பொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா? "ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா! நோaயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்.

Tuesday, January 5, 2016

நரசிம்மா நரசிம்மா ஓங்கார நரசிம்மா!!






நரசிம்மா நரசிம்மா ஓங்கார நரசிம்மா
ஓங்கார நரசிம்மா ரீங்கார பரப்ரம்மா
பக்த ரட்சகா நரசிம்மா
பரப்ரம்ம ரூபா நரசிம்மா (நரசிம்மா)

பாதம் பணிகிறேன் நரசிம்மா இந்தப்
பாவி என்னை காப்பாய் நரசிம்மா
 கதறி அழுகிறேன் நரசிம்மா
கவலைகள் தீர்த்திடுவாய் நரசிம்மா  (நரசிம்மா)

என்னை  ஆளும்  கண்ணனே  நரசிம்மா
எந்நாளும் அருள்வாய் நரசிம்மா
அமிர்தவல்லி நாயகனே நரசிம்மா
அச்சமெல்லாம் தீர்த்திடுவாய் நரசிம்மா (நரசிம்மா)

கடிகை  மலை மீதமர்ந்த நரசிம்மா
கண் திறந்து பாராயோ நரசிம்மா
உன்னை விட்டால் கதியில்லை நரசிம்மா
உன் பாதம் சரணடைந்தேன் நரசிம்மா (நரசிம்மா)

No comments: