பொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா? "ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா! நோaயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்.

Wednesday, September 21, 2011

அழகான பெண்கள் மலர் தூவ ஆயர்பாடியில் வரும் கண்ணன் சிதம்பரத்தில் கோவிந்தராஜனாக தரிசனம் தருகிறானே! - 2


1169
பேய் மகள் கொங்கை நஞ்சு உண்ட* பிள்ளை பரிசு இது என்றால்*
மா நில மா மகள்* மாதர் கேள்வன் இவன் என்றும்* வண்டு உண்
பூ மகள் நாயகன் என்றும்* புலன் கெழு கோவியர் பாடித்*
தே மலர் தூவ வருவான்* சித்ரகூடத்துள்ளானே * 3.3.2

விளக்கம்:-
பேயாக வந்த பெண்ணின் முலையில் தடவியிருந்த விஷத்தை உண்ட இந்த பிள்ளை  
யசோதைக்கு கிடைத்த பரிசு  என்று சொல்லவும், பூமி தாயாரின் கணவன் என்றும், வண்டுகள்
தேன் உண்ணும் தாமரை மலரில் பிறந்த மகாலட்சுமிக்கு நாயகன் என்றும், அழகுடைய 
பசு மேய்க்கும் பெண்கள் பாடி கொண்டு  தேன் நிறைந்த மலர்கள் தூவ ஆயர்பாடியிலே 
வருபவன் சிதம்பரம் எனப்படும் தில்லை சித்ரகூடத்துள்ளானே!



மேலும் தெரிந்து கொள்ள விரும்பினால்:-
பேய் மகள் கொங்கை நஞ்சு உண்ட - பேய் பெண்ணின் முலையில் விஷம் உண்ட 

பிள்ளை பரிசு இது என்றால் - பிள்ளை பரிசு இது என்று சொன்னால் (இன்னொரு பக்கம்) 
மா நில மா மகள் மாதர் - பூமி தாயாரின் 
கேள்வன் இவன் என்றும் - அன்புக்கு உரியவன் இவன் என்றும் 
வண்டு உண் பூ மகள் நாயகன் என்றும் - வண்டுகள் (தேன்) உண்ணும் (தாமரை) பூ(வில்) 
பிறந்த பெண் (மகாலட்சுமியின்) நாயகன் என்றும் 
புலன் கெழு கோவியர் பாடித் - கண், காது, மூக்கு, நாக்கு, தோல் இவைகள் நல்ல நிறமுடைய
(அழகான) பசு மேக்கும் பெண்கள் பாடி 
தே மலர் தூவ வருவான் - தேன் (நிறைந்த) மலர்கள் தூவ வருகின்ற (பெருமாள்) 
சித்ரகூடத்துள்ளானே - சித்ரகூடத்துள்ளானே 





அருமையான பாசுரத்தில் வரும் கதை
"
பூதனை பேயை கொன்ற கண்ணன்"
குழந்தைக் கண்ணனைக் கொல்வதற்காக, கம்சனால் அனுப்பப்பட்டவள் தான் இந்த பூதனை என்னும் அரக்கி. அவள், தன் பேயுருவத்தை மாற்றி மானுடப் பெண்ணைப் போல் உருமாறி கண்ணனின் மாளிகைக்கு வந்தாள். அழுது கொண்டிருந்த பிள்ளையை கொஞ்சுவது போல், அவள் குழந்தைக் கண்ணனுக்கு விஷம் கலந்த தாய்ப்பாலைக் கொடுத்து கொன்றுவிடலாம் என்று எண்ணி, குழந்தைக்கு தாயமுது கொடுத்தாள். கண்ணனோ, பூதகியிடம் தாய்ப்பால் குடிப்பது போல் பாவனை செய்து, அவள் உயிரையும் அவ்வழியே குடித்துவிட்டான்.


No comments: