Govinda Govinda Govinda - om namo narayanaya!
மகிசாசுரவதம் முடிந்தவுடன் தேவர்களுக்கு சாந்த சொருபம்மாக காட்சி அளித்தவர் என்பதால் சர்வ சொருபினி அம்மன் என்றும் சாந்த சொருபினி என்றும் அம்மனுக்கு நாமங்கள் உண்டு. மிக பெரிய நீண்ட கூந்தலை உடையவள் என்பதால் ஊரின் பெயர் பெருமுடிவாக்கம் . மூலஸ்தானத்தில் அம்மன் 12 திருகரங்களுடன் நடந்து வரும் தோற்றம் கண்கொள்ளா காட்சி. வெளிபிரகாரத்தில் 32 அடி உயரத்தில் கம்பீரமாக சாந்தமான தோற்றத்துடன் அம்மன் காட்சி தருகிறார்
மகிசாசுரவதம் முடிந்தவுடன் தேவர்களுக்கு அம்பாள் சாந்தமாக காட்சி அளித்தார் அல்லவா!
அந்த தரிசனத்தை நாமும் பார்க்கலாம்
எங்கே சொல்லுங்கள்!
12கரங்களுடன் காட்சி தருகிறார் ஸ்ரீ சர்வசொருபினி அம்மன் .
பெருமுடிவாக்கம் பெரியபாளையம் அருகில்.,,
அம்மன் பற்றிய மேலும் பல விவரங்கள் புகைபடத்துடன் விரைவில் எதிர்பார்க்கலாம்
ph:- 9841788842
துப்புடையாரை அடைவதெல்லாம் சோர்விடத்துத் துணையாவரென்றே ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன் ஆனைக்கு நீ அருள் செய்தமையால் எய்ப்பு என்னை வந்து நலியும்போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளியானே!
பொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா? "ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா! நோaயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்.
சனி, 2 ஜனவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
4 கருத்துகள்:
படங்கள் எந்தப் பதிவில் இருக்கின்றன என்று சொல்லுங்களேன்... நன்றி.
கவிநயா அக்கா! வணக்கம்
இந்த பதிவில் பார்க்கவும்
மிக்க நன்றி
http://srisarvasorubineeamman.blogspot.com
நன்றி ராஜேஷ் :)
கருத்துரையிடுக