
தையொரு திங்களும் தரை விளக்கித்
தண்மண் டலமிட்டு மாசி முன்னாள்,
ஐயநுண் மணற்கொண்டு தெரு அணிந்து
அழகினுக்கு அலங்கரித்த அனங்க தேவா!
உய்யவும் ஆங்கொலோ என்றுசொல்லி
உன்னையும் உம்பியையும் தொழுதேன்,
வெய்யதோர் தழல் உமிழ் சக்கரக்கை
வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே!

தை மாசமான இன்று, தரையை விளக்கி, தண்-மண்டலம் என்னும் குளிர்ச்சியான கோலம் இட்டோம்! மாசியின் முந்தின நாள் வரை (அதாச்சும் தை மாதம் முழுதும்), மணற் பொடிகளாலும், வண்ணப் பொடிகளாலும், தெருவை அழகுபடுத்தினோம்! என்று ஆண்டாள் சொல்லி இருக்காங்க! கண்ணன் வருவானல்லவா கண்ணன் மேல் அம்புட்டு பாசம்!
நீங்களும் தை-ல் கோலம் போடுவீங்கல்ல!
வித விதமான கோலம் போட இந்த வலைபதிவை http://kolangal.kamalascorner.com அன்பர்கள் பயன்படுத்தவும்.
source
நன்றி http://kolangal.kamalascorner.com
http://madhavipanthal.blogspot.com/2009_01_01_archive.htmla
0 comments:
Post a Comment