பொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா? "ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா! நோaயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்.

Monday, January 4, 2016

நரசிம்மா நரசிம்மா நரசிம்மா என்போம்!!




நரசிம்மா நரசிம்மா நரசிம்மா என்போம்
நன்மை தரும் நாமமதே  நரசிம்மா என்போம்

வரம் அருளும் நலம் அருளும்  வைஷ்ணவத்தின் நாமம்
வல்லமையும் செல்வாக்கும்  வழங்குகின்ற நாமம்  (நரசிம்மா)

இரவு பகல் உடனிருந்து  உதவுகின்ற நாமம்
இதயத்திலே கோயில் கொண்டு  எழுந்தருளும் நாமம் (நரசிம்மா)

பரந்தாமன்  என்று உலகில் பரந்திருக்கும் நாமம்
பக்தரிடம் பரிவு கொண்ட பரம்பொருளின் நாமம் (நரசிம்மா)

நிரந்தரமாய் நெஞ்சினிலே நிலைத்து  நிற்கும் நாமம்
நிம்மதியும் நிர்மலமும் வழங்குகின்ற நாமம் (நரசிம்மா)

கரம் குவித்து வணங்கிடுவோர் களிப்படையும்  நாமம்
கடிகையிலே கோவில் கொண்ட கருணை மிக்க நாமம் (நரசிம்மா)

சரணமென்று தாள் பணிந்தால் மணமகிழும் நாமம்
சந்தோஷ வாழ்வு தரும் சக்ரதாரி நாமம் (நரசிம்மா)

நரசிம்மன் என்று உலகில் புகழ் படைத்த நாமம்
நம்பினோரை கைவிடாத நாராயணின் நாமம் (நரசிம்மா)

No comments: