பொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா? "ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா! நோaயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்.

Tuesday, July 13, 2010

நரசிம்மரின் நாலாயிரம்




ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருவடிகளை பற்றி ஆரம்பிக்கிறேன்.

நரசிம்மர் பாசுரம் நாலாயிரம் சொல்றேனே என்று நினைகிறீங்களா!
ஆழ்வார்கள் பெருமாள் மேல் சொல்லப்பட்ட பாசுரங்கள் நாலாயிர திவ்ய பிரபந்தம்.
நரசிம்மர் யாரு ஸ்ரீமன் நாராயணன் அப்படின்னா நரசிம்மரின் நாலாயிரம் சொல்வதில் தவறு இல்லையே!

ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன் கோவிலின் பதிவிலேயே காலத்தை ஒட்டி விடலாம் என்று நினைத்து இருந்தேன் .

பெருமாள் விடுவாரா! அதான் சொல்றாங்களே பெரியவங்க வாலிபம் 20 ஆண்டுகள் விவரம் தெரியாமல் கடந்து விடுகிறது. தூக்கத்தில் பாதி காலம் கடந்து விடுகிறது . எஞ்சியது சில ஆண்டுகளே அந்த சிறிது ஆண்டுக்குள் வீணாக்காமல் உருப்படியா எதாச்சும் பண்ணலாமே என்றுதான் பெருமாளின் பாசுரங்களை விளக்கலாம் என்று முடிவெடுத்து உள்ளேன்.

உண்மைய சொல்லனும்னா எனக்கு தூய தமிழ் அவ்வளவா தெரியாது. இருந்தாலும் நான் படித்து கொண்டிருக்கிற நாலாயிர திவ்ய பிரபாந்த புத்தகத்தில் இருந்து ஆழ்வார் பாசுரங்களை இன்னும் எளிமையாக எனக்கு தெரிந்த வரையில் கொடுக்கிறேன்.
நான்கு வரி பாசுரத்திற்கு நான்கு வரி எளிய (localaa) விளக்கம்.

உதாரணம்.

குலந்தரும் செல்வம் தந்திடும்
அடியார் படுதுயர் ஆயினவெல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள் விசும்பருளும்
அருளோடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும்
பெற்ற தாயினும்ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமமே


விளக்கம்

நல்ல சொந்தங்களை தரும் , நிறைய செல்வம் கொடுக்கும் நம்ம கஷ்டங்களை தரை மட்டமாக்கும் . பரமபதத்தை கொடுக்கும் (அதாம்பா மோட்சம் வைகுண்டம் சொல்றாங்களே பெருமாள் இருக்குமிடம் ) , நமக்கு நல்ல அருளோடு தொண்டு செய்யும் வாய்ப்பையும் கொடுக்கும் . சும்மா ஆஞ்சநேயர் போல வலிமையை கொடுக்கும் . நல்லது எல்லாமே கொடுக்கும் . அட நம்ம பெற்ற அம்மாவை விட அதிக பாசம் பரிவு இன்னும் நிறைய செய்யும் . (இதெல்லாம் யாருப்பா செய்யறது! வேற யாரு இதோ )
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்.

புரிஞ்சிதுங்களா இப்படிதாங்க எளிய விளக்கம் தரலாம் என்று இருக்கிறேன் .

சொல் குற்றமோ பொருள் குற்றமோ இருந்தால் தெரிந்த அன்பர்கள் சுட்டி காட்டுங்கப்பா!

முதலில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மரின் நல் ஆசியோடு திருமங்கை ஆழ்வார் பாசுரங்களை இனி வரும் பதிவுகளில் பார்க்கலாம் .

அதற்கு முன்பு அவரை வாழ்த்தி பாடுவோம் . அதான் தனியன் என்று சொல்றாங்களே அதேதானுங்க!
ரெடி ஜூட்!

வாழி பரகாலன்!வாழி கலிகன்றி! வாழி குறையலூர் வாழ் வேந்தன் வாழியரோ
மாயோனை வாள்வலியால் மந்திரங்கொள் மங்கையர் கோன் தூயோன் சுடர் மான வேல்!

- எம்பெருமானார்

நெஞ்சுக்கு இருள்கடி தீபம்--- அடங்கா நெடும் பிறவி
நஞ்சுக்கு நல்ல அமுதம்--- தமிழ் நன்னூல் துறைகள்
அஞ்சுக்கு இலக்கியம், ஆரண சாரம், பரசமயப்
பஞ்சுக்கு அனலின் பொறி --- பரகாலன் பனுவல்களே

- கூரத்து ஆழ்வான்

எங்கள் கதியே இராமானுசமுனியே! சங்கை கெடுத்தாண்ட தவ ராசா பொங்குபுகழ்
மங்கையர் கோன் ஈந்த மறை ஆயிரம் அனைத்தும்
தங்கு மனம் நீ எங்களுக்கு தா இராமானுசா
- எம்பார்

No comments: