பொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா? "ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா! நோaயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்.

Wednesday, December 28, 2011

பெண்கள் கை கூப்பி தொழும்படி வீதியில் வருபவன் தேவர்கள் வணங்கும் குளிர்ச்சியான சிதம்பரம் எனப்படும் தில்லை சித்திரகூடத்துள்ளானே!

1174
ஆவர் இவை செய்து அறிவார்* அஞ்சன மா மலை போலே* 
மேவு சினத்து அடல் வேழம்* வீழ முனிந்து* அழகாய 
காவி மலர் நெடுங்கண்ணார்* கை தொழ வீதி வருவான்* 
தேவர் வணங்கு தண் தில்லைத்* சித்திரகூடத்துள்ளானே* 3.3.7

விளக்கம்:-
கண்ணனை தவிர யார் இந்த செயல்களை செய்வார்கள்!!! கரிய பெரிய மலை
போல மிகுந்த கோபத்துடன் தன்னை கொல்ல வந்த வலிமையான யானை மடியும்படி
வெகுண்டெழுந்து போர் செய்து  கொன்றவனே! என்று சொல்லி  அழகான நீல மலரை
போன்ற நீண்ட  கண்களையுடைய பெண்கள் கை கூப்பி தொழும்படி வீதியில் வருபவன் 
தேவர்கள் வணங்கும் குளிர்ச்சியான சிதம்பரம் எனப்படும்  தில்லை சித்திரகூடத்துள்ளானே!

மேலும் தெரிந்து கொள்ள விரும்பினால்:-
ஆவர் இவை செய்து அறிவார் - வேறு யார் இந்த செயல்களை செய்வார் (என் கண்ணனை தவிர)

அஞ்சன மா மலை போலே - கரிய பெரிய மலை போலே 

மேவு சினத்து அடல் வேழம் - மிகுந்த கோபமுடைய வலிமையான யானை 
வீழ முனிந்து - அழியும்படி வெகுண்டெழுந்த (கண்ணனை)

அழகாய காவி மலர் நெடுங்கண்ணார்  - அழகான நீல மலரை (போன்ற) நீண்ட கண்களையுடைய (பெண்கள்)

கை தொழ வீதி வருவான் - கை கூப்பி வணங்க வீதியில் வருபவன் 

தேவர் வணங்கு தண் தில்லைத் - தேவர்கள் வணங்கும் குளிர்ச்சியான தில்லைத் 

சித்திரகூடத்துள்ளானே - சித்திரகூடத்துள்ளானே


அருமையான பாசுரத்தில் வரும் முதல் கதை
"கொல்ல வந்த யானை மற்றும் மல்யுத்த வீரர்களை த்வம்சம் செய்த கண்ணன்"
கம்சன் தனூர் யாகம் ஒன்று உடனே நடத்தப்பட வேண்டும். அதைத் தொடர்ந்து மல்யுத்தப் போட்டியும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று ஆணையிட்டான். இந்த விழாவிற்கு கண்ணனுக்கும், பலராமனுக்கும் அழைப்பு விடுத்தான்.

சாணூரன், சலன் முதலிய மல்லர்களை அழைத்து, கோகுலத்தில் உள்ள நந்தகோபரின் மகன்களான கண்ணன், பலராமன் இவர்களால்தான் எனக்கு மரணம் என்று விதிக்கப்பட்டுள்ளது. எனவே, நான் ஏற்பாடு
செய்துள்ள மல்யுத்தத்திற்கு அவர்களை அழைத்துள்ளேன். நீங்கள் அவர்களுடன் மல்யுத்தம் செய்து அவர்களை அழித்துவிட வேண்டும்என்று ஆணையிட்டான்.
ஆனால் அதற்க்கு முன்பே கண்ணனை கொல்ல மேலும் ஒரு வழியை ஏற்பாடு செய்தான்குவலயாபீடம்என்னும் போர் யானையின் பாகனை அழைத்து மல்யுத்தம் காணவரும் கிருஷ்ணனையும், பலராமனையும், மல்யுத்த அரங்கு வாசலிலேயே குவலயாபீடத்தினால், மிதித்துக் கொல்ல ஏற்பாடு செய்என்றும் கம்சன் கட்டளையிட்டான். கண்ணன் அந்த யானையின் தந்தங்களை உடைத்து அதனைக் கொன்றான். அதன் பின் தயாராக இருந்த மல்யுத்த வீரர்களுடன் போரிட்டு அவர்களையும் த்வம்சம் செய்தான் கண்ணன்

9 comments:

அப்பாதுரை said...

படங்களுடன் கூடிய விளக்கம் (எங்கிருந்து தான் பிடிக்கிறீங்களோ) நிச்சயமாக இரண்டு மூன்று தடவைப் படிக்க வைக்கிறது.
பாராட்டுக்கள்.

நாடி நாடி நரசிங்கா! said...

Dear Mr. Appadurai,

Thanks for your nice comments:)

அப்பாதுரை said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

நாடி நாடி நரசிங்கா! said...

Hi,

Same to you:)

பால கணேஷ் said...

அப்பாத்துரை ஸார் சொல்லித்தான் தங்கள் தளத்தைக் கண்டறிந்தேன். இவ்வளவு நாள் கவனிக்காமல் போனோமே என்று வருந்தினேன். எவ்வளவு அருமையாக எழுதுகிறீர்கள். என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் மற்றும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Rajewh said...
This comment has been removed by the author.
நாடி நாடி நரசிங்கா! said...

Dear Mr. Ganesh,

Thanks for your wishes
& Wish you a very happy new year:)

Rajewh said...
This comment has been removed by the author.
நாடி நாடி நரசிங்கா! said...

Dear Mr.Rathnavel,

Nice to see you Thanks:)