பொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா? "ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா! நோaயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்.

வெள்ளி, 8 ஜனவரி, 2016

திருப்பதி மலை மேல் இருப்பவனே!!!





திருப்பதி மலை மேல் இருப்பவனே
தீராத வினையெல்லாம் தீர்ப்பவனே

ஸ்ரீநிவாசா கோவிந்தா
ஸ்ரீ வெங்கடேசா கோவிந்தா

உளமாம் கோவிலில் இருப்பவனே
உலகோரை வாழ்விக்க வந்தவனே

சங்கடம் தவிர்த்திடும் கோவிந்தா
வேங்கட ரமணா கோவிந்தா

ஏழு மலை மேல் இருப்பவனே
எல்லா வினைகளையும்  தீர்ப்பவனே

ஏகாந்த வாசா கோவிந்தா
பக்தரின் நேசா கோவிந்தா

கருத்துகள் இல்லை: