பொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா? "ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா! நோaயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்.

வியாழன், 21 அக்டோபர், 2010

திருவேங்கடவா! அடியேனை ஆட் கொண்டருளே!



பெரிய திருமொழி


1028
தாயே தந்தை என்றும்* தாரமே கிளை மக்கள் என்றும்*
நோயே பட்டொழிந்தேன்* உன்னைக் காண்பது ஓர் ஆசையினால்*
வேயேய் பூம் பொழில் சூழ்* விரையார் திருவேங்கடவா!*
நாயேன் வந்து அடைந்தேன்* நல்கி ஆள் என்னைக் கொண்டருளே
.. 1.9.1

விளக்கம்:-

அம்மா அப்பா என்றும் பொண்டாட்டி சொந்தகாரங்க என்றும் (இவர்களின் மேலே பாசம் என்னும்) நோயே பட்டு ஒழிந்தேன்! (அப்பப்பா இவர்களை எல்லாம் நம்பி இவர்களிடம் உண்மையான அன்பு செலுத்தி பட்டது போதுமப்பா! போதும்!),மூங்கில் புதர்களும் பூக்கள் நிறைந்த மரங்களும் செடிகளும் சூழ்ந்துள்ள நல்ல மணம் வீசும் திருவேங்கடவா! (திருப்பதியில் வசிக்கும் என் கோவிந்தா! நீயே என்றும் நிலையான சொந்தம் என்று) உன்னை பார்க்கணும் என்றொரு ஆசையினால் நாயாகிய நான் வந்து (சரண்) அடைந்தேன்! (ஆள்பவனே! யப்பா ஏழுமலையானே!) விரும்பி என்னை ஏற்று கொண்டு அருள் புரியணும்! (please)


1029
மானேய் கண் மடவார்* மயக்கில் பட்டு மாநிலத்து*
நானே நானாவித* நரகம் புகும் பாவம் செய்தேன்*
தேனேய் பூம்பொழில் சூழ்* திருவேங்கட மா மலை* என்
ஆனாய்! வந்து அடைந்தேன்* அடியேனை ஆட் கொண்டருளே
. 1.9.2

விளக்கம்:-

மான் (போல அழகான) கண்களையுடைய இளமையான (டீன் ஏஜ் பெண்களை Sight அடித்து அவர்கள் அழகில்) மயக்கம் கொண்டு இந்த மாநிலத்திலே நான் நரகம் செல்லகூடிய (அளவுக்கு)பல வித பாவங்களை செய்தேன். தேன் நிறைந்த பூஞ்சோலைகள் சூழ்ந்துள்ள
(திருப்பதி) திருவேங்கட உயர்ந்த மலையில் (உள்ள கோவிந்தா!) என் வலிமையுடைய காளையே! அழகுடையவனே! (நான் திருந்த எண்ணி உன் திருவடியே சரணம் என்று ) வந்து அடைந்தேன்!அடி பணிந்தவனை முழுமையாக எடுத்து கொண்டு அருள் புரியணும் (please)

1030
கொன்றேன் பல் உயிரை* குறிக்கோள் ஒன்று இல்லாமையால்*
என்றேனும் இரந்தார்க்கு* இனிதாக உரைத்து அறியேன்*
குன்றேய் மேகம் அதிர்* குளிர் மா மலை வேங்கடவா!*
அன்றே வந்து அடைந்தேன்* அடியேனை ஆட் கொண்டருளே
. 1.9.3

விளக்கம்:-

குறிக்கோள் ஒன்றும் இல்லாமல் (கண்ணு மண்ணு தெரியாம) பல உயிர்களை கொன்றேன்.
(அப்புறம்) என்னிடம் பிச்சை கேட்டு வருபவர்களிடம் (போ! போ! சில்லறை இல்ல! என்றல்லவா கடுமையாக சொல்லி இருக்கிறேன்!) என்னைக்குமே இனிமையாக பேசியது கூட இல்லை! குன்றுகள் (போல காட்சி தரும்) மேகங்கள், சத்தம் (வரும் அளவுக்கு வானத்தில் எப்போதுமே மிகுதியாக சுற்றி கொண்டிருப்பதால்) குளிர்ச்சியாக இருக்கிற உயர்ந்த மலையில்(வசிக்கும் திருப்பதி) வேங்கடவா! (கோவிந்தா! அக்குற்றங்களோடு உன் பாதமே சரணம் என்று எண்ணிய) அன்றே வந்து அடைந்தேன். அடி பணிந்தவனை முழுமையாக எடுத்து கொண்டு அருள் புரியணும் .(please)

1031
குலம் தான் எத்தனையும்* பிறந்தே இறந்து எய்த்து ஒழிந்தேன்*
நலம் தான் ஒன்றும் இலேன்* நல்லதோர் அறம் செய்தும் இலேன்*
நிலம் தோய் நீள் முகில் சேர்* நெறியார் திருவேங்கடவா!*
அலந்தேன் வந்து அடைந்தேன்* அடியேனை ஆட் கொண்டருளே.
1.9.4

விளக்கம்:-

எத்தனையோ குலங்களில் பிறந்தும் இறந்தும் இளைத்தும் ஒழிந்து போனேன்! நல்லவை ஒன்றும் செய்தது இல்லை! நல்லவிதமாக ஒரு (தான, தர்ம) புண்ணியம் கூட செய்ததும் இல்லை! (மலை மேலே உள்ள) நிலத்தில் படிவது (போல அழகாக உள்ள) நீளமான மேகங்கள் (ஒன்று) சேர்ந்து (செல்லும் அழகான மலை மேல் வசிக்கும் என்றைக்குமே) நிலையான திருவேங்கடவா! (திருப்பதி கோவிந்தா! உன்னையே சரணம் அடைய) பல துன்பங்களோடு வாடியும் (வருந்தி) வந்து அடைந்தேன். அடி பணிந்தவனை முழுமையாக எடுத்து கொண்டு அருள் புரியணும். (please)

1032
எப் பாவம் பலவும்* இவையே செய்து இளைத்து ஒழிந்தேன்*
துப்பா! நின் அடியே* தொடர்ந்து ஏத்தவும் கிற்கின்றிலேன்*
செப்பார் திண் வரை சூழ்* திருவேங்கட மா மலை* என்
அப்பா! வந்து அடைந்தேன்* அடியேனை ஆட் கொண்டருளே.
1.9.5

விளக்கம்:-

(ஒன்னு ரெண்டு இல்லப்பா!) பாவங்கள் பலவற்றையே செய்து இளைத்து ஒழிந்தேன்! (இதனால என்ன ஆச்சுனா- யப்பா!) நல்லவரே! உன் திருவடியை தொடர்ந்து போற்றி புகழவும் சக்தி இல்லாமல் இருக்கிறேன். செப்பு (போல) வலிமையான மலைகளை சூழ்ந்துள்ள திருவேங்கட உயர்ந்த மலையில் வாழும் (திருப்பதி கோவிந்தனாகிய) என் அப்பா! (உன்னை சரணடையவே விருப்பபட்டு) வந்து அடைந்தேன். அடி பணிந்தவனை முழுமையாக எடுத்து கொண்டு அருள் புரியணும். (please ppaa)



1033
மண்ணாய் நீர் எரி கால்* மஞ்சு உலாவும் ஆகாசமுமாம் *
புண்ணார் ஆக்கை தன்னுள்* புலம்பித் தளர்ந்து எய்த்து ஒழிந்தேன்*
விண்ணார் நீள் சிகர* விரையார் திருவேங்கடவா!*
அண்ணா! வந்து அடைந்தேன்* அடியேனை ஆட் கொண்டருளே.
1.9.6

விளக்கம்:-

மண் கொண்ட (நிலம்) , நீர் , நெருப்பு, காற்று, மேகங்கள் சுற்றி கொண்டிருக்கும் வானம் (என்று பஞ்ச பூதங்களால் ஆன) புண் உடம்பை (வைத்து கொண்டு அடிக்கடி வரும்
உடல் நல கோளாறால்) எனக்குள்ளேயே புலம்பி (உடல்) தளர்ந்து மெலிந்து நொந்து ஒழிஞ்சி போயிட்டேன்! (பெருமாளே!) , வானத்தை தொடும் அளவுக்கு உயர்ந்த சிகரங்களை (கொண்ட) நல்ல மணம் வீசும் திருவேங்கடவா! (திருப்பதி கோவிந்தனாகிய) என் அண்ணா! (உன்னிடமே சரணடைய விரும்பி) வந்து அடைந்தேன். அடி பணிந்தவனை எடுத்து கொண்டு அருள் புரியணும். (please annaa!)

1034
தெரியேன் பாலகனாய்* பல தீமைகள் செய்துமிட்டேன்*
பெரியேன் ஆயின பின்* பிறர்க்கே உழைத்து ஏழை ஆனேன்*
கரி சேர் பூம்பொழில் சூழ்* கன மா மலை வேங்கடவா!*
அரியே! வந்து அடைந்தேன்* அடியேனை ஆட் கொண்டருளே.
1.9.7

விளக்கம்:-
சின்ன வயசுல விவரம் தெரியாம (பொண்ணுங்கள SIGHTஅடிக்கறது, திருடுறது, கண்மூடிதனமா ஊற சுத்துறது, இப்படியே இன்னும் பல) பல தீமைகள் செய்து விட்டேன். (சரி சின்ன வயசுலதான் இப்படின்னா!) பெரியவன் ஆன பின்பு பிறருக்காகவே உழைத்து (உழைத்து) ஏழை ஆகி விட்டேனே! யானைகள் (ஒன்று) சேரும் பூக்கள் நிறைந்த மரங்களும் செடிகளும் நிறைந்த குளிர்ந்த சோலைகள் சூழ்ந்துள்ள, மரியாதைக்கு உரிய உயர்ந்த மலை (மேல் வசிக்கும்) வேங்கடவா! (திருப்பதி கோவிந்தா!) அரியே! (உன்னிடம் சரணம் அடையவே) வந்து அடைந்தேன். அடி பணிந்தவனை முழுமையாக எடுத்து கொண்டு அருள் புரியணும்.(please iraivaa)

1035
நோற்றேன் பல் பிறவி* நுன்னைக் காண்பது ஓர் ஆசையினால்*
ஏற்றேன் இப் பிறப்பே* இடர் உற்றனன் எம்பெருமான்!*
கோல் தேன் பாய்ந்து ஒழுகும்* குளிர் சோலை சூழ் வேங்கடவா!*
ஆற்றேன் வந்து அடைந்தேன்* அடியேனை ஆட்கொண்டருளே.
1.9.8

விளக்கம்:-

உன்னை பார்க்க வேண்டும் என்ற ஆசையினால் பல பிறவியாய் தவம் செய்தேன். இந்த பிறப்பையும் ஏற்றேன். (இந்த பிறவியில்தான் உன்னை கண்டு கொண்டேன். இப்பிறவி என்னும்) துன்பம் (நீங்க உன்னை) அடைந்தேன் எம்பெருமானே! கொம்பு தேன் பாய்ந்து
ஒழுகும் குளிர்ந்த மரங்களும் செடி கொடிகளும் சூழ்ந்துள்ள (அழகான இடத்தில் வசிக்கும்) வேங்கடவா! (திருப்பதி கோவிந்தா! இவ்வுலகில் பிறந்து வருந்தினேன்)மன சுமையை பொறுக்க முடியலப்பா! (இனி பிறவாமல் இருக்க உன் பாதமே சரணம் சரணம் என்று ) வந்து அடைந்தேன். அடி பணிந்தவனை எடுத்து கொண்டு அருள் புரியணும். (please)

1036
பற்றேல் ஒன்றும் இலேன் * பாவமே செய்து பாவி ஆனேன்*
மற்றேல் ஒன்று அறியேன் * மாயனே! எங்கள் மாதவனே!*
கல் தேன் பாய்ந்து ஒழுகும்* கமலச் சுனை வேங்கடவா!*
அற்றேன் வந்து அடைந்தேன் * அடியேனை ஆட்கொண்டருளே.
1.9.9
விளக்கம்:-

(கோவிந்தா! உன் அழகான மலர் பாதத்தை தவிர எனக்கு வேறு) பற்று ஒன்றும் இல்லை. பாவங்களையே செய்து பாவி ஆனேன், (கோவிந்தா! நீயே எனக்கு அடைக்கலம் உன்னை தவிர) மற்றொன்று நான் அறியவில்லை. மாயனே! எங்கள் மாதவனே! (மலை மேலிருந்து) மலை தேன் பாய்ந்து ஒழுகும் (தித்திக்கும்) தாமரை குளங்கள் (நிறைந்த அழகான இடத்தில் வாழும்) வேங்கடவா! (திருப்பதி கோவிந்தா! உன்னை தவிர வேறு பற்று) இல்லாதவன் (நீயே சரணம் என்று) வந்து அடைந்தேன். அடியேனை எடுத்து கொண்டு அருள் புரியணும். (please)

1037
கண்ணாய் எழுலகுக்கு* உயிராய எங்கார் வண்ணனை*
விண்ணோர் தாம் பரவும்* பொழில் வேங்கட வேதியனை*
திண்ணார் மாடங்கள் சூழ்* திருமங்கையர் கோன் கலியன்*
பண்ணார் பாடல் பத்தும்* பயில்வார்க்கு இல்லை பாவங்களே.
1.9.10

விளக்கம்:-

ஏழு உலகுக்கும் கண்ணாகவும், உயிராகவும் (உள்ள) எங்கள் கரிய மேகம் போல வண்ணம் கொண்டவனை, விண்ணோர்கள் சுற்றி நின்று கொண்டு (ஆசையோடு வழிபடும்) மரங்களும் செடிகளும் நிறைந்த குளிர்ந்த (இடத்தில் வசிக்கும்) (வேதங்களின் ஹீரோவான) வேங்கட வேதியனை (திருப்பதி கோவிந்தனை)திடமான மாடங்கள் சூழ்ந்துள்ள திருமங்கை (நாட்டு) மன்னன் கலியன் இசையால் பாடிய (இந்த) பத்தும் கற்பவர்களுக்கு இல்லை பாவங்களே!

திருப்பதி ஏழுமலையானின் திருமங்கை ஆழ்வார் பாடிய 10 பாசுரங்களின் தூய தமிழ் சொற்களின் பொருள்.

விரையார் - மணம் பொருந்திய
வேயேய் - மூங்கில் புதர்
பூம் பொழில் - பூக்கள் நிறைந்த மரங்களும் செடிகளும் நிறைந்த குளிரிந்த சோலை
நல்கி - விரும்பி
ஆள் - ஆட்சி செய்தல்
மடவார் - இளமையுடைய பெண்
நானாவித - நாலாவிதம், பல விதமான
மா – பெரிய, உயர்ந்த
ஆன் - பசு, பெண் எருது, அவ்விடம், காளை
ஆய் - அழகு, நுண்மை, சிறுமை, இடையர் குலம்
ஆட்கொண்டு - முழுமையாக எடுத்து கொண்டு
உரைக்க - சொல்லுதல் , கூற
இரந்து - கெஞ்சி; மன்றாடு
அறியேன் - அறியாது
அதிர்- ஒலி, நடுக்கம்
எய்த்து – இளைத்து
அறம் - தருமம், புண்ணியம்
தோய் - படிதல், நனைதல்
நெறியார் - நிலையினையுடையவர்
நிலம் - பூமியின் மேற்பரப்பு
அலந்த - வாடிய
அலம் - துன்பம்
துப்பு - நல்லன, உணவு
நின் - உன்
ஏத்து - போற்று, புகழ்ந்து
கிற்கின்றிலேன் - சக்தி ஒன்றும் இல்லை
செப்பு - செம்பு, தாமிரம்
ஆர் - பொருந்திய, ஒலி
திண் - திடமான
வரை - மலை
எரி - நெருப்பு
கால் - காற்று
மஞ்சு - மேகம்
ஆகாசம் - வானம், ஆகாயம்
புண் - காயம்
ஆக்கை - உடல்
எய்த்து - இளைத்து
விண் - வானம்
நீள் - நீளமான, உயர்ந்த
விரையார் - மணம் பொருந்திய
பாலகன் - கற்று குட்டி, சிறியவன், இளையவன், குழந்தை
கரி - யானை
பூம் பொழில் - பூக்கள் நிறைந்த மரங்களும் செடிகளும் நிறைந்த குளிர்ந்த சோலை
கனம் - பாரம், எடையின் அளவு, மரியாதைக்கு உரிய
நுன்னை - உன்னை
நோற்றது - தவம் செய்தது;
நோற்றேன் - தவம் செய்தேன்
இடர் - துயரம், துன்பம்,வறுமை
ஆற்று - மனசுமையை பிறரிடம் கூறி குறைத்து கொள்ளுதல்
ஆற்றார் - வலியரல்லாதவர், வறுமையுடையவர், பொறுக்க மாட்டாதவர்
ஆற்றேன் - கவலை, இழப்பு இவற்றை பொறுக்க முடியாதவன் (தாங்க முடியாதவன்)
கோல் - கொம்பு
உற்றனன் - அடைந்தான்
சோலை - குளிர்ந்த மரங்களும் செடி கொடிகளும் நிறைந்த இடம்
பற்றேல் - பிடித்தல், ஆதாரம், பிடிமானம்
மற்றேல் - மற்றபடி
அறியேன் - அறியாது
கல் தேன் - மலை தேன் என்றும் சொல்லலாம்
கமலச்சுனை - தாமரை குளம்
அற்றேன் - இல்லாதவன்
கார் - கரிய , மேகம் , மழை கால நெற்பயிர்
திண் - திடமான
பொழில் - சோலை, தோட்டம், மரங்களும் செடிகளும் உள்ள குளிர்ச்சியான இடம்
பரவி - சுற்றிலும், படர்தல், பரவுதல்
கோன் - அரசன்
கலியன் - போர்வீரன், திருமங்கை ஆழ்வார்
பண் - இசை, இசை பாட்டு
பயில்வார் - கற்பவர், படிப்பவர்


திருப்பதி கோவிந்தனுக்கு சமர்ப்பணம்!
கோவிந்தா! கோவிந்தா! கோவிந்தா!

வெள்ளி, 8 அக்டோபர், 2010

திருவேங்கடம் அடை நெஞ்சமே*! - திருமங்கை ஆழ்வார் (1018-1127)


திருப்பதி ஏழுமலையான்


பெரிய திருமொழி


1018
கொங்கு அலர்ந்த மலர் குருந்தம் ஒசித்த* கோவலன் எம்பிரான்*
சங்கு தங்கு தடங்கடல்* துயில் கொண்ட தாமரைக் கண்ணினன்*
பொங்கு புள்ளினை வாய்ப் பிளந்த* புராணர் தம்மிடம்*
பொங்கு நீர் செங்கயல் திளைக்கும் சுனைத்* திருவேங்கடம் அடை நெஞ்சமே*!. 1.8.1

விளக்கம்:-

(கண்ணனை கொல்ல கம்சன் அனுப்பிய அசுரன் குருந்த மரமாக மாறி நின்றான்!) நல்ல
வாசனையுள்ள மலர்களையுடைய குருந்த(மரத்தை) ஒடித்த எம் கிருஷ்ணன்
எம் இனிய இறைவன் , சங்குகள் தங்கியிருக்கின்ற பெரிய கடலில் ஹாயாக (தூங்குவது போல நடித்து உள்ளுக்குள் நம்மை கவனத்துடன் பார்த்து கொண்டே பாதி கண்கள் மூடியவாறு)படுத்து கொண்டுள்ள தாமரை (மலர் போல அழகான குளிர்ந்த) கண்களுடையவனும்,(கண்ணனை கொல்ல வேறு வடிவில் வந்த அசுரனை அதாவது) பொங்கி வந்த கொக்கின்வாயை பிளந்த பழமைக்கும் (பழமையாய் புதுமைக்கும் புதுமையாய் உள்ள ஆதியும்அந்தமும் இல்லாத பரம்பொருள்) இருக்குமிடம்), பொங்கி வரும் நீரில் கொழுத்த மீன்கள் (மகிழ்ச்சியுடன் துள்ளி விளையாடும்) குளங்களும் (அருவிகளும் நிறைந்துள்ள) திருவேங்கடம் தயவு செய்து தித்திக்கும் கரும்பான என் ஏழுமலையான் வாசம் செய்யும் இடமான திருப்பதி) அடை நெஞ்சமே!

1019
பள்ளியாவது பாற்கடல் அரங்கம்* இரங்க வன் பேய்முலை*
பிள்ளையாய் உயிருண்ட எந்தை* பிரான் அவன் பெருகும் இடம்*
வெள்ளியான் கரியான்* மணி நிற வண்ணன் என்று எண்ணி*நாள்தொறும்
தெள்ளியார் வணங்கும் மலைத்* திருவேங்கடம் அடை நெஞ்சமே*!. 1.8.2

விளக்கம்:-

(என் இனியவன் இறைவன்) பள்ளி கொண்டிருக்கும் (இடங்கள்) பாற்கடல், ஸ்ரீரங்கம் (அப்படி படுத்து கொண்டிருந்தவன் கிருஷ்ணா அவதாரத்திலே கெட்ட எண்ணத்துடன் கண்ணனை
கொல்ல கம்சன் அனுப்பிய பூதனை என்பவள் ஒரு சமயத்தில் குழந்தை கண்ணன்
அழும்போது அம்மா போல நடித்து கண்ணன் அழுவதை பார்த்து விஷ பாலை கொடுக்க வந்தவளை) கதற (கதற) கொடிய பேயின் முலையை (வாயில் பற்றிக்கொண்டே
சிறு) பிள்ளையாய் (ஒன்றும் தெரியாதது போல அவள்) உயிரையும் உண்ட
என் தந்தை(யாகிய) இறைவன் வளரும் இடம், வெள்ளியானே,கரியவனே ,(நீல) மணி வண்ணனே! என்று எண்ணி நாள்தோறும் தெளிந்த (அறிவுடையோர்) வணங்கும் மலை திருவேங்கடம்(தயவு செய்து தித்திக்கும் கற்கண்டு என் ஏழுமலையான் வாசம் செய்யும் இடமான திருப்பதி) அடை நெஞ்சமே!

1020
நின்ற மா மருது இற்று வீழ* நடந்த நின்மலன் நேமியான்*,
என்றும் வானவர்க் கைதொழும்* இணைத் தாமரையடி எம்பிரான்*
கன்றி மாரி பொழிந்திடக்* கடிது ஆநிரைக்கு இடர் நீக்குவான்*,
சென்று குன்றம் எடுத்தவன்* திருவேங்கடம் அடை நெஞ்சமே*!. 1.8.3

விளக்கம்:-

(முன்பு இருவர் செய்த மகா தவறுக்காக சாபம் பெற்று பல காலமாக இருவரும் மரங்களாக மாறி நின்றனர். ஒரு சமயத்தில் இறைவன் கிருஷ்ணா அவதாரம் எடுத்த போது குழந்தை பருவத்தில் வெண்ணை திருடி சாப்பிட்டதால் யசோதை அம்மாவால் உரலால் கட்டப்பட்ட
குட்டி கண்ணன் இருவரின் சாபம் நீக்க உரலில் கட்டப்பட்ட கயிற்றை அவிழ்ப்பது போல)
நின்ற பெரிய மருத (மரங்கள்) ஒடிந்து விழும்படி (இரு மரத்திற்கும் இடையில்)நடந்த
மாசற்றவன், (அழகான) சக்கரத்தை (கையிலே) கொண்டிருப்பவன், என்றுமே வானத்தில் (உள்ளவர்களும்) கை (எடுத்து கும்பிட்டு) வணங்கும் தாமரை மலருக்கு இணையாக
(அழகான) பாதத்தை (உடைய) எம் இறைவன், (ஒரு சமயம் இந்திரனின் கோபத்தால் பலத்த) மழை பெய்ய , (உடனே) வேகமாக சென்று பசு கூட்டங்களின் துன்பத்தை நீக்கினான்.
(பசுக்களை மழை தாக்காதவாறு உடனே) சென்று மலையை (குடையாக) தூக்கியவன் (வசிக்கும் இடம்) திருவேங்கடம் (தயவு செய்து மனமே! தித்திக்கும் சக்கரகட்டி என் ஏழுமலையான் வாசம் செய்யும் இடமான திருப்பதி) அடை நெஞ்சமே!

1021
பார்த்தர்க்காய் அன்று பாரதம் கை செய்திட்டு* வென்ற பரஞ்சுடர்*
கொத்து அங்கு ஆயர் தம் பாடியில்* குரவை பிணைந்த எம் கோவலன்*
ஏத்துவார் தம் மனத்துள்ளான்* இடவெந்தை மேவிய எம்பிரான்*
தீர்த்த நீர் தடம் சோலை சூழ்* திருவேங்கடம் அடை நெஞ்சமே*.! 1.8.4


விளக்கம்:-

அர்ச்சுனனுக்காக அன்று (நடந்த) பாரத போரில் (தேர் ஓட்டுபவனாக இருந்து அவர்களுக்கு உதவியாக) கை கொடுத்து வென்ற எல்லையில்லா ஒளி உடைய இறைவன், (என்ன செஞ்சான்னா) தன்னோட ஊரில் பசு மேய்ப்பவர்களோடு சேர்ந்து கைகோர்த்து (ஆனந்தமாக விளையாடிய குட்டி) கண்ணன், (பாசத்தோடு) போற்றி வழிபடுபவர்களின் மனசுல உள்ளான்.
(அது தவிர) திருவிடவெந்தை(யிலும்) பரவிய எம் இறைவன் (வசிக்கும் இடம்), புனிதமான நீருடைய குளங்களும், சோலைகளும் சூழ்ந்த (அழகான) திருவேங்கடம், (தயவு செய்து தித்திக்கும் வெல்ல கட்டி என் ஏழுமலையான் வாசம் செய்யும் திருப்பதி)
அடை நெஞ்சமே!

1022
வண் கையான் அவுணர்க்கு நாயகன்* வேள்வியில் சென்று மாணியாய்**
மண் கையால் இரந்தான்* மராமரம் ஏழும் எய்த வலத்தினான்**
எண் கையான் இமயத்துள்ளான்* இருஞ்சோலை மேவிய எம்பிரான்**
திண் கைம்மா துயர் தீர்த்தவன்* திருவேங்கடம் அடை நெஞ்சமே*!. 1.8.5

விளக்கம்:-

பிறருக்கு கொடுத்து உதவும் கைகளை உடையவனும் அசுரர்களுக்கு ஹீரோவான (மகாபலி நடத்திய) வேள்வியில் (குள்ளமான வாமன அவதாரம் எடுத்து) சென்று மண் (ஒட்டியுள்ள) கைகளை (ஏந்தி மூன்று அடி மண் தருவாயா! என்று) கெஞ்சி கேட்ட (உலகளந்த பெருமாள் இராம அவதாரம் எடுத்து, தன்னோட வில் திறமையால் ஒரே சமயத்தில்) ஏழு மரா மரங்களை (அம்பு) விட்டு வீழ்த்திய வலபக்க (தோளில்) அம்பை வைத்துள்ள (இராமன்) எண்ணற்ற கைகளை உடையவன், இமயமலையில் உள்ளான், (அது தவிர) திருமாலிருஞ்சோலையிலும் பரவிய எம் இறைவன், வலிமையான கனத்த தும்பிக்கையுடைய (யானை முன்பு பெருமாளுக்கு பூவை குளத்தில் இருந்து எடுத்து வரும் போது முதலை யானையின் காலை பிடித்து கடிக்க, பெருமாளுக்கு பூ வைக்க வேண்டுமே என்ற ஆசையில் கால் போனாலும் பரவாயில்லை பெருமாளுக்கு வைக்கும் பூவை காப்பாற்ற வேண்டுமே என்ற எண்ணத்தில் பூவை தும்பிக்கையில் தூக்கி வைத்து கொண்டு (ஆதி மூலமே!) என்று எண்ணி யானை பிளிற உடனே கருட வாகனத்தில் யானையின் முன் தோன்றி முதலை
பிடியில் இருந்து யானையின்) துன்பத்தை தீர்த்தவன் (எம் இறைவன் அவன் வசிக்கும் இடம்) திருவேங்கடம், (தயவு செய்து தித்திக்கும் திருபாதம் என் ஏழுமலையான் வாசம்
செய்யும் திருப்பதி) அடை நெஞ்சமே!



1023
எண் திசைகளும் ஏழுலகமும் வாங்கிப்* பொன் வயிற்றில் பெய்து*
பண்டு ஓர் ஆல் இலைப் பள்ளி கொண்டவன்* பால் மதிக்கு இடர் தீர்த்தவன்*
ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன்* ஒள் எயிற்றோடு*
திண் திறல் அரி ஆயவன்* திருவேங்கடம் அடை நெஞ்சமே*. 1.8.6


விளக்கம்:-

மிகவும் பழமை வாய்ந்த காலத்தில் (எல்லா உலகங்களும் பெரிய அழிவுக்கு உண்டான
போது) எட்டு திசைகளையும், ஏழு உலகங்களையும் தூக்கி (அப்படியே அல்வா சாப்பிடறா
மாதிரி விழுங்கி தன்னோட) தங்கமான வயிற்றில் வைத்து ஒரு அரச இலையின் மீது
படுத்து கொண்டவன் (என் செல்ல கண்ணன்) , பாலை போல வெள்ளை நிறமுடைய நிலா (முன்பு செய்த தவறால் சாபம் வாங்கிடிச்சு! சந்திரனின் சாபம் நீக்கி) துன்பத்தை
தீர்த்தவனும் (என் ஆனந்த கண்ணன்) ,ஜிம் பாடி கணக்கா நல்ல வலிமை பொருந்திய அசுரன் (இரணியனின்) மார்பில் கூரான நகங்களை வைத்தவன் (யார் தெரியுமா!) ஒளியுடைய நல்லா பள பளன்னு கூரான பற்களோடு வாட்ட சாட்டமா
மிக வலிமையுடன் (தூணிலிருந்து வெளிவந்த என் ஆசிரியர் எமக்கு இறைவனுமான)
நரசிம்ம பெருமாள் ஆனவர்! (வசிக்கும் இடம்) திருவேங்கடம், (தயவு செய்து
தித்திக்கும் அக்கரக்கனி அமுது என் ஏழுமலையான் வாசம் செய்யும் வாசம் செய்யும் இடமான திருப்பதி) அடை நெஞ்சமே!

1024
பாரு நீர் எரி காற்றினொடு* ஆகாசமும் இவை ஆயினான்*,
பேரும் ஆயிரம் பேசநின்ற* பிறப்பிலி பெருகுமிடம்,*
காரும் வார்ப் பனி நீள் விசும்பிடைச்* சோரு மாமுகில் தோய்தர*,
சேரும் வார்ப் பொழில் சூழ்* எழில் திருவேங்கடமடை நெஞ்சமே*. 1.8.7


விளக்கம்:-

உலகமும் உலகத்திலுள்ள நிலம், நீர், நெருப்பு காற்றினோடு ஆகாயமும் இவைகள் (எல்லாமும்) ஆகினான், (அதுமட்டுமா௧) பெயரும் ஆயிரம் என்று (இனிய வாயினால்) சொல்லும்படி நின்ற பிறப்பில்லாதவன் (ஆதி இறைவன்) நிறைந்துள்ள இடம், (மேகங்கள்
சூழ்ந்த) கரிய பெரிய நீளமான வானத்தில் (இருந்து) பனி (உருகி) ஊற்றி கொண்டிருக்க, (வானத்திலேயே சுற்றி கொண்டிருப்பதால்) சோர்வடைந்த பெரிய மேகங்கள்
( மலை மேலே) படிந்து (ஓய்வெடுப்பது போல போல காட்சி) தர (அதனோடு) சேர்ந்து
(சுற்றிலும்) பெரிய சோலைகள் சூழ்ந்த அழகான திருவேங்கடம் (தயவு செய்து தித்திக்கும்
தேன் சாரல் என் ஏழுமலையான் வாசம் செய்யும் திருப்பதி) அடை நெஞ்சமே

1025
அம்பரம் அனல் கால் நிலம்* சலம் ஆகி நின்ற அமரர் கோன்*
வம்புலாம் அலர் மேல்* மலி மடமங்கை தன் கொழுநன் அவன்*
கொம்பின் அன்ன இடை மடக் குற மாதர்* நீள் இதணம் தொறும் *
செம் புனம் அவை காவல் கொள் திருவேங்கடம் அடை நெஞ்சமே*!. 1.8.8

விளக்கம்:-

வானம், தீ காற்று , நிலம், நீர் (இவைகள் எல்லாமும்) ஆகி நின்ற தெய்வங்களின்
அரசனானவன்,எங்கும் கம கமன்னு நல்ல வாசனை பரவி உள்ள மலர் மேல் (அமர்ந்திருக்கும்) மிகவும் இளமையுள்ள (அழகான) பெண் (மகாலட்சுமியின்) கணவன் அவன் (வசிக்கும் இடம் எப்படின்னா!) பூக்கள் நிறைந்த (செடியின்) கொம்புகள் வளைஞ்சி வளைஞ்சி ஆடுறது போல அன்னம் போல மெதுவா தலுக் தலுக்க்னு ஆடுற அழகான மெல்லிய இடையை கொண்டஇளமையுள்ள குறி சொல்லும் பெண்கள், உயர்ந்த பரண் தோறும் இருந்து கொண்டுசெழுமையான வயல்களை (தீயவை நெருங்காதவாறு) காவல் கொண்டுள்ள திருவேங்கடம். (ஆஹா! தயவு செய்து மனமே! இவ்ளோ அழகான மலை! அவன் உதடு மேல் நம் உதடுவைத்து (kiss பண்ணா!) தித்திக்கும் செர்ரி பழம் போல சிவந்த இதழ்களை கொண்ட என் ஏழுமலையான் வாசம் செய்யும் திருப்பதி) அடை நெஞ்மே!

1026
பேசுமின் திருநாமம் எட்டெழுத்தும்* சொல்லி நின்று பின்னரும்*
பேசுவார் தம்மை உய்ய வாங்கிப்* பிறப்பறுக்கும் பிரானிடம்*
வாச மா மலர் நாறு வார் பொழில்* சூழ் தரும் உலகுக்கெல்லாம்*
தேசமாய்த் திகழும் மலை* திருவேங்கடம் அடை நெஞ்சமே*!. 1.8.9


விளக்கம்:-

(பொதுவாக எல்லாராலும் பெரிதும்) பேசப்படும் (ஓம் நமோ நாராயணா! என்னும்) எட்டு
எழுத்து திரு நாமத்தை சொல்லி சொல்லி கொண்டும் (அதன்) பின்னரும் (பெருமாளை பற்றியே) பேசி கொண்டிருப்பவர்களை (நல்ல விதமாக) வாழும்படி காப்பாற்றி (அவர்களை தான்) எடுத்து கொண்டு பிறப்பை அறுக்கும் பிரியமான (இறைவன்) இடம், நல்ல வாசனையுள்ள பெரிய பெரிய (அழகான) மலர்களாலும், கம கமக்கும் நீண்ட (மரங்களும் செடி கொடிகளும் கொண்ட குளிர்ச்சியான) சோலைகளாலும் சூழ்ந்து (காட்சி) தருவதோடு, உலகுக்கெல்லாம் (திலகம் போன்று சிறந்த) திருநாடாய் திகழும் மலை திருவேங்கடம், (தயவு செய்து தித்திக்கும் லட்டு என் ஏழுமலையான் வாசம் செய்யும் திருப்பதி) அடை நெஞ்சமே

1027
செங்கயல் திளைக்கும் சுனைத்* திருவேங்கடத்து உறை செல்வனை*
மங்கையர் தலைவன் கலிகன்றி* வண் தமிழ் செஞ்சொல் மாலைகள்*
சங்கை இன்றித் தரித்து உரைக்க வல்லார்கள்* தஞ்சம் அதாகவே *
வங்க மா கடல் வையம் காவலராகி* வானுலகு ஆள்வரே*!. 1.8.10


விளக்கம்:-

சிவந்த (செழுமையான) கயல் மீன்கள் (மகிழ்ச்சியுடன் துள்ளி விளையாடும் அழகான) குளங்களையும் (அருவிகளையும் உடைய) திருவேங்கடத்தில் வசிக்கும் (என்) பொக்கிஷம் (ஏழுமலையானை) திருமங்கை நாட்டு தலைவன் கலிகன்றி வண்ணமயமான (அழகான)
தமிழில் (கூறிய இனிமையான) இலக்கண சொல்லால் (ஆன புகழ்) மாலையை (பலனை எதிர்ப்பார்க்காமல் அவன் ஏற்பானா ஏற்க மாட்டானா! என்ற) சந்தேகம் இல்லாமல் (தெளிவாக நமக்கு) அடைக்கலம் பெருமாளே! என்று பாசத்தோடு சொல்ல ஆற்றல் (உடையவர்கள்) கப்பல்களை கொண்டுள்ள பெரிய கடல் சூழ்ந்த உலகத்துக்கு காவலர் ஆகி,(பின்பு) வான் உலகமும் ஆட்சி செய்வார்கள்!


திருப்பதி ஏழுமலையானின் திருமங்கை ஆழ்வார் பாடிய பாசுரங்களின் தூய தமிழின் விளக்கம்!

பார்த்தன் - அருச்சுனன்
புள் - பறவை
திளைத்து : கலந்து : பொருந்தியவள்
செங்கயல் - கொழுத்த மீன்கள்
குருந்து - குருந்த மரம்
ஒசித்த – ஒடித்த
கொங்கு - வாசனை
அலர்ந்த - வளமான , மலர்ந்த
தடங்கடல் – பெரிய கடல்.
எந்தை – என்தந்தை
கோவலன் - கிருஷ்ண பரமாத்மா
தெள்ளியார் - தெளிந்த அறிவுடையவர்
சுனை - மலை ஊற்று, குளம்
புராணம் - பழமைக்குப் பழமையாய் புதுமைக்குப் புதுமையாய் இருப்பவன் பரம் பொருள்
பிரான் - தலைவன், கடவுள்; சிவன்; திருமால்
வெள்ளி - வான் மண்டலத்திலுள்ள ஒரு நட்சத்திரம்.Or ஒரு உலோக வகை.
இரங்கு - தயை செய்; இரக்கம் கொள்; அழு; வருந்து பரிதவி:
பள்ளிகொள்ளுதல் - படுத்தல்
அமலன், விமலன், நிமலன், நின்மலன் - நான்கு பதங்களும் மாசற்றவன்
நின்மலன் - அடியார்களுக்கு செய்யும் உபகாரத்தை "அவர்கள் பேறு பெறுவதற்காக" செய்வதாக நினைக்கும் குறை இல்லாதவன்.
அதாவது அடியார்களுக்கு செய்யும் உபகாரத்தை கூட தன் பேறாக எண்ணி செய்கிறான்
நின்மலம் _ மாசின்மை.
நின்மலன் _ கடவுள் :.
நேமியான் - சக்கரத்தை கையிலே கொண்டிருப்பவன்
வீழ - விழ
கன்றுதல் - முதிர்தல், அடிபடுதல், குறைதல், சினக் குறிப்புக் காண்பித்தல்,
கடிது - விரைவாக
ஆநிரை – பசுக்கூட்டம்
இடர் – துன்பம்
பார்த்தன் (அர்ச்சுனன்)
பயன்பாடு பாரதம், பழமையான பண்பாடுகள் கொண்ட நாடு.
பரஞ்சுடர் - ஒப்பற்ற ஒளியுடைய முழு முதற்கடவுள்
ஆயர் - ஆடு மாடுகளை மேய்ப்பவர்
பாடி – ஊர்
குரவை = கைகோத்தாடுதல்
கோவலன் – இனங்காப்பார்
கோவலன் - கிருஷ்ண பரமாத்மா
ஏத்து – போற்று
மேவி - பரவி - அல்லது கலந்து
தடம் – குளம், பாதை
தீர்த்தம் - புனித நீர்
அவுணர் – அசுரர்
மாணி - திருமாலின் வாமன அவதாரத்தைக் குறிக்கும்
இரந்து - கெஞ்சி; மன்றாடு.வண் கை - ஈகை, கொடை பொருள் உதவி
ஒண் - ஒண்ணு .பொருந்து
எண் - எண்ணம், எட்டு, எண்ணற்ற
திண் - திடமான
ஆலிலை - ஆலமரத்து இலை
மதி - நிலா
திறல் - வலிமை.
உரம் - மார்பு
உகிர் – நகம்
ஒள் ஒளி
எயிற்று - பல்,
அரி – சிம்மம்
ஆய - ஆகிய
பார் - நிலம், உலகம்
பிறப்பிலி - பிறப்பில்லாதவன்
கார் - கரிய , மேகம் , மழை கால நெற்பயிர்
வார் - ஊற்றுதல் நீண்ட
நீள் - நீளமான
விசும்பு - வானம்
இடை - இடுப்பு, நடு, மத்தி
சோர் - சோரென்னேவல் : சோர்வு : வஞ்சகம்
மாமுகில் - பெரிய மேகங்கள்
தோய் - படிதல், நனைதல்
சேர் - ஒன்றோடு ஒன்று இணையும் செயல்
பொழில் – மழைக்காடு, சோலை, மரங்களும் செடி கொடிகளும் நிறைந்த குளிர்ச்சியான இடம்
எழில் - அழகான
வார் பொழில் – நீண்ட சோலை
தோய்தர - பொருந்த
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வம்பு - மணம்
அலர் - பூ, மலர்
மலி - மிகுந்த
மடம் - இளமையுமுடைய,
மங்கை – பெண்
கொம்பின்- பூங்கொம்பு
இதணம் – பரண்
புனம் – காடு , வயல்
கொழுநன் - கணவன்
அம்பரம் - வானம்
அனல் - தீ
கால் - காற்று
சலம் - நீர்
அமரர் - தேவர்
கோன் –, அரசன்
உய்ய – வாழ
நாறு - வாசம்
திளைத்து : கலந்து : பொருந்தியவள்
உறை = வசிக்கும் .
சங்கை - அச்சம், பயம்
தரித்து - அணிந்து
உரைக்க - சொல்லுதல் , கூற
வல்லமை - ஆற்றல், சக்தி, பெரும்வலிமை
தஞ்சம் - அடைக்கலம்
வங்கம் - மரக்கலம்,கப்பல்
வையம் - உலகம்
செஞ்சொல் மாலை – இலக்கணசொல், புகழ் மாலை




ஏழுமலையானுக்கு சமர்ப்பணம்!
கோவிந்தா! கோவிந்தா! கோவிந்தா!

சனி, 25 செப்டம்பர், 2010

சிங்கவேள்குன்றமே!- திருமங்கை ஆழ்வார் (1008-1117)


சத்ரவட நரசிம்மர்


பெரிய திருமொழி


1008
அங்கண் ஞாலம் அஞ்ச அங்கோர் ஆளரியாய்*
அவுணன் பொங்க ஆகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிடம்*
பைங்கண் ஆனைக் கொம்பு கொண்டு பத்திமையால்* அடிக்கீழ்
செங்கண் ஆளி இட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றமே. 1.7.1

விளக்கம்:-
அப்பப்பா! அப்போது உலகமே அஞ்சும்படி (சும்மா அதிருதுல்ல!) அங்கு ஒரு தூணில் நரசிம்ம பெருமாள் (தோன்றியதும் அதை பார்த்த அசுரன்) இரணியன் கோபத்துடன் வெகுண்டெழ (டேய்1 டேய்! ஓவரா பொங்காதடா! என்று சொல்வது போல! அவன் அலறும்படி) அவன் மார்பை நல்லா கூரான நகங்களால் பொளந்த தூயவனான (என் செல்லம் நரசிம்ம பெருமாள்) இருக்குமிடம்,குளிர்ச்சியான (cool eye) கண்களை உடைய யானையின் தந்தங்களை பிடுங்கி கொண்டு வந்து பக்தியால் சிவந்த கண்களுடைய சிங்கங்கள் (எங்கள் நரசிம்ம பெருமாளின் பாதத்தில் வைத்து) வழிபடும் சிங்கவேல்குன்றமே!.

1009
அலைத்த பேழ்வாய் வாள் எயிற்றோர் கோளரியாய்* அவுணன்
கொலைக் கையாளன் நெஞ்சிடந்த கூருகிராளனிடம்*
மலைத்த செல் சாத்தெறிந்த பூசல் வன்துடிவாய் கடுப்ப*
சிலைக்கை வேடர் தெழிப்பெறாத சிங்கவேள்குன்றமே*1.7.2

விளக்கம்:-

(பயங்கரமான சத்ததுடன்)கர்ஜனையை வெளிபடுத்தும் பெரிய வாயையும், ஒளியுடைய கத்தி போல கூரான பற்களையும் கொண்டு நரசிம்மமாய் (தூணிலிருந்து) வெளிவந்து (அநியாயமாக) பலரை கொலை செய்யும்(வீணா போன அந்த) கை உடைய அசுரன் (இரணியன்) நெஞ்சை பொளந்த கூர்மையான நகங்களை உடைய (என் செல்லம் நரசிம்ம பெருமாள்) இருக்குமிடம், (வேடர்கள் தாக்கியதால்) வழியில் செல்பவர்களும் (வேடர்களும்)ஒருவரை ஒருவர் அடித்து சண்டை போட்டு கொண்டும், (வேடர்கள்) கடுமையாக தாள வாத்தியங்களை ஒலித்து கொண்டும், கையில் வில்லை வைத்து கொண்டிருக்கும் வேடர்களின் இரைச்சல் நீங்காத சிங்கவேல்குன்றமே!


1010
ஏய்ந்த பேழ்வாய் வாளெயிற்றோர் கோளரியாய் அவுணன்
வாய்ந்த ஆகம் வள்ளுகிரால் வகிர்ந்த அம்மானதிடம்
ஓய்ந்த மாவும் உடைந்த குன்றும் அன்றியும் நின்றழலால்
தேய்ந்த வேயும் அல்லதில்லாச் சிங்கவேள் குன்றமே 1.7.3

விளக்கம்:-

உருவத்துக்கு பொருத்தமான பெரிய வாயையும், கத்தி போல (கூர்மையான) பற்களும் கொண்டு நரசிம்மமாய் (தூணிலிருந்து வெளிவந்து) அசுரன் (இரணியனின் பெரிசா வளர்ந்த) மார்பை பொளந்த அம்மான் (என் இறைவன்) (என் செல்லம் நரசிம்ம பெருமாள்) இருக்குமிடம், (அங்கேயும் இங்கேயும் உணவுக்காக அலைந்து) களைத்த விலங்குகளும், உடைந்த சிறிய மலைகளும், அதுமட்டும் இல்லாமல் எரிந்து நின்ற நெருப்பால் கருகி போன மூங்கில்களையும் தவிர வேறொன்றும் இல்லாத சிங்கவேல்குன்றமே!


1011
எவ்வம் வெவ்வேல் பொன் பெயரோன் ஏதலன் இன்னுயிரை
வவ்வி*ஆகம் வள்ளுகிரால் வகிர்ந்த அம்மானதிடம்*
கவ்வும் நாயும் கழுகும் உச்சிப்போதொடு கால் சுழன்று*
தெய்வம் அல்லால் செல்ல வொண்ணாச் சிங்கவேள்குன்றமே*.
1.7.4

விளக்கம்:-

(மற்றவர்களுக்கு) துன்பத்தையே (தரக்கூடிய) கூரான ஆயுதத்தை (வேலை) கையில் கொண்டுள்ள பொன் (என்னும் அர்த்தம் தரக்கூடிய) பெயருள்ளவவன் (ராஸ்கல் பேர்ல ஒன்னும் குறைச்சல் இல்ல! அதாங்க அந்த இரணியனான) எதிரியின் உயிரை வாங்கி, அவன் உடலை (தனது) கூரான நகங்களால் பொளந்த (என் இறைவன்) என் அம்மான் (என் செல்லம் நரசிம்ம பெருமாள்) இருக்குமிடம், (கண்ணில் பட்டவரை எல்லாம் பார்த்து லொள்! லொள்! என்று குலைத்து) கடிக்கும் நாய்களும், கழுகுகளும், (இருக்கு அதோடு )உச்சி (வெயில் வெப்பத்தோடு) சேர்ந்து (அடிக்கும்) சுழல் காற்றும் அப்பப்பா!) தெய்வ (துணை) இல்லாமால் செல்ல முடியாத சிங்கவேல்குன்றமே!

1012
மென்ற பேழ்வாய் வாள் எயிற்றோர் கோளரியாய்* அவுணன்
பொன்ற வாகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிடம்*
நின்ற செந்தீ மொண்டு சூறை நீள் விசும்பூடிரிய*
சென்று காண்டர்க்கரிய கோயில் சிங்கவேள்குன்றமே. 1.7.5

விளக்கம்:-
ஆஹா! நல்ல கமுக்கமா அழகா பெரிய வாயையும், கத்தி போல கூரான பெரிய பற்களும் கொண்ட (பரம்பொருளாகிய எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன்) நரசிம்மமாய் (தூணிலிருந்து வெளிவந்து) அசுரனாகிய (இரணியனின்) மார்பின் பகுதியை (தனது) கூரான நகங்களால் பொளந்த தூய்மையானவன் (எம் செல்லம் நரசிம்ம பெருமாள்) இருக்குமிடம், கொழுந்து விட்டு எரிகின்ற தீயானது , சூறாவளி காற்றால் முரண்டு தகதகன்னு வானத்தில் பறந்து சிதறி அடிக்குது! (அச்சோ இப்ப நான் என்ன பண்றது!
(என் நரசிம்மர் கிட்டக்க) சென்று பார்ப்பதற்கு அரிய கோவில் சிங்கவேல்குன்றமே!



I think Thirumangai aalwar seen this type of situvation Location in Ahobilam





1013
எரிந்த பைங்கண் இலங்கு பேழ்வாய் எயிற்றோடு இது எவ்வுருவென்று*
இரிந்து வானோர் கலங்கியோட இருந்த அம்மானதிடம்*
நெரிந்த வேயின் முழையுள் நின்று நீணெறிவாய் உழுவை*
திரிந்த ஆனைச் சுவடு பார்க்கும் சிங்கவேள்குன்றமே*. 1.7.6


விளக்கம்:-

(Any time நாராயணன் நாரயணன் நாராயணன் உன் நாராயணன் எங்கேடா இருக்கிறான் என்று இரணியன் கோபத்தில் கேட்க, தூணிலும் இருப்பான்! துரும்பிலும் இருப்பான்! என்னிலும் இருப்பான்! உன்னிலும் இருப்பான்! எங்கும் இருப்பான்! என்று பிரகலாதன் கூற எங்கே காமிடா பார்க்கலாம் என்று இரணியன் தூணை தட்ட அங்கே அப்பொழுதே தூணை பிளந்து கொண்டு தோன்றிய எம் நரசிம்ம பெருமாளின் கண்கள்) குளிர்ந்த கண்கள் (தெரியுமா! ஆனா அந்த ராஸ்கல் இரணியனால வந்த கோபத்துல) செவசெவன்னு நெருப்பு போல கண்களும், பிரகாசமான பெரிய வாயையும், (கூரான) பற்களையும் (பார்த்து) இது எந்த வடிவம் என்று வானத்தில்உள்ளவர்களும் நிலைகெட்டு (துண்ட காணோம் துணிய காணோம் என்பது போல அலறி அடிச்சிக்கிட்டு என்ன செய்வதன்றே தெரியாம) கலங்கி ஓடும்படி இருந்த என் இறைவன் (என் அம்மான்) என் செல்லம் நரசிம்ம பெருமாள் இருக்குமிடம் ஒன்றோடொன்று சேர்ந்து கிடந்த அடர்த்தியாக குகை போல இருக்கும் மூங்கில்களில் (மறைந்து) நின்று புலிகள் பெரிய வழி பாதையில் அலைந்து திரிந்த (யானைகள் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்ள யானைகள்)காலடி தடத்தை பார்க்கும் சிங்கவேல்குன்றமே!

1014
முனைத்த சீற்றம் விண்சுடப் போய் மூவுலகும் பிறவும்*
அனைத்தும் அஞ்ச ஆளரியாய் இருந்த அம்மானதிடம்*
கனைத்த தீயும் கல்லுமல்லா வில்லுடை வேடருமாய்*
தினைத்தனையும் செல்ல வொண்ணாச் சிங்கவேள்குன்றமே*. 1.7.7

விளக்கம்:-

(அந்த ராஸ்கல் இரணியன் பண்ண அக்கிரமத்தால் வந்த) உச்சகட்ட கோபத்தால் விண்ணுலகமே வெப்பமாகுது! மூன்று உலகங்களும் , மற்ற உலகங்களும், அனைத்தும் பயப்படும்படி மனிதனும் சிங்கமும் கலந்ததுபோல உருவம் எடுத்த (என் இறைவன் நரசிம்ம பெருமாள்) இருக்குமிடம், தக தகன்னு (சத்தமிட்டு கொண்டே எரிகின்ற) தீயும், கற்களும், அதுமட்டுமில்லாம வில்லை உடைய வேடர்களும் (சுற்றி கொண்டிருப்பதால் இதற்க்கு மேல்) சிறிதளவும் செல்ல முடியாத சிங்கவேல்குன்றமே!


Ahobilam one of the narasimmar Temple

1015
நாத்தழும்ப நான்முகனும் ஈசனுமாய் முறையால்
ஏத்த*அங்கோர் ஆளரியாய் இருந்த அம்மானதிடம்*
காய்த்த வாகை நெற்று ஒலிப்பக் கல் அதர் வேய்ங்கழை போய்*
தேய்ந்த தீயால் விண்சிவக்கும் சிங்கவேள்குன்றமே. 1.7.8

விளக்கம்:-

நாக்கு தழு தழுக்க (உணர்ச்சி பெருக்கோட) நான்கு முகமுடைய பிரம்மனும், ஈசனும், (எங்க பெருமாளின் மீது அன்பு கொண்டு அவர் புகழ் பாடி) வழிபட, அங்கு (ஓர் தூணில்) மனிதனும் சிங்கமும் கலந்தார் போல உருவம் கொண்டு எழுந்தருளிய (எனது அருமை நண்பன் நரசிங்க பெருமாள்) இருக்குமிடம், வாகை மரத்தில் நன்கு முதிர்ந்து வளர்ந்த காய்கள் (சல சல என்று) சத்தமிட, (அடடே! அப்புறம்) கற்களின் (இடுக்குகளின்) வழியில் (ஓங்கி வளர்ந்த) மூங்கில் மரங்கள் (ஒன்றோடு ஒன்று) உரசியதால் (வந்த) தீயால் வானம் சிவந்து காணப்படும் சிங்கவேல்குன்றமே!

1016
நல்லை நெஞ்சே நாம் தொழுதும் நம்முடை நம்பெருமான்*
அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரம் தோளன் இடம்*
நெல்லி மல்கிக் கல் உடைப்பப் புல் இலை ஆர்த்து* அதர்வாய்ச்
சில்லு சில்லென்று ஒல்லறாத சிங்கவேள்குன்றமே 1.7.9


விளக்கம்:-

நல்ல நெஞ்சே! நாம் வழிபடும் நம்மை (சொத்தாக) உடைய நம் பெருமாள்,
(மாலையில் நீரில் பூக்கும்) அல்லி (மலரை போல அழகாக இருக்கும்)
மகாலட்சுமியை கட்டி பிடிச்சிக்கிட்டு நின்ற,ஆயிரம் தோள்கள் (போல வலிமை ) உடைய (எமது தாயும் தந்தையும் குருவும் தெய்வமும் ஆன நரசிம்ம பெருமாள்) இருக்குமிடம், நெல்லிக்காய் (மரங்கள்) நிறைய வளர்ந்து (மலை) கல்லை உடைக்க, (இந்த பக்கம் பார்த்தா!) பனை மற்றும் தென்னை ஓலைகள் (சல சலன்னு) சத்தம் போட, (இந்த அழகை பார்த்து கொண்டே போனால் வழியில்) சில் (வண்டுகளின்) சில்ல் என்ற சத்தம் நீங்காத சிங்கவேல்குன்றமே!


1017
செங்கண் ஆளி இட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றுடைய*
எங்கள் ஈசன் எம்பிரானை இருந்தமிழ் நூல் புலவன்*
மங்கையாளன் மன்னு தொல் சீர் வண்டறை தார் கலியன்*
செங்கையாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே. 1.7.10

விளக்கம்:-

சிவந்த கண்களுடைய சிங்கங்கள் (வேட்டையாடி கிடைக்கும் பொருள்களை எம் நரசிம்ம பெருமானின் பாதத்தில் வைத்து வழிபடும்) சிங்கவேல்குன்றில் வசிக்கும் எம் ஈசன் எம் தலைவருமான (எம் சிங்கக்குட்டி, சுஜ்ஜ்ஹு குட்டி என் செல்லம், என் குழந்தை, என் நண்பன், எமக்கு தாய், தந்தை, குரு , தெய்வம், பரம்பொருளுமான நரசிங்கபெருமாளை பற்றி ) பெருமைக்குரிய தமிழ் நூல் புலவனாகிய திருமங்கை மன்னன் என்றுமே நிலைத்து நிற்கும் சிறந்த பழமை வாய்ந்த அழகான செய்யுள் வரிகளை கொண்டு, வண்டுகள் சத்தமிடகூடிய (இடத்தில்) கழுத்தில் மாலை அணிந்துள்ள கலியன் (கொடுத்து கொடுத்து) சிவந்த கைகளுக்கு சொந்தகாரனுமாகிய (நான் பாடிய) இலக்கண சொல்மாலையை (என்னை போலவே பெருமாளை அன்போடு எண்ணி சொல்ல) வல்லவர் குற்றம் இல்லாதவர்!


I Love Narasimmar

திருமங்கை ஆழ்வார் சொன்ன சிங்கவேள்குன்றம்
அகோபிலம் என்று அழைக்கப்படுகிறது. இது சென்னை - மும்பை ரயில் பாதையில் கடப்பா ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து 32 கி.மீ. சென்றால் இத்தலத்ததை அடையலாம். இத்தலம் ஆந்திரமாநிலத்தில் உள்ளது. இதற்கு நவநரசிம்ம க்ஷேத்திரம் என்னும் பெயரும் உண்டு. இங்கு மலையடிவாரத்தில் ஒரு கோயிலும் மலையின் மேல் ஒரு கோயிலும் உண்டு. இது அகோபில மடத்தின் தலைமையிடமாகும்.
வராக நரசிம்மர், மாலோல நரசிம்மர், யோகானந்த நரசிம்மர், பாவனா நரசிம்மர், கராஞ்ச நரசிம்மர்,சத்ரவட நரசிம்மர், பார்கவா நரசிம்மர், ஜ்வால நரசிம்மர், அஹோபில நரசிம்மர் என்று நவ நரசிம்மர்களை சேவிக்க மூன்று நாட்கள் தேவைப்படும்,

அனைவருக்கும் நரசிம்மரின் அருளும் ஆசிர்வாதமும் பெற்று நலமோடு
வாழ வாழ்த்துக்கள்!

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

நைமிசாரணியத்துள் எந்தாய்!- திருமங்கை ஆழ்வார் (998-1007)


Sri Hari - Naimi Saaranyam



பெரிய திருமொழி

998
வாணிலா முறுவல் சிறுநுதல் பெருந்தோள் மாதரார் வனமுலைப் பயனே பேணினேன்*
அதனைப் பிழையெனக் கருதிப் பேதையேன் பிறவி நோயருப்பான்*
ஏணிலேன் இருந்தேன் எண்ணினேன் எண்ணி இளையவர் கலவியின் திறத்தை* நாணினேன்
வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய்!. 1.6.1

விளக்கம்:-
நைமிசாரணியத்துள் வசிக்கும் என் தந்தையே! ஒளியுடைய நிலா போல (சிநேகா மாதிரி)
மெலிசா சிரிப்பையும், (லைலா மாதிரி) சிறிய நெற்றியும், (குஷ்பூ மாதிரி) பெரிய
தோளையும் , பெண்களின் பெரிய செழிப்பான முலைகளை ( ஆன்னு பார்த்து ஜொள்ளு
விட்டு கொண்டு இவைகளே பேரின்பம் என்று இதுநாள்வரை)கருதினேன் . இதெல்லாம் தப்புன்னு கருதி உலக உண்மையை அறியாமல் பிறவி என்னும் நோயை அறுக்கும் உன் எண்ணமே இல்லாமல் இருந்தேன்.ஆனா இப்போ எண்ணினேன் முன்பு பெண்களின் உடலுறவில் (ஈடுபட்டதை) எண்ணிவெட்கி தலை குனிந்தேன். உடனே வந்து உன் திருவடியை அடைந்தேன்.நைமிசாரணியத்துள் வசிக்கும் என் தந்தையே!

999
சிலம்படி உருவிற் கருநெடுங் கண்ணார் திறத்தனாய் அறத்தையே மறந்து*
புலம்படிந்துண்ணும் போகமே பெருக்கிப் போக்கினேன் பொழுதினை வாளா*
அலம்புரி தடக்கை ஆயனே! மாயா! வானவர்க்கரசனே!*
வானோர் நலம் புரிந்து இறைஞ்சும் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய். 1.6.2


விளக்கம்:-
நைமிசாரணியத்துள் வசிக்கும் என் தந்தையே! சிலம்புகளை காலில் போட்டுக்கிட்டு
(நமிதா கணக்கா டான்ஸ் ஆடும்) கறுத்த நீண்ட கண்களையுடைய பெண்களிடமே மனம்
செலுத்தியதால் ஒழுக்கத்தை மறந்தேன். புலன்களால் உண்டான இன்பங்களை பெருக்கி
வீணாக நாட்களை கழித்தேன். சஞ்சலம் உள்ளவர்களுக்கு மனம் நிறைந்து சந்தோசபடும்படி கொடுக்க கூடிய (கொடுத்து கொடுத்து சிவந்த) பெரிய கையப்பா நீ! (என் கண்ணனே!)
மாடுகளை மேய்ப்பவனே! மாயவனே! வானவர்களின் அரசனே! வானத்தில் இருப்பவர்களும் தங்கள் நலனை வேண்டி வணங்கும்உன் திருவடி அடைந்தேன். நைமிசாரணியத்துள் வசிக்கும் என் தந்தையே

1000
சூதினைப் பெருக்கிக் களவினைத் துணிந்து சுரிகுழல் மடந்தையர் திறத்து*
காதலே மிகுத்துத் கண்டவா திரிந்த தொண்டனேன் நமன் தமர் செய்யும்*
வேதனைக் கொடுங்கி நடுங்கினேன் வேலை வெண்திரை அலமரக் கடைந்த *நாதனே
வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய். 1.6.3

விளக்கம்:-

நைமிசாரணியத்துள் வசிக்கும் என் தந்தையே! (உள்ளே வெளியே என்று மங்காத்தா
கணக்கா) சூதாட்டம் ஆடிகிட்டு இருந்தேன், கூடவே தைரியமா திருடவும் செய்தேன்.
(அதுமட்டுமா அழகா) சுருள் முடி உடைய டீன் ஏஜ் பொண்ணுங்களின்
தொடர்பினால் காதலே மிகுந்து, கண் போன போக்கிலே ஊரை சுத்திக்குனு இருந்தேன்.
தங்களின் தொண்டன் (அச்சோ! நான் செஞ்ச தப்புக்கெல்லாம்) யமனின் தூதர்கள் செய்யும் வேதனைகளை நினைத்து பார்த்து அடங்கி (திகு திகுன்னு பயத்துல) நடுங்கினேன். தேவர்களின் சஞ்சலம் தீர்ப்பதற்காக (நுரையுடன் பொங்கும் வெண்மை நிற) அலைகள்
பிச்சிக்கிட்டு அடிக்கும் கடலை கடைந்த நாதனே! வந்து உன் திருவடி அடைந்தேன். நைமிசாரணியத்துள் வசிக்கும் என் தந்தையே!

1001
வம்புலாங் கூந்தல் மனைவியைத் துறந்து பிறர் பொருள் தாரமென்று இவற்றை*
நம்பினார் இறந்தால் நமன் தமர் பற்றி ஏற்றி வைத்து*
எரி எழுகின்ற செம்பினால் இயன்ற பாவையைப் பாவீ தழுவென மொழிவதற்கு அஞ்சி*
நம்பனே வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய். 1.6.4

விளக்கம்:-

நைமிசாரணியத்துள் வசிக்கும் என் தந்தையே! வாசனையுள்ள அழகான கூந்தலை
உடைய பொண்டாட்டிய விட்டு மற்றவங்க பொருளையும் , இன்னொருத்தரோட
பொண்டாட்டிய (பார்த்து ஜொள்ளு விட்டு கொண்டு) இவற்றையெல்லாம் நம்பி (ஆசைபட்டு) இறந்தவர்களை , யம தூதர்கள் புடிச்சிக்கிட்டு போய் ஓரிடத்தில் வைத்து நல்லா
கொழுந்து விட்டு எரிகின்ற செம்பால் (Copper) செய்யப்பட்ட பெண்ணை (டேய் பாவீ)
இதை கட்டி தழுவி கொள்! என்று சொல்வதற்க்கு பயந்து , (நான் செய்த
குற்றகளை நீக்கி எம்மை பரிசுத்தமாக்குபவனே!) என்றுமே நம்ப தகுந்தவனே!
உன் திருவடி அடைந்தேன்.நைமிசாரணியத்துள் வசிக்கும் என் தந்தையே!

1002
இடும்பையால் அடர்ப்புண்டு இடுமினோ துற்றேன்று இரந்தவர்க்கு இல்லையே என்று*
நெடுஞ்ச்சொலால் மறுத்த நீசனேன் அந்தோ! நினைக்கிலேன் வினைப்பயன் தன்னை*
கடுஞ்ச்சொலார் கடியார் காலனார் தமரால் படுவதோர் கொடுமிறைக்கு அஞ்சி*
நடுங்கி நான் வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய்*. 1.6.5

விளக்கம்:-

நைமிசாரணியத்துள் வசிக்கும் என் தந்தையே! துன்பத்தால் மிகவும் வருத்தம் கொண்டு
பசி என்று கேட்டு வந்தவர்க்கு (போ! போ! என்னிடம்) இல்லை என்று கடுமையான
சொல்லால் மறுத்த கீழ்த்தரமானவன் நான்! ஐயோ! இதனால் எனக்கு ஏற்படும் தீமையான
விளைவுகளை நினைக்க வில்லையே! கோபத்துடன் கடுமையான வார்த்தைகளை
பேசும் காவல் பொருந்திய எமனார் அனுப்பிய தூதர்களால் படும் கொடுமைக்கு
பயந்து நடுங்கி நான் வந்து உன் திருவடி அடைந்தேன்.
நைமிசாரணியத்துள் வசிக்கும் என் தந்தையே

1003
கோடிய மனத்தால் சினத்தொழில் புரிந்து திரிந்து நாய் இனத்தொடும் திளைத்திட்டு*
ஓடியும் உழன்றும் உயிர்களே கொன்றேன் உணர்விலேன் அதனால்*
நமனார் பாடியைப் பெரிதும் பரிசழித்திட்டேன் பரமனே! பாற்கடல் கிடந்தாய்*
நாடி நான் வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் *. 1.6.6

விளக்கம்:-

நைமிசாரணியத்துள் வசிக்கும் என் தந்தையே! ஒழுக்கமே இல்லாத மனச வச்சிக்கிட்டு
தவறான செயல்களை செய்து, ஊரை சுற்றிக்கொண்டு, (அச்சச்சோ யப்பப்பா)
நாயை போல (தெரு தெருவா சுற்றும் இனத்தவரோடு) சேர்ந்து இங்கேயும் அங்கேயும்
ஓடி அலைந்து திரிந்து சுய புத்தி இல்லாமல் உயிர்களை கொன்றேன்.அதனால் யமனின் (நரகமென்னும்) ஊரை (பரிசாக கிடைத்திருக்க வேண்டியது! மனம் திருந்தி உன்னிடம் சரண் அடைந்ததால் இப்போது அந்த நரகமென்னும் பரிசை) பெரிதும் அழித்துவிட்டேன். பரமனே!
பாற்கடலில் (ஹாயாக) படுத்து கொண்டிருப்பவனே! நாடி நான் வந்து உன் திருவடி அடைந்தேன்.


1004
நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும் நீதியல்லாதன செய்தும்*
துஞ்சினார் செல்லும் தொல்நெறி கேட்டே துளங்கினேன் விளங்கனி முனிந்தாய்*
வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில் பிரியா வானவா தானவர்க் கென்றும் நஞ்சனே*
வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய்* 1.6.7

விளக்கம்:-

நைமிசாரணியத்துள் வசிக்கும் என் தந்தையே! தப்பு தப்பான காரியங்களை மனசுல
நினைத்தும்,வாயினால் சொல்லியும், நியாயம் இல்லாததை செய்தும், (இப்படியெல்லாம்
வீணான வாழ்க்கை வாழ்ந்து) இறந்தவர்கள் செல்லும் (நரகம் பற்றி) பெரியவர்கள்
சொல்ல கேட்டு (பயந்து போய்) நடுங்கினேன். விளா மரமாகி (நின்ற அசுரனை) அழித்தாய்!
(எம்கண்ணனே!) தீய எண்ணங்கள் உடைய அடியேனின் நெஞ்சினில்பிரியாமல் இருக்கும்
வானவனே!(தேவாதி தேவனே!) அசுரர்களுக்கு என்றும் விஷமானவனே!
வந்து உன் திருவடி அடைந்தேன்.


1005
ஏவினார் கலியார் நலிக வென்று என் மேல் எங்கனே வாழுமாறு?*
ஐவர் கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன் குறுங்குடி நெடுங்கடல் வண்ணா!
பாவினார் இன்சொல் பன்மலர் கொண்டு உன் பாதமே பரவி நான் பணிந்து*
என் நாவினால் வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய்*. 1.6.8


விளக்கம்:-

நைமிசாரணியத்துள் வசிக்கும் என் தந்தையே! தளர்ச்சியடைந்து (நொந்து போடா! என்று )
கலியனார் (என் மேல் ஐம்புலன்களால் ஆன ஆசையை) ஏவி விட்டார் . (நான் உன்னிடம் சரணடைந்து விட்டேன் ஹி ஹி) இனிமேல் அவர் எங்கே வாழ போகிறார்!
(கண், காது, மூக்கு, நாக்கு, தோல் முதலான) ஐம்புலன்களால் (ஆன ஆசை என்னை) அரசாண்டு செய்யும் கொடுமையை (அடியோடு) அழித்து விட்டேன். திருக்குறுங்குடியில்
(வசிக்கும்) நெடுங்கடல் (நிற) வண்ணா! என் வாயினால் இனிமையான சொல்லெடுத்து
பாடி, பல வித விதமான மலர்களை கொண்டு, உன் பாதத்தில் தூவி, நான் பணிந்து வந்து
உன் திருவடி அடைந்தேன்.

1006
ஊனிடைச் சுவர்வைத்து என்பு தூண் நாட்டி உரோமம் வேய்ந்த ஒன்பது வாசல்*
தானுடைக் குரம்பைப் பிரியும் போது உன் தன் சரணமே சரணம் என்றிருந்தேன்
தேனுடைக் கமலத் திருவினுக்கரசே! திரைகொள் மாநெடுங்கடல் கிடந்தாய்*
நானுடைத் தவத்தால் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய்*. 1.6.9

விளக்கம்:-

நைமிசாரணியத்துள் வசிக்கும் என் தந்தையே! தசைகளை சுவராக வைத்து, எலும்புல
தூணை நட்டு,(அடடே நீ பெரிய Architect போல) முடியினால் கூரை கட்டி, (இரண்டு கண்கள்,
இரண்டு காதுகள் + இரண்டு மூக்குத் துவாரங்கள் + வாய் + சிறுநீர்ப்பாதை + மலப்பாதை)
ஆக ஒன்பது வாசல் உடைய உடல் பிரியும்போதுஉன்னுடைய (திருவடி) சரணமே சரணம்
என்று இருந்தேன். தேன் உடைய தாமரையில் (அமர்ந்துள்ள) மகாலட்சுமியின் அரசே! அலைகள் உள்ள பெரிய நீளமான கடலில் (அழகாக பாம்பு படுக்கையில்) படுத்து கொண்டு இருப்பவனே! (உன் திருவடியை பாசத்துடன் உள்ளத்திலேயே வைத்து இருந்தேன்)
நான் வைத்திருந்த (அந்த) தவத்தால் உன் திருவடி அடைந்தேன்

1007
ஏதம் வந்து அணுகா வண்ணம் நாம் எண்ணி எழுமினோ தொழுதும் என்று *
இமையோர் நாதன் வந்து இறைஞ்சும் நைமிசாரணியத்து எந்தையை ச் சிந்தையுள் வைத்து*காதலே மிகுத்த கலியன் வாயொலி செய் மாலை தாம் கற்று வல்லார்கள்*
ஓத நீர் வையகம் ஆண்டு வெண்குடைக்கீழ் உம்பரும் ஆகுவர் தாமே. 1.6.10

விளக்கம்:-

துன்பம் வந்து சேராம இருக்கணும்னு நாம் எண்ணினால் எழுந்துருங்கள், வழிபடுவோம்
என்று தேவர்கள் தலைவன் இந்திரன் (தேவர்களுடன்)வந்து வழிபடும் நைமிசாரணியத்தில்
வசிக்கும் என் தந்தையை உள்ளத்தில் வைத்து அவர் மேல் காதல் அதிகமாகி களியனாகிய
நான் வாயால் பாடிய இந்த சொல் மாலையை (நீங்கள்) கற்று (என்னை போலவே பாசத்துடன்
பெருமாளை எண்ணி இந்த பாசுரங்களை கூறினால்) கடல் சூழ்ந்த உலகம் ஆண்டு
வெள்ளை நிற குடையின் கீழே தேவர்களும் நீங்க ஆவீர்கள்!

Naimi Saaranyam Temple


திருமங்கை ஆழ்வார் சொன்ன திருநைமிசாரண்யம்
உத்திராஞ்சல மாநிலத்தில் உள்ளது. கல்கத்தா-டோராடூன் ரயில் பாதைaயில் உள்ள பாலமாவ் என்னும் ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து சீதாப்பூர் செல்லும் புகைவண்டியில் ஏறி நைமி சாரண்யம் என்னும் ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும். ரயிலடியிலிருந்து 3கி.மீ. தொலைவில் கோயில் உள்ளது. அயோத்தியிலிருந்து 3 மணி நேரம் பேருந்துப் பயணம் ஆகும்.

பெருமாள்:- தேவராஜன், or ஸ்ரீ ஹரி (நின்ற கோலம்)
தாயார்:- ஸ்ரீ ஹரி லட்சுமி, or ஸ்ரீ புண்டரீகவல்லி தாயார்

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

சாளக்கிராமம் அடை நெஞ்சே!- திருமங்கை ஆழ்வார் (988-997)


Sri Moorthy Perumal - Thiru Saalagiraamam

பெரிய திருமொழி
988
கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய்*
சிலையும் கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செருக்களத்து*
மலை கொண்டு அலைநீர் அணைகட்டி மதிள் நீர் இலங்கை வாளரக்கர் தலைவன்*
தலை பத்து அறுத்துகந்தான் சாளக்கிராமம் அடை நெஞ்சே. 1.5.1

விளக்கம்:-

மான்களும், யானைகளும், குதிரைகளும் திரியும் காட்டை கடந்து போய் வில்லையும் அம்பையும் துணையாக கொண்டு வெற்றி தரும் போர் களத்துக்கு சென்றான்.. அது மட்டுமா அந்த காலத்துலேயே அனுமன் மற்றும் அவரோட நண்பர்கள் துணையோடு மலைகளை கொண்டு அலை சூழ்ந்த பெரிய கடலில் பிரிட்ஜ் கட்டி, பெருசு பெருசா சுவரையையும், கடலையும் கொண்ட இலங்கையில் கத்தியை கையில் வைத்துள்ள அரக்கர்கள் தலைவனான (அந்த ராஸ்கல்) இராவணனின் பத்து தலைகளையும் அறுத்து மகிழ்ந்தான்.
(தயவு செய்து எங்க ஸ்ரீ ராமர் வசிக்கும்) சாளகிராமம் அடை நெஞ்சே!

989
கடம் சூழ் கரியும் பரிமாவும் ஒலி மாந்தேரும் காலாளும்*
உடன் சூழ்ந்து எழுந்த கடி இலங்கை பொடியா வடிவாய்ச் சரம் துரந்தான்*
இடம் சூழ்ந்து எங்கும் இருவிசும்பில் இமையோர் வணங்க மணம் கமழும்*
தடம் சூழ்ந்து எங்கும் அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே*. 1.5.2

விளக்கம்:-

நல்லா மதம் பிடித்த யானைகளும், குதிரைகளும், சத்தத்தோடு வரும் பெரிய தேரும் , நின்று சண்டை போடும் போர் வீரர்களும், சூழ்ந்து காணப்படும் காவல் கொண்ட இலங்கையை (மொளகா பொடி மாதிரி) பொடி பொடியா ஆக்குவதற்கு கூரான அம்புகளை அற்புதமா விட்ட (எங்க ஸ்ரீ , ராமரை) பெரிய வானத்தில் உள்ள தேவர்கள் நிலத்தில் எல்லா இடமும் சூழ்ந்து வணங்க வசதியா நல்ல வாசனையுள்ள மலர்கள் நிறைந்துள்ள குளங்களால் சூழப்பட்டு எங்கும் அழகாக காட்சி அளிக்கும் சாளகிராமம் (தயவு செய்து) அடை நெஞ்சே!

990
உலவு திரையும் குலவரையும் ஊழி முதலா எண் திக்கும்*
நிலவும் சுடரும் இருளுமாய் நின்றான் வென்றி விறலாழி வலவன்*
வானோர் தம்பெருமான் மருவா அரக்கர்க்கு எஞ்ஞான்றும் சலவன்*
சலம் சூழ்ந்து அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே*. 1.5.3

விளக்கம்:-

எப்பவுமே உலாத்தி கொண்டிருக்கும் கடல் அலையும், மலையும், (Daily வரும்
நாட்கள் அதாங்க காலம் அதோடு எட்டு திசைகள், நிலா, அப்புறம் சூரியன், இருளும் ஆக நின்றான் (அப்பா! அப்பப்பா எல்லாமே அவர்தாங்க! யாரு! தெரியுமா! இதோ!) வெற்றி ஒன்றையே தரும் சக்கரத்தை வலக்கையில் வைத்து கொண்டிருக்கும் தேவர்களுக்கும் தேவன் (எம் பெருமான்) அவரிடம் நெருங்காத, சரணடையாத (நீ என்ன சொல்றது! நான்தான் அப்படின்னு திமிரா இருக்கிற அரக்கர்களுக்கு எப்பவுமே பகைவன்.(தயவு செய்து எம் பெருமான் வசிக்கும்) நீரால் சூழப்பட்டு அழகாக காட்சி அளிக்கும் சாளகிரமம் அடை நெஞ்சே!


991
ஊரான் குடந்தை உத்தமன் ஒருகால் இருகால் சிலை வளைய*
தேரா அரக்கர் தேர் வெள்ளம் செற்றான் வற்றா வருபுனல் சூழ் பேரான்*
பேராயிரம் உடையான் பிறங்கு சிறை வண்டு அறைகின்ற தாரான்*
தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே. 1.5.4

விளக்கம்:-

திரு ஊரான், திருகுடந்தை உத்தமன் ,ஒரு முறை என்ன செஞ்சான்னா!
பெரிய வில்லை வளைத்து நன்மை எது என்றே! ஆராயாம (எங்க ஸ்ரீ ராமரோடு போரிட வந்த ) அரக்கர் சேனைகளை ஒட்டுமொத்தமாக அழித்தான். வற்றாத காவிரி ஆறு சூழ்ந்த திருபேரான்.. அவனோட பெயரும் ஆயிரம். (ஏ மனமே!) துளசி மாலையை அணிந்தவன் எம்பெருமான். சிறகுகள் உடைய வண்டுகள் ஆரவாரம் செய்யும் தாரா என்னும் நீர் பறவை நிறைந்துள்ள வயல்கள் சூழ்ந்த இடத்தில இருக்காரு! தயவு செய்து எம்பெருமான் வசிக்கும் இடமான சாளகிராமம் அடை நெஞ்சே!


992
அடுத்தார்த்தெழுந்தாள் பிலவாய் விட்டு அலற அவள் மூக்கு ஆயில் வாளால் விடுத்தான்* விளங்கு சுடராழி விண்ணோர் பெருமான் நண்ணார் முன்*
கடுத்தார்த் தெழுந்த பெருமழையைக் கல் ஒன்று ஏந்தி இனநிரை காத்தடுத்தான்*
தடம் சூழ்ந்து அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே. 1.5.5

விளக்கம்:-

ஒரே அட்டகாசம் ஆரவாரம் செய்து கொண்டு தன்னை அணுகி வந்த அரக்கி
சூர்பனகையின் குகை போன்ற வாயை தொறந்து அலறும்படி அவள் மூக்கை கூறிய வாளால் அறுத்தான். பளிச்சுன்னு இருக்கிற சங்கை வைத்துள்ளவன். வானத்தில் உள்ள தேவர்களுக்கும் பெருமான் (என்ன செஞ்சாருன்னா!) முன் பகையால் கோபம் கொண்டு ஆரவாரம் செய்து கொண்டு வந்த பிச்சிக்கிட்டு அடிக்கும் பயங்கர மழையை பெரிய மலையை கையில் தூக்கி (மழை , புயல் தாக்காதவாறு) பசு கூட்டங்களை காப்பாற்றினான். (மனமே தயவு செய்து இப்படிப்பட்ட நல்லவன் எம் கண்ணன் வசிக்கும் இடமான) குளம் சூழ்ந்து அழகாக காட்சி அளிக்கும் சாளகிரமம் அடை நெஞ்சே!

993
தாயாய் வந்த பேயுயிரும் தயிரும் விழுதும் உடனுண்ட வாயான்*
தூய அரியுருவிர் குறள் ஆய்ச் சென்று மாவலியை ஏயான் இரப்ப*
மூவடி மண் இன்றே தாவென்று உலகேழும் தாயான்*
காயா மலர் வண்ணன் சாளக்கிராமம் அடை நெஞ்சே. 1.5.6

விளக்கம்:-

அம்மா மாதிரியே உருவு எடுத்து வந்த பேயான பூதனையின் உயிரையும், தயிரும் வெண்ணையும் சேர்த்து உண்ட வாயான். பிறரிடம் மன்றாடி பொருள் கேட்கும் தொழிலை செய்யாதவன் . தூய்மையான குட்டி குள்ளமா வடிவம் எடுத்து (வாமனனா) சென்று மாவலியிடம் கை நீட்டி மூன்று அடி மண் இன்று எனக்கு கொடுக்கிறியா! என்று கேட்க (ஹூம் ஜுஜூபி மூன்று அடிதானே எடுத்துக்கோ! என்பது போல மாவலியும் சம்மதிக்க உடனே வாமனான நம்ம குள்ள பெருமாள் திரிவிக்ரமனாக பெரிய உருவம் எடுத்து இரண்டே அடியில் உலகம் அளந்தான்.எம் உலகளந்த பெருமாள்) ஏழு உலகங்களுக்கும் தாய் ஆனவன் தெரியுமா! (காயா மலரை போல நீல கலருடையவன்! தயவு செய்து) காயா மலர் வண்ணன் வசிக்கும் இடமான சாளகிராமம் அடை நெஞ்சே!

994
ஏனார் அஞ்ச வெஞ்சமத்துள் அரியாய்ப் பரிய இரணியனை*
ஊனார் அகலம் பிளவெடுத்த ஒருவன் தானே இருசுடராய்*
வானாய்த் தீயாய் மாருதமாய் மலையாய் அலை நீர் உலகனைத்தும் தானாய்*
தானும் ஆனான் தன் சாளக்கிராமம் அடை நெஞ்சே*. 1.5.7

விளக்கம்:-

சுற்றி இருக்கிறவங்க (அரக்கர்கள்) பயப்படும்படி அந்தி சாயும் மாலை வேளையில் நரசிம்ம உருவெடுத்து பருத்த நல்ல குண்டா இருந்த இரணியனின் பெரிய உடலை பிளந்த ஒருவன் (என் செல்லம் என் நரசிம்மன்) சந்திரனாகவும் , சூரியனாகவும் , வானமாகவும் , நெருப்பாகவும் , காற்றாகவும், மலையாகவும் , கடலாகவும், உலகம் எல்லாம் தானாய், தானே தானும் ஆனான் .( தயவு செய்து அவன் வசிக்கும் இடமான)
சாளகிராமம் அடை நெஞ்சே!

My Heart going to Saalagiraamam

995
வெந்தார் என்பும் சுடு நீரும் மெய்யில் பூசிக் கையகத்து*
ஓர் சந்தார் தலைக்கொண்டு உலகேழும் திரியும் பெரியோன் தான் சென்று*
என் எந்தாய்! சாபம் தீர் என்ன இலங்கமுது நீர் திருமார்பில் தந்தான்*
சந்தார் பொழில் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே*. 1.5.8

விளக்கம்:-

வெந்து போன எலும்பையும் , சுடுகாட்டு சாம்பலையும் உடம்புல அணிந்து பூசி கையில மண்டை ஒட்டு தலையை வச்சிக்கிட்டு உலகம் முழுதும் (உலகம் சுற்றும் வாலிபன் போல)சுற்றி கொண்டு திரியும் பெரியவர் எம் ஈசன் பெருமாளிடம் சென்று அச்சோ! என்னோட தந்தையே! (பிரம்மன் தலையை வெட்டியதால் வந்த) சாபம் தீர்க்கணும் என்று கேட்க (பரம்பொருளான பெருமாளின் எச்சிலும் அமுதம்! வியர்வையும் அமுதம் தெரியுமா! கேட்டவுடனே நம்ம ஹீரோ பெருமாள்) தன்னோட
திரு மார்பில் இருந்து அமுத நீரை கபாலத்தில் இட்டு ஈசனின் சாபம் தீர்த்தார். (தயவு செய்து எம்பெருமான் வசிக்கும் ) சந்தன மர சோலைகள் நிறைந்த சாளகிராமம் அடை நெஞ்சே!


996
தொண்டாம் இனமும் இமையோரும் துணை நூல் மார்பின் அந்தணரும்*
அண்டா எமக்கே அருளாய் என்று அணையும் கோயில் அருகெல்லாம்*
வண்டார் பொழிலின் பழனத்து வயலின் அயலே கயல் பாய*
தண் தாமரைகள் முகமலர்த்தும் சாளக்கிராமம் அடை நெஞ்சே*. 1.5.9

விளக்கம்:-

தொண்டு செய்பவர்களும் , தேவர்களும் , பூணூல் மார்பில் அணிந்த பிராமணர்களும், உலகங்களின் தலைவனே எமக்கே அருள் புரிய வேண்டும் என்று ஒன்று சேர்ந்து வழிபடும் கோவில் பக்கத்தில வண்டுகள் சத்தம் விடும் அழகான தோட்டத்துல உள்ள மருத நிலத்து வயலில் உள்ள நீரில் வெளியூர்ல இருந்து கயல் மீன்கள் ஒரே பாய்ச்சலா பாய்ந்து பூந்து விளையாடுதுங்க! இதை பார்த்து சில்லுன்னு குளிர்ந்த தாமரைகள் (ஈன்னு இளிச்சுக்கிட்டு) முகம் மலர (அப்ப்பப்பா! இவ்ளோ அழகான ஊரில் எம்பெருமான் வசிக்கிறாரே! தயவு செய்து) சாளகிராமம் அடை நெஞ்சே!

997
தாராவாரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத்து அடிகளை
காரார் புறவின் மங்கை வேந்தன் கலியன் ஒலி செய் தமிழ்மாலை*
ஆரார் உலகத்து அறிவுடையார் அமரர் நன்னாட்டு அரசாள*
பேராயிரமும் ஒதுமின்கள் அன்றி இவையே பிதற்றுமினே*1.5.10

விளக்கம்:-

தாரா நீர் பறவைகள் வாழும் வயல்கள் சூழ்ந்த அழகான சாளகிராமத்தில் வசிக்கும் எம் அடிகளை எம் பெருமானை கரிய காடுகள் நிறைந்த திருமங்கை நாட்டு மன்னன் கலியன் பாடிய தமிழ் மாலையை இந்த உலகத்தில் அறிவு உடையவர்களே! வானோர் நல்ல நாட்டை அரசாள வேண்டுமானால் (அந்த அளவுக்கு உங்களுக்கு திறமை வந்து விடும்) எம்பெருமானின் பெயர்கள் ஆயிரத்தை சொல்லுங்கள் அல்லது இந்த பத்து பாசுரங்களை ஆசையோடு எம்பெருமானை நினைத்து பிதற்றி கொண்டிருங்கள்,

Thiru Saalagiraamam - Mukthinath Temple


திருமங்கை ஆழ்வார் சொன்ன சாளக்கிராமம்
குத்தலம் நேபாள நாட்டில் உள்ள காட்மண்டு என்னும் நகரத்தின்
வடமேற்கில் 250 கி.மீ தொலைவில் உள்ளது. இது கண்டகி
நதிக்கரையில் உள்ள திவ்விய தேசமாகும்.
இதனை முத்திநாத் எனவும் வழங்குவர்.

பெருமாள்:- ஸ்ரீமூர்த்தி (நின்ற கோலம்)
தாயார்:- ஸ்ரீ தேவி நாச்சியார்