பொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா? "ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா! நோaயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்.

Thursday, July 8, 2010

பெருமாள் திவ்யதேசங்கள் இணைக்கப்படவேண்டும்



திருப்பதி பெருமாள் கோவில் எந்த ஒரு குறைமின்றி சிறப்பாக செயல்படுகிறது.
அதே போல அனைத்து திவ்யதேச பெருமாள் கோவிலும் சிறப்பாக செயல்படுகிறதா என்றால்
கேள்வி குறி?

இதற்கு வழி அனைத்து திவ்யதேசங்களும் இணைக்க பட வேண்டும் . திருப்பதி கோவில் முதல் கொண்டு திவ்யதேச கோவில்களின் உண்டியல் பணம் அந்த கோவில் நிர்வாகமோ அரசோ ஏற்காமல் அவை திவ்ய தேசங்களின் பெருமாள் கோவில் பராமரிக்கவே பயன்படுத்த வேண்டும் .அதற்கென்று ஒரு திவ்யதேச குழு என்று ஆரம்பித்து அதில் மெய் அடியார்களை சேர்த்து அனைத்து திவ்யதேசமும் சிறப்பாக செயல்பட வழிவகை செய்ய வேண்டும்.

இதன் மூலம் மக்கள் செலுத்தும் பணம் பெருமாளுக்கே செலவிட படுகிறது . திவ்ய தேச பெருமாள் கோவில்களும் சிறப்பாக செயல்படும்.

No comments: