பாசுரங்களின் தூய தமிழ் சொல்லின் பொருள்

ஆர் - பொருந்திய, ஒலி
திண் - திடமான
ஆகம் – உடல், மார்பு
சரம் - அம்பு ,ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக
செல உய்த்து - செல்லுமாறு அனுப்பி
மேய = பொருந்திய
இடர் - துன்பம், வருத்தம்
களை - நீக்கு
பதி - தலைவன், கணவன் அரசர்
மாள - இறக்க
புள் - பறவை, கருடன்
கொடி புள் - கருட கொடியை கொண்டவன்
திரித்தாய் - திருகாணி போல சுற்றி கொண்டே மேலே செல்வது
விலங்கல் - மலை
குடுமி - உச்சி
அலங்கல் - மாலை, பூமாலை
துளப - துளசி
நீரார் - நீர் பொருந்திய
ஏர் - அழகு
ஆலம் - ஆலமரம்
இளந்தளிர் - புதியதாக வளர்ந்திருக்கும் மென்மையான இளம் இலை
துயில் - உறங்குதல்
எந்தாய் - என் தந்தையே!
சீரார் - அழகு பொருந்திய
ஆரா அமுதே - திகட்டாத அமுதே , இனிப்பு, வீடுபேறு, நிவேதனம், அமிர்தம்
உறி - மேலிருந்து கயிற்றால் பானைகள் தொங்கும்படி இருப்பது உறி எனப்படும்
நறு - வாசனை
நெய் - உருக்கிய வெண்ணெய்
அமுது - அமுதம், சோறு, இனிப்பு, நிவேதனம், வீடுபேறு
குறள் - குள்ளன்
தோய் - படிதல், நனைதல்
சிகரம் - மலையின் உச்சி
அண்டா - தேவனே
ஆய் - அழகு
அரி – சிம்மம், பெருமாள்
பேணா - விரும்பாத போற்றாத
அவுணன் - அசுரன்
உடலம் - உடல்
சேண் - உயரம் உள்ள, ஆகாயம், தூரம்
ஆர் - பொருந்திய
கோண் - வளைந்து
நாகம் - நல்ல பாம்பு
அணை - படுக்கை, தூங்கும் இடம்
குறிக்கொள் - நினைத்து காத்தருள்
மன்னா - அரசனே
இன் - இனிய
அருள் - கருணை, இரக்கம்
மின் - மின்னல்
ஆனை - யானை
அப்பன் - அப்பா
மடம் - இளமையுமுடைய,
நோக்கி - ஒருவரை குறிக்கோளாக கொண்டு
திறத்து - தம் வலிமையினால்
ஆன் - பசு, பெண் எருது, அவ்விடம், காளை
விடை - ஆண் விலங்கு, எருது
செற்ற - அழித்த
அணி - உடுத்துவது
வரை - மலை
கோன் –, அரசன்
சேயன் - தொலைவில் உள்ளான்
அணியன் - அண்மையில் உள்ளான்
வாள் - ஒளி, கத்தி
தரளம் - முத்து
வேய் - மூங்கில்
விண்டு - நீங்கி
ஆயன் - இடையன் , ஆடு மாடு மேய்ப்பவன், கண்ணன்
மன்னி - நீக்கமற எங்கும் நிறைந்து
நந்தாத – கெடாத, அணையாத
சிந்தாமணி - ஒளி கெடாத ஒரு வகை மணி
வில்லார் - வில்லை உடையவர், வேடர்கள்
ஆர் – பொருந்திய
மலி = மிகுந்த
மல்லார் - வலிமை பொருந்திய
திரள் தோள் - திரண்ட தோள், பெருத்த தோள்




திருப்பதி எம் பெருமான் மலர் பாதங்களுக்கு சமர்ப்பணம் !
கோவிந்தா! கோவிந்தா! கோவிந்தா!

Thursday, October 21, 2010

திருவேங்கடவா! அடியேனை ஆட் கொண்டருளே!



பெரிய திருமொழி


1028
தாயே தந்தை என்றும்* தாரமே கிளை மக்கள் என்றும்*
நோயே பட்டொழிந்தேன்* உன்னைக் காண்பது ஓர் ஆசையினால்*
வேயேய் பூம் பொழில் சூழ்* விரையார் திருவேங்கடவா!*
நாயேன் வந்து அடைந்தேன்* நல்கி ஆள் என்னைக் கொண்டருளே
.. 1.9.1

விளக்கம்:-

அம்மா அப்பா என்றும் பொண்டாட்டி சொந்தகாரங்க என்றும் (இவர்களின் மேலே பாசம் என்னும்) நோயே பட்டு ஒழிந்தேன்! (அப்பப்பா இவர்களை எல்லாம் நம்பி இவர்களிடம் உண்மையான அன்பு செலுத்தி பட்டது போதுமப்பா! போதும்!),மூங்கில் புதர்களும் பூக்கள் நிறைந்த மரங்களும் செடிகளும் சூழ்ந்துள்ள நல்ல மணம் வீசும் திருவேங்கடவா! (திருப்பதியில் வசிக்கும் என் கோவிந்தா! நீயே என்றும் நிலையான சொந்தம் என்று) உன்னை பார்க்கணும் என்றொரு ஆசையினால் நாயாகிய நான் வந்து (சரண்) அடைந்தேன்! (ஆள்பவனே! யப்பா ஏழுமலையானே!) விரும்பி என்னை ஏற்று கொண்டு அருள் புரியணும்! (please)


1029
மானேய் கண் மடவார்* மயக்கில் பட்டு மாநிலத்து*
நானே நானாவித* நரகம் புகும் பாவம் செய்தேன்*
தேனேய் பூம்பொழில் சூழ்* திருவேங்கட மா மலை* என்
ஆனாய்! வந்து அடைந்தேன்* அடியேனை ஆட் கொண்டருளே
. 1.9.2

விளக்கம்:-

மான் (போல அழகான) கண்களையுடைய இளமையான (டீன் ஏஜ் பெண்களை Sight அடித்து அவர்கள் அழகில்) மயக்கம் கொண்டு இந்த மாநிலத்திலே நான் நரகம் செல்லகூடிய (அளவுக்கு)பல வித பாவங்களை செய்தேன். தேன் நிறைந்த பூஞ்சோலைகள் சூழ்ந்துள்ள
(திருப்பதி) திருவேங்கட உயர்ந்த மலையில் (உள்ள கோவிந்தா!) என் வலிமையுடைய காளையே! அழகுடையவனே! (நான் திருந்த எண்ணி உன் திருவடியே சரணம் என்று ) வந்து அடைந்தேன்!அடி பணிந்தவனை முழுமையாக எடுத்து கொண்டு அருள் புரியணும் (please)

1030
கொன்றேன் பல் உயிரை* குறிக்கோள் ஒன்று இல்லாமையால்*
என்றேனும் இரந்தார்க்கு* இனிதாக உரைத்து அறியேன்*
குன்றேய் மேகம் அதிர்* குளிர் மா மலை வேங்கடவா!*
அன்றே வந்து அடைந்தேன்* அடியேனை ஆட் கொண்டருளே
. 1.9.3

விளக்கம்:-

குறிக்கோள் ஒன்றும் இல்லாமல் (கண்ணு மண்ணு தெரியாம) பல உயிர்களை கொன்றேன்.
(அப்புறம்) என்னிடம் பிச்சை கேட்டு வருபவர்களிடம் (போ! போ! சில்லறை இல்ல! என்றல்லவா கடுமையாக சொல்லி இருக்கிறேன்!) என்னைக்குமே இனிமையாக பேசியது கூட இல்லை! குன்றுகள் (போல காட்சி தரும்) மேகங்கள், சத்தம் (வரும் அளவுக்கு வானத்தில் எப்போதுமே மிகுதியாக சுற்றி கொண்டிருப்பதால்) குளிர்ச்சியாக இருக்கிற உயர்ந்த மலையில்(வசிக்கும் திருப்பதி) வேங்கடவா! (கோவிந்தா! அக்குற்றங்களோடு உன் பாதமே சரணம் என்று எண்ணிய) அன்றே வந்து அடைந்தேன். அடி பணிந்தவனை முழுமையாக எடுத்து கொண்டு அருள் புரியணும் .(please)

1031
குலம் தான் எத்தனையும்* பிறந்தே இறந்து எய்த்து ஒழிந்தேன்*
நலம் தான் ஒன்றும் இலேன்* நல்லதோர் அறம் செய்தும் இலேன்*
நிலம் தோய் நீள் முகில் சேர்* நெறியார் திருவேங்கடவா!*
அலந்தேன் வந்து அடைந்தேன்* அடியேனை ஆட் கொண்டருளே.
1.9.4

விளக்கம்:-

எத்தனையோ குலங்களில் பிறந்தும் இறந்தும் இளைத்தும் ஒழிந்து போனேன்! நல்லவை ஒன்றும் செய்தது இல்லை! நல்லவிதமாக ஒரு (தான, தர்ம) புண்ணியம் கூட செய்ததும் இல்லை! (மலை மேலே உள்ள) நிலத்தில் படிவது (போல அழகாக உள்ள) நீளமான மேகங்கள் (ஒன்று) சேர்ந்து (செல்லும் அழகான மலை மேல் வசிக்கும் என்றைக்குமே) நிலையான திருவேங்கடவா! (திருப்பதி கோவிந்தா! உன்னையே சரணம் அடைய) பல துன்பங்களோடு வாடியும் (வருந்தி) வந்து அடைந்தேன். அடி பணிந்தவனை முழுமையாக எடுத்து கொண்டு அருள் புரியணும். (please)

1032
எப் பாவம் பலவும்* இவையே செய்து இளைத்து ஒழிந்தேன்*
துப்பா! நின் அடியே* தொடர்ந்து ஏத்தவும் கிற்கின்றிலேன்*
செப்பார் திண் வரை சூழ்* திருவேங்கட மா மலை* என்
அப்பா! வந்து அடைந்தேன்* அடியேனை ஆட் கொண்டருளே.
1.9.5

விளக்கம்:-

(ஒன்னு ரெண்டு இல்லப்பா!) பாவங்கள் பலவற்றையே செய்து இளைத்து ஒழிந்தேன்! (இதனால என்ன ஆச்சுனா- யப்பா!) நல்லவரே! உன் திருவடியை தொடர்ந்து போற்றி புகழவும் சக்தி இல்லாமல் இருக்கிறேன். செப்பு (போல) வலிமையான மலைகளை சூழ்ந்துள்ள திருவேங்கட உயர்ந்த மலையில் வாழும் (திருப்பதி கோவிந்தனாகிய) என் அப்பா! (உன்னை சரணடையவே விருப்பபட்டு) வந்து அடைந்தேன். அடி பணிந்தவனை முழுமையாக எடுத்து கொண்டு அருள் புரியணும். (please ppaa)



1033
மண்ணாய் நீர் எரி கால்* மஞ்சு உலாவும் ஆகாசமுமாம் *
புண்ணார் ஆக்கை தன்னுள்* புலம்பித் தளர்ந்து எய்த்து ஒழிந்தேன்*
விண்ணார் நீள் சிகர* விரையார் திருவேங்கடவா!*
அண்ணா! வந்து அடைந்தேன்* அடியேனை ஆட் கொண்டருளே.
1.9.6

விளக்கம்:-

மண் கொண்ட (நிலம்) , நீர் , நெருப்பு, காற்று, மேகங்கள் சுற்றி கொண்டிருக்கும் வானம் (என்று பஞ்ச பூதங்களால் ஆன) புண் உடம்பை (வைத்து கொண்டு அடிக்கடி வரும்
உடல் நல கோளாறால்) எனக்குள்ளேயே புலம்பி (உடல்) தளர்ந்து மெலிந்து நொந்து ஒழிஞ்சி போயிட்டேன்! (பெருமாளே!) , வானத்தை தொடும் அளவுக்கு உயர்ந்த சிகரங்களை (கொண்ட) நல்ல மணம் வீசும் திருவேங்கடவா! (திருப்பதி கோவிந்தனாகிய) என் அண்ணா! (உன்னிடமே சரணடைய விரும்பி) வந்து அடைந்தேன். அடி பணிந்தவனை எடுத்து கொண்டு அருள் புரியணும். (please annaa!)

1034
தெரியேன் பாலகனாய்* பல தீமைகள் செய்துமிட்டேன்*
பெரியேன் ஆயின பின்* பிறர்க்கே உழைத்து ஏழை ஆனேன்*
கரி சேர் பூம்பொழில் சூழ்* கன மா மலை வேங்கடவா!*
அரியே! வந்து அடைந்தேன்* அடியேனை ஆட் கொண்டருளே.
1.9.7

விளக்கம்:-
சின்ன வயசுல விவரம் தெரியாம (பொண்ணுங்கள SIGHTஅடிக்கறது, திருடுறது, கண்மூடிதனமா ஊற சுத்துறது, இப்படியே இன்னும் பல) பல தீமைகள் செய்து விட்டேன். (சரி சின்ன வயசுலதான் இப்படின்னா!) பெரியவன் ஆன பின்பு பிறருக்காகவே உழைத்து (உழைத்து) ஏழை ஆகி விட்டேனே! யானைகள் (ஒன்று) சேரும் பூக்கள் நிறைந்த மரங்களும் செடிகளும் நிறைந்த குளிர்ந்த சோலைகள் சூழ்ந்துள்ள, மரியாதைக்கு உரிய உயர்ந்த மலை (மேல் வசிக்கும்) வேங்கடவா! (திருப்பதி கோவிந்தா!) அரியே! (உன்னிடம் சரணம் அடையவே) வந்து அடைந்தேன். அடி பணிந்தவனை முழுமையாக எடுத்து கொண்டு அருள் புரியணும்.(please iraivaa)

1035
நோற்றேன் பல் பிறவி* நுன்னைக் காண்பது ஓர் ஆசையினால்*
ஏற்றேன் இப் பிறப்பே* இடர் உற்றனன் எம்பெருமான்!*
கோல் தேன் பாய்ந்து ஒழுகும்* குளிர் சோலை சூழ் வேங்கடவா!*
ஆற்றேன் வந்து அடைந்தேன்* அடியேனை ஆட்கொண்டருளே.
1.9.8

விளக்கம்:-

உன்னை பார்க்க வேண்டும் என்ற ஆசையினால் பல பிறவியாய் தவம் செய்தேன். இந்த பிறப்பையும் ஏற்றேன். (இந்த பிறவியில்தான் உன்னை கண்டு கொண்டேன். இப்பிறவி என்னும்) துன்பம் (நீங்க உன்னை) அடைந்தேன் எம்பெருமானே! கொம்பு தேன் பாய்ந்து
ஒழுகும் குளிர்ந்த மரங்களும் செடி கொடிகளும் சூழ்ந்துள்ள (அழகான இடத்தில் வசிக்கும்) வேங்கடவா! (திருப்பதி கோவிந்தா! இவ்வுலகில் பிறந்து வருந்தினேன்)மன சுமையை பொறுக்க முடியலப்பா! (இனி பிறவாமல் இருக்க உன் பாதமே சரணம் சரணம் என்று ) வந்து அடைந்தேன். அடி பணிந்தவனை எடுத்து கொண்டு அருள் புரியணும். (please)

1036
பற்றேல் ஒன்றும் இலேன் * பாவமே செய்து பாவி ஆனேன்*
மற்றேல் ஒன்று அறியேன் * மாயனே! எங்கள் மாதவனே!*
கல் தேன் பாய்ந்து ஒழுகும்* கமலச் சுனை வேங்கடவா!*
அற்றேன் வந்து அடைந்தேன் * அடியேனை ஆட்கொண்டருளே.
1.9.9
விளக்கம்:-

(கோவிந்தா! உன் அழகான மலர் பாதத்தை தவிர எனக்கு வேறு) பற்று ஒன்றும் இல்லை. பாவங்களையே செய்து பாவி ஆனேன், (கோவிந்தா! நீயே எனக்கு அடைக்கலம் உன்னை தவிர) மற்றொன்று நான் அறியவில்லை. மாயனே! எங்கள் மாதவனே! (மலை மேலிருந்து) மலை தேன் பாய்ந்து ஒழுகும் (தித்திக்கும்) தாமரை குளங்கள் (நிறைந்த அழகான இடத்தில் வாழும்) வேங்கடவா! (திருப்பதி கோவிந்தா! உன்னை தவிர வேறு பற்று) இல்லாதவன் (நீயே சரணம் என்று) வந்து அடைந்தேன். அடியேனை எடுத்து கொண்டு அருள் புரியணும். (please)

1037
கண்ணாய் எழுலகுக்கு* உயிராய எங்கார் வண்ணனை*
விண்ணோர் தாம் பரவும்* பொழில் வேங்கட வேதியனை*
திண்ணார் மாடங்கள் சூழ்* திருமங்கையர் கோன் கலியன்*
பண்ணார் பாடல் பத்தும்* பயில்வார்க்கு இல்லை பாவங்களே.
1.9.10

விளக்கம்:-

ஏழு உலகுக்கும் கண்ணாகவும், உயிராகவும் (உள்ள) எங்கள் கரிய மேகம் போல வண்ணம் கொண்டவனை, விண்ணோர்கள் சுற்றி நின்று கொண்டு (ஆசையோடு வழிபடும்) மரங்களும் செடிகளும் நிறைந்த குளிர்ந்த (இடத்தில் வசிக்கும்) (வேதங்களின் ஹீரோவான) வேங்கட வேதியனை (திருப்பதி கோவிந்தனை)திடமான மாடங்கள் சூழ்ந்துள்ள திருமங்கை (நாட்டு) மன்னன் கலியன் இசையால் பாடிய (இந்த) பத்தும் கற்பவர்களுக்கு இல்லை பாவங்களே!

திருப்பதி ஏழுமலையானின் திருமங்கை ஆழ்வார் பாடிய 10 பாசுரங்களின் தூய தமிழ் சொற்களின் பொருள்.

விரையார் - மணம் பொருந்திய
வேயேய் - மூங்கில் புதர்
பூம் பொழில் - பூக்கள் நிறைந்த மரங்களும் செடிகளும் நிறைந்த குளிரிந்த சோலை
நல்கி - விரும்பி
ஆள் - ஆட்சி செய்தல்
மடவார் - இளமையுடைய பெண்
நானாவித - நாலாவிதம், பல விதமான
மா – பெரிய, உயர்ந்த
ஆன் - பசு, பெண் எருது, அவ்விடம், காளை
ஆய் - அழகு, நுண்மை, சிறுமை, இடையர் குலம்
ஆட்கொண்டு - முழுமையாக எடுத்து கொண்டு
உரைக்க - சொல்லுதல் , கூற
இரந்து - கெஞ்சி; மன்றாடு
அறியேன் - அறியாது
அதிர்- ஒலி, நடுக்கம்
எய்த்து – இளைத்து
அறம் - தருமம், புண்ணியம்
தோய் - படிதல், நனைதல்
நெறியார் - நிலையினையுடையவர்
நிலம் - பூமியின் மேற்பரப்பு
அலந்த - வாடிய
அலம் - துன்பம்
துப்பு - நல்லன, உணவு
நின் - உன்
ஏத்து - போற்று, புகழ்ந்து
கிற்கின்றிலேன் - சக்தி ஒன்றும் இல்லை
செப்பு - செம்பு, தாமிரம்
ஆர் - பொருந்திய, ஒலி
திண் - திடமான
வரை - மலை
எரி - நெருப்பு
கால் - காற்று
மஞ்சு - மேகம்
ஆகாசம் - வானம், ஆகாயம்
புண் - காயம்
ஆக்கை - உடல்
எய்த்து - இளைத்து
விண் - வானம்
நீள் - நீளமான, உயர்ந்த
விரையார் - மணம் பொருந்திய
பாலகன் - கற்று குட்டி, சிறியவன், இளையவன், குழந்தை
கரி - யானை
பூம் பொழில் - பூக்கள் நிறைந்த மரங்களும் செடிகளும் நிறைந்த குளிர்ந்த சோலை
கனம் - பாரம், எடையின் அளவு, மரியாதைக்கு உரிய
நுன்னை - உன்னை
நோற்றது - தவம் செய்தது;
நோற்றேன் - தவம் செய்தேன்
இடர் - துயரம், துன்பம்,வறுமை
ஆற்று - மனசுமையை பிறரிடம் கூறி குறைத்து கொள்ளுதல்
ஆற்றார் - வலியரல்லாதவர், வறுமையுடையவர், பொறுக்க மாட்டாதவர்
ஆற்றேன் - கவலை, இழப்பு இவற்றை பொறுக்க முடியாதவன் (தாங்க முடியாதவன்)
கோல் - கொம்பு
உற்றனன் - அடைந்தான்
சோலை - குளிர்ந்த மரங்களும் செடி கொடிகளும் நிறைந்த இடம்
பற்றேல் - பிடித்தல், ஆதாரம், பிடிமானம்
மற்றேல் - மற்றபடி
அறியேன் - அறியாது
கல் தேன் - மலை தேன் என்றும் சொல்லலாம்
கமலச்சுனை - தாமரை குளம்
அற்றேன் - இல்லாதவன்
கார் - கரிய , மேகம் , மழை கால நெற்பயிர்
திண் - திடமான
பொழில் - சோலை, தோட்டம், மரங்களும் செடிகளும் உள்ள குளிர்ச்சியான இடம்
பரவி - சுற்றிலும், படர்தல், பரவுதல்
கோன் - அரசன்
கலியன் - போர்வீரன், திருமங்கை ஆழ்வார்
பண் - இசை, இசை பாட்டு
பயில்வார் - கற்பவர், படிப்பவர்


திருப்பதி கோவிந்தனுக்கு சமர்ப்பணம்!
கோவிந்தா! கோவிந்தா! கோவிந்தா!

Friday, October 8, 2010

திருவேங்கடம் அடை நெஞ்சமே*! - திருமங்கை ஆழ்வார் (1018-1127)


திருப்பதி ஏழுமலையான்


பெரிய திருமொழி


1018
கொங்கு அலர்ந்த மலர் குருந்தம் ஒசித்த* கோவலன் எம்பிரான்*
சங்கு தங்கு தடங்கடல்* துயில் கொண்ட தாமரைக் கண்ணினன்*
பொங்கு புள்ளினை வாய்ப் பிளந்த* புராணர் தம்மிடம்*
பொங்கு நீர் செங்கயல் திளைக்கும் சுனைத்* திருவேங்கடம் அடை நெஞ்சமே*!. 1.8.1

விளக்கம்:-

(கண்ணனை கொல்ல கம்சன் அனுப்பிய அசுரன் குருந்த மரமாக மாறி நின்றான்!) நல்ல
வாசனையுள்ள மலர்களையுடைய குருந்த(மரத்தை) ஒடித்த எம் கிருஷ்ணன்
எம் இனிய இறைவன் , சங்குகள் தங்கியிருக்கின்ற பெரிய கடலில் ஹாயாக (தூங்குவது போல நடித்து உள்ளுக்குள் நம்மை கவனத்துடன் பார்த்து கொண்டே பாதி கண்கள் மூடியவாறு)படுத்து கொண்டுள்ள தாமரை (மலர் போல அழகான குளிர்ந்த) கண்களுடையவனும்,(கண்ணனை கொல்ல வேறு வடிவில் வந்த அசுரனை அதாவது) பொங்கி வந்த கொக்கின்வாயை பிளந்த பழமைக்கும் (பழமையாய் புதுமைக்கும் புதுமையாய் உள்ள ஆதியும்அந்தமும் இல்லாத பரம்பொருள்) இருக்குமிடம்), பொங்கி வரும் நீரில் கொழுத்த மீன்கள் (மகிழ்ச்சியுடன் துள்ளி விளையாடும்) குளங்களும் (அருவிகளும் நிறைந்துள்ள) திருவேங்கடம் தயவு செய்து தித்திக்கும் கரும்பான என் ஏழுமலையான் வாசம் செய்யும் இடமான திருப்பதி) அடை நெஞ்சமே!

1019
பள்ளியாவது பாற்கடல் அரங்கம்* இரங்க வன் பேய்முலை*
பிள்ளையாய் உயிருண்ட எந்தை* பிரான் அவன் பெருகும் இடம்*
வெள்ளியான் கரியான்* மணி நிற வண்ணன் என்று எண்ணி*நாள்தொறும்
தெள்ளியார் வணங்கும் மலைத்* திருவேங்கடம் அடை நெஞ்சமே*!. 1.8.2

விளக்கம்:-

(என் இனியவன் இறைவன்) பள்ளி கொண்டிருக்கும் (இடங்கள்) பாற்கடல், ஸ்ரீரங்கம் (அப்படி படுத்து கொண்டிருந்தவன் கிருஷ்ணா அவதாரத்திலே கெட்ட எண்ணத்துடன் கண்ணனை
கொல்ல கம்சன் அனுப்பிய பூதனை என்பவள் ஒரு சமயத்தில் குழந்தை கண்ணன்
அழும்போது அம்மா போல நடித்து கண்ணன் அழுவதை பார்த்து விஷ பாலை கொடுக்க வந்தவளை) கதற (கதற) கொடிய பேயின் முலையை (வாயில் பற்றிக்கொண்டே
சிறு) பிள்ளையாய் (ஒன்றும் தெரியாதது போல அவள்) உயிரையும் உண்ட
என் தந்தை(யாகிய) இறைவன் வளரும் இடம், வெள்ளியானே,கரியவனே ,(நீல) மணி வண்ணனே! என்று எண்ணி நாள்தோறும் தெளிந்த (அறிவுடையோர்) வணங்கும் மலை திருவேங்கடம்(தயவு செய்து தித்திக்கும் கற்கண்டு என் ஏழுமலையான் வாசம் செய்யும் இடமான திருப்பதி) அடை நெஞ்சமே!

1020
நின்ற மா மருது இற்று வீழ* நடந்த நின்மலன் நேமியான்*,
என்றும் வானவர்க் கைதொழும்* இணைத் தாமரையடி எம்பிரான்*
கன்றி மாரி பொழிந்திடக்* கடிது ஆநிரைக்கு இடர் நீக்குவான்*,
சென்று குன்றம் எடுத்தவன்* திருவேங்கடம் அடை நெஞ்சமே*!. 1.8.3

விளக்கம்:-

(முன்பு இருவர் செய்த மகா தவறுக்காக சாபம் பெற்று பல காலமாக இருவரும் மரங்களாக மாறி நின்றனர். ஒரு சமயத்தில் இறைவன் கிருஷ்ணா அவதாரம் எடுத்த போது குழந்தை பருவத்தில் வெண்ணை திருடி சாப்பிட்டதால் யசோதை அம்மாவால் உரலால் கட்டப்பட்ட
குட்டி கண்ணன் இருவரின் சாபம் நீக்க உரலில் கட்டப்பட்ட கயிற்றை அவிழ்ப்பது போல)
நின்ற பெரிய மருத (மரங்கள்) ஒடிந்து விழும்படி (இரு மரத்திற்கும் இடையில்)நடந்த
மாசற்றவன், (அழகான) சக்கரத்தை (கையிலே) கொண்டிருப்பவன், என்றுமே வானத்தில் (உள்ளவர்களும்) கை (எடுத்து கும்பிட்டு) வணங்கும் தாமரை மலருக்கு இணையாக
(அழகான) பாதத்தை (உடைய) எம் இறைவன், (ஒரு சமயம் இந்திரனின் கோபத்தால் பலத்த) மழை பெய்ய , (உடனே) வேகமாக சென்று பசு கூட்டங்களின் துன்பத்தை நீக்கினான்.
(பசுக்களை மழை தாக்காதவாறு உடனே) சென்று மலையை (குடையாக) தூக்கியவன் (வசிக்கும் இடம்) திருவேங்கடம் (தயவு செய்து மனமே! தித்திக்கும் சக்கரகட்டி என் ஏழுமலையான் வாசம் செய்யும் இடமான திருப்பதி) அடை நெஞ்சமே!

1021
பார்த்தர்க்காய் அன்று பாரதம் கை செய்திட்டு* வென்ற பரஞ்சுடர்*
கொத்து அங்கு ஆயர் தம் பாடியில்* குரவை பிணைந்த எம் கோவலன்*
ஏத்துவார் தம் மனத்துள்ளான்* இடவெந்தை மேவிய எம்பிரான்*
தீர்த்த நீர் தடம் சோலை சூழ்* திருவேங்கடம் அடை நெஞ்சமே*.! 1.8.4


விளக்கம்:-

அர்ச்சுனனுக்காக அன்று (நடந்த) பாரத போரில் (தேர் ஓட்டுபவனாக இருந்து அவர்களுக்கு உதவியாக) கை கொடுத்து வென்ற எல்லையில்லா ஒளி உடைய இறைவன், (என்ன செஞ்சான்னா) தன்னோட ஊரில் பசு மேய்ப்பவர்களோடு சேர்ந்து கைகோர்த்து (ஆனந்தமாக விளையாடிய குட்டி) கண்ணன், (பாசத்தோடு) போற்றி வழிபடுபவர்களின் மனசுல உள்ளான்.
(அது தவிர) திருவிடவெந்தை(யிலும்) பரவிய எம் இறைவன் (வசிக்கும் இடம்), புனிதமான நீருடைய குளங்களும், சோலைகளும் சூழ்ந்த (அழகான) திருவேங்கடம், (தயவு செய்து தித்திக்கும் வெல்ல கட்டி என் ஏழுமலையான் வாசம் செய்யும் திருப்பதி)
அடை நெஞ்சமே!

1022
வண் கையான் அவுணர்க்கு நாயகன்* வேள்வியில் சென்று மாணியாய்**
மண் கையால் இரந்தான்* மராமரம் ஏழும் எய்த வலத்தினான்**
எண் கையான் இமயத்துள்ளான்* இருஞ்சோலை மேவிய எம்பிரான்**
திண் கைம்மா துயர் தீர்த்தவன்* திருவேங்கடம் அடை நெஞ்சமே*!. 1.8.5

விளக்கம்:-

பிறருக்கு கொடுத்து உதவும் கைகளை உடையவனும் அசுரர்களுக்கு ஹீரோவான (மகாபலி நடத்திய) வேள்வியில் (குள்ளமான வாமன அவதாரம் எடுத்து) சென்று மண் (ஒட்டியுள்ள) கைகளை (ஏந்தி மூன்று அடி மண் தருவாயா! என்று) கெஞ்சி கேட்ட (உலகளந்த பெருமாள் இராம அவதாரம் எடுத்து, தன்னோட வில் திறமையால் ஒரே சமயத்தில்) ஏழு மரா மரங்களை (அம்பு) விட்டு வீழ்த்திய வலபக்க (தோளில்) அம்பை வைத்துள்ள (இராமன்) எண்ணற்ற கைகளை உடையவன், இமயமலையில் உள்ளான், (அது தவிர) திருமாலிருஞ்சோலையிலும் பரவிய எம் இறைவன், வலிமையான கனத்த தும்பிக்கையுடைய (யானை முன்பு பெருமாளுக்கு பூவை குளத்தில் இருந்து எடுத்து வரும் போது முதலை யானையின் காலை பிடித்து கடிக்க, பெருமாளுக்கு பூ வைக்க வேண்டுமே என்ற ஆசையில் கால் போனாலும் பரவாயில்லை பெருமாளுக்கு வைக்கும் பூவை காப்பாற்ற வேண்டுமே என்ற எண்ணத்தில் பூவை தும்பிக்கையில் தூக்கி வைத்து கொண்டு (ஆதி மூலமே!) என்று எண்ணி யானை பிளிற உடனே கருட வாகனத்தில் யானையின் முன் தோன்றி முதலை
பிடியில் இருந்து யானையின்) துன்பத்தை தீர்த்தவன் (எம் இறைவன் அவன் வசிக்கும் இடம்) திருவேங்கடம், (தயவு செய்து தித்திக்கும் திருபாதம் என் ஏழுமலையான் வாசம்
செய்யும் திருப்பதி) அடை நெஞ்சமே!



1023
எண் திசைகளும் ஏழுலகமும் வாங்கிப்* பொன் வயிற்றில் பெய்து*
பண்டு ஓர் ஆல் இலைப் பள்ளி கொண்டவன்* பால் மதிக்கு இடர் தீர்த்தவன்*
ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன்* ஒள் எயிற்றோடு*
திண் திறல் அரி ஆயவன்* திருவேங்கடம் அடை நெஞ்சமே*. 1.8.6


விளக்கம்:-

மிகவும் பழமை வாய்ந்த காலத்தில் (எல்லா உலகங்களும் பெரிய அழிவுக்கு உண்டான
போது) எட்டு திசைகளையும், ஏழு உலகங்களையும் தூக்கி (அப்படியே அல்வா சாப்பிடறா
மாதிரி விழுங்கி தன்னோட) தங்கமான வயிற்றில் வைத்து ஒரு அரச இலையின் மீது
படுத்து கொண்டவன் (என் செல்ல கண்ணன்) , பாலை போல வெள்ளை நிறமுடைய நிலா (முன்பு செய்த தவறால் சாபம் வாங்கிடிச்சு! சந்திரனின் சாபம் நீக்கி) துன்பத்தை
தீர்த்தவனும் (என் ஆனந்த கண்ணன்) ,ஜிம் பாடி கணக்கா நல்ல வலிமை பொருந்திய அசுரன் (இரணியனின்) மார்பில் கூரான நகங்களை வைத்தவன் (யார் தெரியுமா!) ஒளியுடைய நல்லா பள பளன்னு கூரான பற்களோடு வாட்ட சாட்டமா
மிக வலிமையுடன் (தூணிலிருந்து வெளிவந்த என் ஆசிரியர் எமக்கு இறைவனுமான)
நரசிம்ம பெருமாள் ஆனவர்! (வசிக்கும் இடம்) திருவேங்கடம், (தயவு செய்து
தித்திக்கும் அக்கரக்கனி அமுது என் ஏழுமலையான் வாசம் செய்யும் வாசம் செய்யும் இடமான திருப்பதி) அடை நெஞ்சமே!

1024
பாரு நீர் எரி காற்றினொடு* ஆகாசமும் இவை ஆயினான்*,
பேரும் ஆயிரம் பேசநின்ற* பிறப்பிலி பெருகுமிடம்,*
காரும் வார்ப் பனி நீள் விசும்பிடைச்* சோரு மாமுகில் தோய்தர*,
சேரும் வார்ப் பொழில் சூழ்* எழில் திருவேங்கடமடை நெஞ்சமே*. 1.8.7


விளக்கம்:-

உலகமும் உலகத்திலுள்ள நிலம், நீர், நெருப்பு காற்றினோடு ஆகாயமும் இவைகள் (எல்லாமும்) ஆகினான், (அதுமட்டுமா௧) பெயரும் ஆயிரம் என்று (இனிய வாயினால்) சொல்லும்படி நின்ற பிறப்பில்லாதவன் (ஆதி இறைவன்) நிறைந்துள்ள இடம், (மேகங்கள்
சூழ்ந்த) கரிய பெரிய நீளமான வானத்தில் (இருந்து) பனி (உருகி) ஊற்றி கொண்டிருக்க, (வானத்திலேயே சுற்றி கொண்டிருப்பதால்) சோர்வடைந்த பெரிய மேகங்கள்
( மலை மேலே) படிந்து (ஓய்வெடுப்பது போல போல காட்சி) தர (அதனோடு) சேர்ந்து
(சுற்றிலும்) பெரிய சோலைகள் சூழ்ந்த அழகான திருவேங்கடம் (தயவு செய்து தித்திக்கும்
தேன் சாரல் என் ஏழுமலையான் வாசம் செய்யும் திருப்பதி) அடை நெஞ்சமே

1025
அம்பரம் அனல் கால் நிலம்* சலம் ஆகி நின்ற அமரர் கோன்*
வம்புலாம் அலர் மேல்* மலி மடமங்கை தன் கொழுநன் அவன்*
கொம்பின் அன்ன இடை மடக் குற மாதர்* நீள் இதணம் தொறும் *
செம் புனம் அவை காவல் கொள் திருவேங்கடம் அடை நெஞ்சமே*!. 1.8.8

விளக்கம்:-

வானம், தீ காற்று , நிலம், நீர் (இவைகள் எல்லாமும்) ஆகி நின்ற தெய்வங்களின்
அரசனானவன்,எங்கும் கம கமன்னு நல்ல வாசனை பரவி உள்ள மலர் மேல் (அமர்ந்திருக்கும்) மிகவும் இளமையுள்ள (அழகான) பெண் (மகாலட்சுமியின்) கணவன் அவன் (வசிக்கும் இடம் எப்படின்னா!) பூக்கள் நிறைந்த (செடியின்) கொம்புகள் வளைஞ்சி வளைஞ்சி ஆடுறது போல அன்னம் போல மெதுவா தலுக் தலுக்க்னு ஆடுற அழகான மெல்லிய இடையை கொண்டஇளமையுள்ள குறி சொல்லும் பெண்கள், உயர்ந்த பரண் தோறும் இருந்து கொண்டுசெழுமையான வயல்களை (தீயவை நெருங்காதவாறு) காவல் கொண்டுள்ள திருவேங்கடம். (ஆஹா! தயவு செய்து மனமே! இவ்ளோ அழகான மலை! அவன் உதடு மேல் நம் உதடுவைத்து (kiss பண்ணா!) தித்திக்கும் செர்ரி பழம் போல சிவந்த இதழ்களை கொண்ட என் ஏழுமலையான் வாசம் செய்யும் திருப்பதி) அடை நெஞ்மே!

1026
பேசுமின் திருநாமம் எட்டெழுத்தும்* சொல்லி நின்று பின்னரும்*
பேசுவார் தம்மை உய்ய வாங்கிப்* பிறப்பறுக்கும் பிரானிடம்*
வாச மா மலர் நாறு வார் பொழில்* சூழ் தரும் உலகுக்கெல்லாம்*
தேசமாய்த் திகழும் மலை* திருவேங்கடம் அடை நெஞ்சமே*!. 1.8.9


விளக்கம்:-

(பொதுவாக எல்லாராலும் பெரிதும்) பேசப்படும் (ஓம் நமோ நாராயணா! என்னும்) எட்டு
எழுத்து திரு நாமத்தை சொல்லி சொல்லி கொண்டும் (அதன்) பின்னரும் (பெருமாளை பற்றியே) பேசி கொண்டிருப்பவர்களை (நல்ல விதமாக) வாழும்படி காப்பாற்றி (அவர்களை தான்) எடுத்து கொண்டு பிறப்பை அறுக்கும் பிரியமான (இறைவன்) இடம், நல்ல வாசனையுள்ள பெரிய பெரிய (அழகான) மலர்களாலும், கம கமக்கும் நீண்ட (மரங்களும் செடி கொடிகளும் கொண்ட குளிர்ச்சியான) சோலைகளாலும் சூழ்ந்து (காட்சி) தருவதோடு, உலகுக்கெல்லாம் (திலகம் போன்று சிறந்த) திருநாடாய் திகழும் மலை திருவேங்கடம், (தயவு செய்து தித்திக்கும் லட்டு என் ஏழுமலையான் வாசம் செய்யும் திருப்பதி) அடை நெஞ்சமே

1027
செங்கயல் திளைக்கும் சுனைத்* திருவேங்கடத்து உறை செல்வனை*
மங்கையர் தலைவன் கலிகன்றி* வண் தமிழ் செஞ்சொல் மாலைகள்*
சங்கை இன்றித் தரித்து உரைக்க வல்லார்கள்* தஞ்சம் அதாகவே *
வங்க மா கடல் வையம் காவலராகி* வானுலகு ஆள்வரே*!. 1.8.10


விளக்கம்:-

சிவந்த (செழுமையான) கயல் மீன்கள் (மகிழ்ச்சியுடன் துள்ளி விளையாடும் அழகான) குளங்களையும் (அருவிகளையும் உடைய) திருவேங்கடத்தில் வசிக்கும் (என்) பொக்கிஷம் (ஏழுமலையானை) திருமங்கை நாட்டு தலைவன் கலிகன்றி வண்ணமயமான (அழகான)
தமிழில் (கூறிய இனிமையான) இலக்கண சொல்லால் (ஆன புகழ்) மாலையை (பலனை எதிர்ப்பார்க்காமல் அவன் ஏற்பானா ஏற்க மாட்டானா! என்ற) சந்தேகம் இல்லாமல் (தெளிவாக நமக்கு) அடைக்கலம் பெருமாளே! என்று பாசத்தோடு சொல்ல ஆற்றல் (உடையவர்கள்) கப்பல்களை கொண்டுள்ள பெரிய கடல் சூழ்ந்த உலகத்துக்கு காவலர் ஆகி,(பின்பு) வான் உலகமும் ஆட்சி செய்வார்கள்!


திருப்பதி ஏழுமலையானின் திருமங்கை ஆழ்வார் பாடிய பாசுரங்களின் தூய தமிழின் விளக்கம்!

பார்த்தன் - அருச்சுனன்
புள் - பறவை
திளைத்து : கலந்து : பொருந்தியவள்
செங்கயல் - கொழுத்த மீன்கள்
குருந்து - குருந்த மரம்
ஒசித்த – ஒடித்த
கொங்கு - வாசனை
அலர்ந்த - வளமான , மலர்ந்த
தடங்கடல் – பெரிய கடல்.
எந்தை – என்தந்தை
கோவலன் - கிருஷ்ண பரமாத்மா
தெள்ளியார் - தெளிந்த அறிவுடையவர்
சுனை - மலை ஊற்று, குளம்
புராணம் - பழமைக்குப் பழமையாய் புதுமைக்குப் புதுமையாய் இருப்பவன் பரம் பொருள்
பிரான் - தலைவன், கடவுள்; சிவன்; திருமால்
வெள்ளி - வான் மண்டலத்திலுள்ள ஒரு நட்சத்திரம்.Or ஒரு உலோக வகை.
இரங்கு - தயை செய்; இரக்கம் கொள்; அழு; வருந்து பரிதவி:
பள்ளிகொள்ளுதல் - படுத்தல்
அமலன், விமலன், நிமலன், நின்மலன் - நான்கு பதங்களும் மாசற்றவன்
நின்மலன் - அடியார்களுக்கு செய்யும் உபகாரத்தை "அவர்கள் பேறு பெறுவதற்காக" செய்வதாக நினைக்கும் குறை இல்லாதவன்.
அதாவது அடியார்களுக்கு செய்யும் உபகாரத்தை கூட தன் பேறாக எண்ணி செய்கிறான்
நின்மலம் _ மாசின்மை.
நின்மலன் _ கடவுள் :.
நேமியான் - சக்கரத்தை கையிலே கொண்டிருப்பவன்
வீழ - விழ
கன்றுதல் - முதிர்தல், அடிபடுதல், குறைதல், சினக் குறிப்புக் காண்பித்தல்,
கடிது - விரைவாக
ஆநிரை – பசுக்கூட்டம்
இடர் – துன்பம்
பார்த்தன் (அர்ச்சுனன்)
பயன்பாடு பாரதம், பழமையான பண்பாடுகள் கொண்ட நாடு.
பரஞ்சுடர் - ஒப்பற்ற ஒளியுடைய முழு முதற்கடவுள்
ஆயர் - ஆடு மாடுகளை மேய்ப்பவர்
பாடி – ஊர்
குரவை = கைகோத்தாடுதல்
கோவலன் – இனங்காப்பார்
கோவலன் - கிருஷ்ண பரமாத்மா
ஏத்து – போற்று
மேவி - பரவி - அல்லது கலந்து
தடம் – குளம், பாதை
தீர்த்தம் - புனித நீர்
அவுணர் – அசுரர்
மாணி - திருமாலின் வாமன அவதாரத்தைக் குறிக்கும்
இரந்து - கெஞ்சி; மன்றாடு.வண் கை - ஈகை, கொடை பொருள் உதவி
ஒண் - ஒண்ணு .பொருந்து
எண் - எண்ணம், எட்டு, எண்ணற்ற
திண் - திடமான
ஆலிலை - ஆலமரத்து இலை
மதி - நிலா
திறல் - வலிமை.
உரம் - மார்பு
உகிர் – நகம்
ஒள் ஒளி
எயிற்று - பல்,
அரி – சிம்மம்
ஆய - ஆகிய
பார் - நிலம், உலகம்
பிறப்பிலி - பிறப்பில்லாதவன்
கார் - கரிய , மேகம் , மழை கால நெற்பயிர்
வார் - ஊற்றுதல் நீண்ட
நீள் - நீளமான
விசும்பு - வானம்
இடை - இடுப்பு, நடு, மத்தி
சோர் - சோரென்னேவல் : சோர்வு : வஞ்சகம்
மாமுகில் - பெரிய மேகங்கள்
தோய் - படிதல், நனைதல்
சேர் - ஒன்றோடு ஒன்று இணையும் செயல்
பொழில் – மழைக்காடு, சோலை, மரங்களும் செடி கொடிகளும் நிறைந்த குளிர்ச்சியான இடம்
எழில் - அழகான
வார் பொழில் – நீண்ட சோலை
தோய்தர - பொருந்த
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வம்பு - மணம்
அலர் - பூ, மலர்
மலி - மிகுந்த
மடம் - இளமையுமுடைய,
மங்கை – பெண்
கொம்பின்- பூங்கொம்பு
இதணம் – பரண்
புனம் – காடு , வயல்
கொழுநன் - கணவன்
அம்பரம் - வானம்
அனல் - தீ
கால் - காற்று
சலம் - நீர்
அமரர் - தேவர்
கோன் –, அரசன்
உய்ய – வாழ
நாறு - வாசம்
திளைத்து : கலந்து : பொருந்தியவள்
உறை = வசிக்கும் .
சங்கை - அச்சம், பயம்
தரித்து - அணிந்து
உரைக்க - சொல்லுதல் , கூற
வல்லமை - ஆற்றல், சக்தி, பெரும்வலிமை
தஞ்சம் - அடைக்கலம்
வங்கம் - மரக்கலம்,கப்பல்
வையம் - உலகம்
செஞ்சொல் மாலை – இலக்கணசொல், புகழ் மாலை




ஏழுமலையானுக்கு சமர்ப்பணம்!
கோவிந்தா! கோவிந்தா! கோவிந்தா!