பொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா? "ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா! நோaயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்.

Thursday, December 30, 2010

எந்தை தந்தை தம்மானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே



திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி


1068
வில் பெரு விழவும் கஞ்சனும் மல்லும்* வேழமும் பாகனும் வீழச்*
செற்றவன் தன்னை புரம் எரி செய்த* சிவன் உறு துயர் களை தேவை*
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன் நின்றானை*
சிற்றவை பணியால் முடி துரந்தானைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே* 2.3.1


வில் பெரு விழவும் - பெரிய வில் விழாவும்
கஞ்சனும் - (அதை நடத்திய) கம்சனும்,
மல்லும் வேழமும் பாகனும் - மல்யுத்த வீரர்களும் யானையும், யானை ஓட்டுபவனும்
வீழச் செற்றவன் தன்னை - (கீழே) விழ அழித்தவன்
புரம் எரி செய்த சிவன் உறு துயர் களை தேவை - திரிபுரம் எரிக்க செய்த சிவனின் துன்பம் நீக்கிய தேவனும்
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு - எதிரிகள் அழியுமாறு சாட்டை கையில் கொண்டு
பார்த்தன் தன் தேர் முன் நின்றானை - அர்ச்சுனன் தேர் முன் நின்றவனை
சிற்றவை பணியால் முடி துரந்தானைத் - சின்னம்மா உத்தரவால் அரச பதவியை விட்டு கொடுத்தவனை
திருவல்லிக்கேணிக் கண்டேனே - திருவல்லிகேணியில் கண்டேனே

விளக்கம்:-
(பெரிய வில் விழாவை (நடத்திய) கம்சனும், (கம்சன் அனுப்பிய) வலிமை வாய்ந்த வீரர்களும் ,யானையும், பாகனும் (கீழே மண்ணை கவ்வுமாறு) விழ (செய்து) அழித்தவன் கண்ணன் (ஹே சூப்பரு !), திரிபுரம் எரிக்க செய்த (நம் அன்பு) சிவன் (திரிபுர அசுரர்களை கொல்ல முடியாமல் தவிக்க அவருக்கு ஏற்பட்ட) துன்பத்தை நீக்கிய தேவனை
,கௌரவர்களான) எதிரிகள் அழிய) (எவனா இருந்தாலும் வாங்கடா! என்பது போல தில்லா!) கையில் சாட்டை கொண்டு அர்ச்சுனன் தேரில் முன் நின்றவனை, (தனது) சின்னம்மா கைகேயியின் கட்டளையால் அரச பதவியை (ஏற்காமல்) விட்டு கொடுத்தவனை திருவல்லிக்கேணியில் கண்டேனே. (Hey Hey jolly)


பாசுர விளக்கத்திற்கு ஏற்ற கண்ணனின் ஐந்து உண்மை கதைகளை பார்ப்போமா!

முதல் கதை
கொடிய அரக்கன் கம்சன் தங்கை தேவகியின் வயிற்றில் பிறக்கக்கூடிய எட்டாவது குழந்தை அரக்க சுபாவம் கொண்ட அந்த அரசனை கொல்லப் போகின்றது என்பதை முன்பே அறிந்து. குழந்தைகள் பிறக்கப் பிறக்க அவற்றை ஒவ்வொன்றாக கொல்லவும் செய்தான். பல ஆண்டுகளாக இது தொடர தேவகி எட்டாவதாக ஒரு ஆண் குழந்தையை பெற்றாள். தேவகியின் எட்டாவது குழந்தையை இந்த குழந்தையும் கம்சன் கொள்வான் என் பயந்து யாருக்கும் தெரியாமல் நந்த குலத்தில் உள்ள நந்தகோபரின் வீட்டிற்கு எடுத்து சென்றார்.
கம்சன் தன்னை கொள்ளும் ஒருவன் பிறந்து விட்டன என்பதை தெரிந்து கொண்டு அவனை கொல்ல பல திட்டங்களை போட்டான். அனைத்தும் தோல்வியில் முடிந்து கம்சனும் கண்ணனால் கொல்லபட்டான்.

இரண்டாம் கதை
கம்சன் வில் யாகம் ஒன்று நடத்தினான். அதற்க்கு கண்ணன் வர வேண்டும் என் அழைப்பு விடுக்க கண்ணனும் வந்தான். வில் யாகம் நடக்கிறது என்பதை உணர்த்துவதற்காக யாராலும் தூக்க முடியாத மிகவும் கனமான வில் ஒன்று வைத்திருந்தான்.. அதை பார்த்த கண்ணன் காவலர்களின் பேச்சை எல்லாம் சட்டை செய்யாமல் இடது கையில் Easyaa தூக்கி ஓடித்தான் . இந்த விஷயம் கம்சன் அறிந்த பின்பு கண்ணனின் வலிமையை கண்டு மிரண்டு போனான்


மூன்றாம் கதை
திருதராஷ்டினின் மகன்கள் கௌரவர்கள். திருதராஷ்டினின் தம்பி பாண்டுவின் மகன்கள் பாண்டவர்கள். கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடைப்பட்ட போரில் நல்லவர்களான பாண்டவர்களுக்கு கிருஷ்ணர் துணை இருந்தார், (பாண்டவர்களில் ஒருவரான அர்ச்சுனனுக்கு தேர் பாகனாக இருந்து உதவி செய்தார்)

நான்காம் கதை
சிவபக்தர்களான மூன்று அசுரர்கள் கடுமையாக தவம் புரிந்து வரமாக மூன்று பறக்கும் நகரங்களை பெற்றனர் . திரிபுரம் என்று அழைக்கப்பட்டது.பறக்கும் கோட்டைகள் மூன்றும் மிகவும் பிரகாசமாக ஒளிர்ந்தன. அவை பறக்கும்போது விண்ணிலும் மண்ணிலும் பலருக்கும் அவதி. பூமியில் இறங்கினாலோ மானிடருக்குக் கஷ்டம். விண்ணில் இறங்கினாலோ தேவர்கள் அனைவரும் படாத பாடு படுவார்கள்.. இதனால் சிவபெருமான் திரிபுரத்தை எரித்து அழித்தார். ஆனால் திரிபுர அரக்கர்களை கொல்ல முடியமால் போகவே சிவபெருமான் மிகவும் வருந்தினார் பெருமாள் அம்பாக மாறி சிவனுக்கு உதவி புரிந்தார்
அரக்கர்கள் கொல்ல பட்டனர்.

ஐந்தாம் கதை
தசரதனின் முதல் மனைவியான கோசலை மகன் இராமர். இரண்டாம் மனைவி (இராமருக்கு சிற்றன்னை ஆன) கைகேயி, அவளது மகன் பரதன். தசரதன் இராமன் மன்னனாக இருக்க முடிவு செய்ய கைகேயி சூழ்சிக்கார பெண் மந்தரை பேச்சை கேட்டு இராமரை காட்டுக்கு அனுப்பி தன் மகன் பரதனை மன்னனாக இருக்க ஏற்பாடு செய்தாள் .




1069
வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை* விழுமிய முனிவர் விழுங்கும்*
கோது இல் இன் கனியை நந்தனார் களிற்றைக்* குவலயத்தோர் தொழுது ஏத்தும்*
ஆதியை அமுதை என்னை ஆள் உடை அப்பனை* ஒப்பவர் இல்லா
மாதர்கள் வாழும்* மாட மா மயிலைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே* 2.3.2

வேதத்தை - வேத சொருபமானவனை
வேதத்தின் சுவைப் பயனை - வேதத்தின் சுவை பயனை தருபவனை
விழுமிய முனிவர் விழுங்கும் - உயர்ந்த முனிவர் விழுங்கும்
கோது இல் இன் கனியை - குற்றம் இல்லாத இனிய கனியை
நந்தனார் களிற்றைக் - நந்தகோபலனின் மகன் யானையை போன்றவனை
குவலயத்தோர் தொழுது ஏத்தும் - பூமியில் உள்ளோர் வணங்கி போற்றும்
ஆதியை அமுதை என்னை ஆள் உடை அப்பனை - ஆதியை அமுதை என்னை அடிமை கொண்ட அப்பனை
ஒப்பவர் இல்லா மாதர்கள் வாழும் - ஒப்பில்லாத பெண்கள் வாழும்
மாட மா மயிலைத் - மாடங்கள் சூழ்ந்த மா மயிலைத்
திருவல்லிக்கேணிக் கண்டேனே - திருவல்லிக்கேணியில் கண்டேனே



விளக்கம்:-
வேத ( சொருபமானவனை ) வேதங்களில் (அவரவர் விருப்பங்களின் படி பலன்கள் சொல்லப்பட்டு இருப்பதால் அவரவர் விருப்ப) சுவைக்கு (ஏற்றபடி) பயன் (தருபவனை) , சிறந்த உயர்வான முனிவர்கள் விழுங்கும் குற்றமே இல்லாத இனிய கனியை, நந்தகோபலரின் (செல்ல குட்டி பையன் வலிமையான) யானையை போன்றவனை,பூமியில் உள்ளவர்கள் (அன்போடும், பாசத்தோடும்) வழிபட்டு போற்றும் முழுமுதல் கடவுளை, (தித்திக்கும் தேன்) அமுதை, என்னை அடிமை கொண்ட அப்பனை, (தனக்கு) இணையானவர்கள் யாருமே இல்லாத (அழகான) பொண்ணுங்க வாழும் மாடங்கள் (சூழ்ந்த மயிலாப்பூர் என்ற) மாமயிலை (அருகில் உள்ள) திருவல்லிக்கேணியில் கண்டேனே. (Hey Hey jolly)




1070
வஞ்சனை செய்யத் தாய் உரு ஆகி* வந்த பேய் அலறி மண் சேர*
நஞ்சு அமர் முலை ஊடு உயிர் செக உண்ட நாதனைத்* தானவர் கூற்றை*
விஞ்சை வானவர் சாரணர் சித்தர்* வியந்து துதி செய்யப் பெண் உரு ஆகி*
அஞ்சுவை அமுதம் அன்று அளித்தானைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே* 2.3.3

வஞ்சனை செய்யத் தாய் உரு ஆகி - விசமத்தனம் செய்ய யசோதை உருவம் ஆகி
வந்த பேய் அலறி மண் சேர - வந்த பேய் அலறி தரையில் விழும்படி
நஞ்சு அமர் முலை ஊடு - விஷம் தடவிய முலை வழியாக
உயிர் செக உண்ட நாதனைத் - உயிர் ஒழியும்படி (முலை பாலை) உண்ட இறைவனைத்
தானவர் கூற்றை - அரக்கர் எமனை
விஞ்சை வானவர் சாரணர் சித்தர் - மேலோங்கிய வானவர் முனிவர் சித்தர்
வியந்து துதி செய்யப் பெண் உரு ஆகி - ஆச்சர்யபட்டு வழிபாடு செய்ய பெண் உருவம் ஆகி
அஞ்சுவை அமுதம் அன்று அளித்தானைத் - இனிய சுவை அமுதம் அன்று அளித்தவனைத்
திருவல்லிக்கேணிக் கண்டேனே - திருவல்லிக்கேணியில் கண்டேனே .

விளக்கம்:-
(கம்சன் கண்ணனை அழிக்க அனுப்பிய அரக்கி) நம்ப செய்து (கண்ணனுக்கு தீமை) செய்ய ) அம்மா (யசோதை) போல உருவம் மாறி வந்த பேய் (பூதனை ஆ! என்று பயங்கரமாக) அலறி மண்ணை கவ்வுமாறு , விஷம் தடவிய (மார்பக) முலை வழியாக (நம்ம செல்ல குழந்தை கண்ணன் பாலை குடிப்பது போல அந்த பேயின் உயிர் ஒழிய (முலை பாலை) உண்ட இறைவனை, அரக்கர்களின் எமனை,மேலோங்கிய வானவர், முனிவர், சித்தர் (போன்றோர்) வியந்து (போற்றி) வழிபாடு செய்யும் (நம் பெருமாள் அன்று தீயவர்களான அசுரர்களுக்கு அமிர்தம் சேராமல் தேவர்களுக்கு கிடைக்க) பெண் போல (மோகினி) வடிவம் கொண்டு (அரக்கர்களை மயக்கி தேவர்களுக்கு) இனிய சுவை உடைய அமுதம் அன்று அளித்தவனை, திருவல்லிக்கேணியில் கண்டேனே. (Hey Hey jolly)


பாசுர விளக்கத்திற்கு ஒரு கதை பார்ப்போமா!

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே அடிக்கடி போர் நடந்து கொண்டிருந்தது. அதனால் தங்கள் குலம் அழிந்துவிடுமோ என்று கவலைப்பட்ட தேவர்கள் தங்கள் குறையை பிரம்ம தேவரிடம் சென்று முறையிட்டனர், அவரும் தேவர்களை திருமாலிடம் அழைத்துச் சென்றார். பாற்கடலைக் கடைந்து அதிலிருந்து வரும் அமிர்தத்தை உண்டால் மரணமில்லா பெருவாழ்வு எய்தலாம் என்று பெருமாள் கூற பாற்கடலை கடைந்து தேவர்களும் அசுரர்களும் எம் பெருமாளின் துணையோடு அமிர்தம் எடுத்தனர்


1071
இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த* எழில் விழவில் பழ நடை செய்*
மந்திர விதியில் பூசனை பெறாது* மழை பொழிந்திடத் தளர்ந்து* ஆயர்
எந்தம்மோடு இன ஆநிரை தளராமல்* எம்பெருமான் அருள் என்ன*
அந்தம் இல் வரையால் மழை தடுத்தானைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே*2.3.4

இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த - இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த
எழில் விழவில் பழ நடை செய் - அழகான விழாவில் பழைய நடை முறைப்படி செய்ய
வேண்டிய
மந்திர விதியில் பூசனை பெறாது - மந்திரங்கள் சொல்லி விதிப்படி பூஜை பெறாது
மழை பொழிந்திடத் தளர்ந்து - மழை பொழிந்திட துன்பப்பட்டு
ஆயர் எந்தம்மோடு இன ஆநிரை தளராமல் - ஆயர் எங்களோடு கூட்டமாக உள்ள பசுக்களும் துன்பபடாமல்
எம்பெருமான் அருள் என்ன - எம்பெருமானே அருள் என்று வேண்ட
அந்தம் இல் வரையால் மழை தடுத்தானைத் - அளவில்லாத (மிக பெரிய) மலையால் மழை தடுத்தவனைத்
திருவல்லிக்கேணிக் கண்டேனே - திருவல்லிக்கேணியில் கண்டேனே.

விளக்கம்:-
இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த அழகான விழாவில் பழைய நடை (முறைப்படி) செய்யும் மந்திரங்கள் (ஓதி) விதி (முறைப்படி செய்ய வேண்டிய பூஜைகளை நம்
செல்ல கண்ணன் இந்திரனுக்கு செய்யாமல் கோவர்த்தன மலைக்கு செய்யுங்கள் என்று கூற இதனால் இந்திரன்) பூஜை பெறாமல் (கண்ணன் மற்றும் ஆயர்மக்கள் மேல் மிகுந்த கோபம் கொண்டு ஆலங்கட்டி) மழையை பொழிந்திட (இதனால் மிகவும்) துன்பப்பட்ட ஆயர் (மக்கள்) எங்களோடு கூட்டம் கூட்டமாக (இருக்கும்) பசுக்களையும் துன்பபடாமல் எம்பெருமானே அருள் (என்று) சொல்ல அளவில்லாத மிக பெரிய (கோவர்த்தன மலையை)ஒரு குடை போல Easyaa தூக்கி) மலையால் மழை தடுத்தானை திருவல்லிகேணியில் கண்டேனே. (Hey Hey . Jolly)

பாசுர விளக்கத்திற்கு ஒரு கதை பார்ப்போமா!
ஆயர்பாடி, இந்தியாவில் உத்திர பிரதேச மாவட்டத்தில் டில்லி ஆக்ரா ரயில் பாதையில் மதுராவிலிருந்து 12 Km தொலைவில் உள்ளது. பரம்பொருள் இறைவனான ஸ்ரீமன் நாராயணன் கிருஷ்ணா அவதாரத்தில் வாழ்ந்த இடம் ஆயர்பாடி . ஒரு சமயம் ஆயர்பாடி மக்கள் பழைய நடைமுறைப்படி பலவகையான படையல்களிட்டு இந்திரனைச் சிறப்பு செய்யும் இந்திர விழாவினை, செய்ய வரும்போது, தேவர்களின் தலைவன் என்ற கர்வம் இந்திரனுக்கு இருந்த படியால் நம் அன்பு கண்ணன் வீணாக இந்திரனுக்கு பூஜை செய்யாதீர்கள். அதற்க்கு பதில் பசுக்கள் பசிதீர புல் மேயும் கோவர்த்தன மலைக்குச் செய்யுமாறு ஆயர்களிடம் கூறினான். ஆயர்களும் அவ்வண்ணமே செய்ய,கோபமுற்ற இந்திரன், ஆயர்ப்பாடியில் பயங்கர ஆலங்கட்டி மழையை பொழிய செய்தான். மழையிலிருந்து ஆயர்களையும், பசு க்களையும் காக்க, சிறுவனான கண்ணன், கோவர்த்தன மலையையே குடையாய்ப் பிடித்து, அதனடியில் அனைவரையும் நிற்க வைத்து, ஆலங்கட்டி மழையிலிருந்து அனைவரையும் காத்தான். இறுதியாக, இந்திரன் தன் தோல்வியை ஒப்புக் கொண்டு, இறைவனிடம் மன்னிப்புக் கேட்டான்.

1072
இன் துணைப் பதுமத்து அலர்மகள் தனக்கும் இன்பன்* நல் புவி தனக்கு இறைவன்*
தன் துணை ஆயர் பாவை நப்பின்னை தனக்கு இறை* மற்றையோர்க்கு எல்லாம்
வன் துணை* பஞ்ச பாண்டவர்க்காகி* வாய் உரை தூது சென்று இயங்கும்
என் துணை* எந்தை தந்தை தம்மானைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே* 2.3.5

இன் துணைப் - இனிய துணையான
பதுமத்து அலர்மகள் தனக்கும் இன்பன் - தாமரை மலர் மகள் அவளுக்கும் இன்பன்
நல் புவி தனக்கு இறைவன் - நல்ல பூமி அவளுக்கும் இறைவன்
தன் துணை - தனக்கு துணையான
ஆயர் பாவை நப்பின்னை தனக்கு இறை - ஆயர் பெண் நப்பின்னை அவளுக்கும் இறை
மற்றையோர்க்கு எல்லாம் வன் துணை - மற்றவர்களுக்கு எல்லாம் நீங்காத துணை
பஞ்ச பாண்டவர்க்காகி - பஞ்ச பாண்டவர்களுக்கு ஆகி
வாய் உரை தூது சென்று இயங்கும் - வாய் வார்த்தை தூது சென்று செயல்படும்
என் துணை - என் துணை
எந்தை தந்தை தம்மானைத் - என் அப்பாவுக்கு அப்பா வழிபட்ட இறைவனை
திருவல்லிக்கேணிக் கண்டேனே - திருவல்லிக்கேணியில் கண்டேனே

விளக்கம்:-
(தனக்கு) இனிய துணையான தாமரை மலரில் (பிறந்த) மகள் மகாலட்சுமிக்கும் இனிமையானவன், நல்ல (பொண்ணு பூமா தேவியான நம்) பூமிக்கும் இறைவன், தன்னையே துணையாக (உடைய) ஆயர் (குல பெண்ணும் கண்ணனின் மாமன் மகளும் ஆன) நப்பின்னைக்கும் இறைவன், மற்றுமுள்ள எல்லாருக்கும் என்றுமே நீங்காத துணையாய் (இருப்பவன் முன்பு கிருஷ்ணா அவதாரத்திலே தர்மன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் போன்ற ) பஞ்சபாண்டவர்களுக்காக வாய் வார்த்தை (சொல்ல) தூது சென்று செயல்பட்டவனும், எனக்கு துணையானவனும், என் அப்பாவுக்கு அப்பா (எங்கள் குலமே வழிபட்ட) இறைவனைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே. (Hey Hey Jolly)




1073
அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசர்க்கு இளையவன்* அணி இழையைச் சென்று*
எந்தமக்கு உரிமை செய் எனத் தரியாது* எம் பெருமான் அருள் என்ன*
சந்தம் அல் குழலாள் அலக்கண் நூற்றவர் தம்* பெண்டிரும் எய்தி நூல் இழப்ப*
இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே* 2.3.6

அந்தகன் சிறுவன் - குருடன் (மகன்) துரியோதனன்
அரசர் தம அரசர்க்கு - ராஜாதி ராஜாவுக்கு
இளையவன் - தம்பி (துச்சாசனன்)
அணி இழையை - அழகிய ஆபரணம் அணிந்தவளை
எந்தமக்கு உரிமை செய் எனத் - எங்களுக்கு அடிமை செய் என கூற
தரியாது - (அதனை) பொறுக்க முடியாமல்
எம்பெருமான் அருள் என்ன - எம்பெருமானே அருள் என்று வேண்ட,
சந்தம் அல் குழலாள் - அழகிய கறுத்த கூந்தலை உடையவள்
அலக்கண் - மனவருத்தத்தை
நூற்றவர் தம் - (கௌரவர்களான) நூறு பேரின்
பெண்டிரும் எய்தி நூல் இழப்ப - மனைவிகளும் அடைந்து தாலி இழக்க
இந்திரன் சிறுவன் - இந்திரன் மகன் (அர்ச்சுனன்)
தேர் முன் நின்றானை - தேர் முன் நின்றவனை
திருவல்லிக்கேணிக் கண்டேனே - திருவல்லிக்கேணியில் கண்டேனே

விளக்கம்:-
குருடன் (திருதராஷ்டினின்) மகன் ராஜாதி ராஜாவான துரியோதனன் தம்பி (துச்சாசனன்) அழகான ஆபரணம் (அணிந்த பெண் திரௌபதியிடம்) சென்று எங்களுக்கு அடிமை செய் என (கூற திரௌபதி இதை) பொறுக்க முடியாமல் எம்பெருமானே அருள் (என்று) வேண்ட, அழகிய கறுத்த கூந்தலையுடைய (திரௌபதியின்) மன வருத்தம் (போக்கிய எம்பெருமான், பின்பு கௌரவர்ளுக்கும் பாண்டவர்களுக்கும் நடந்த போரில் கௌரவர்களான) நூறு பேரின் மனைவிகளும் (துன்பம்) அடைந்து தாலியை இழக்குமாறு (கௌரவர்களை அழிக்க எம்பெருமான்) இந்திரன் மகன் (அர்ச்சுனன் தேர் முன் (தேர் ஓட்டுபவனாக தில்லா) நின்றவனை திருவல்லிக்கேணியில் கண்டேனே. (Hey Hey Jolly)


பாசுர விளக்கத்திற்கு ஒரு கதை பார்ப்போமா!

கௌரவர்களின் தந்தையான குருடன் திருதராஷ்டினின் மகன் துரியோதனன். அவன் தம்பி துச்சாதனன் திருதராஷ்டினின் தம்பி பாண்டு மன்னனின் மனைவி குந்தியின் மகனான தருமர் அஸ்தினாபுரத்தில் துரியோதனிடம் சூதாட்டம் ஆடிய போது அனைத்தையும் இழந்தார். தன் மனைவி திரௌபதியையும் பணயம் வைத்து தோற்றார். திரௌபதி அவர்களுக்கு அடிமை ஆனதால் துச்சாதனன் திரௌபதியை அழைத்து நடு சபையில் புடவையை உரிக்க திரௌபதி என்ன செய்வது என்று தெரியாமல் கோவிந்தா! எனக்கு அருள் புரிவாய் என்று கைகளை தலை மேல் கூப்பி வேண்ட உடனே கண்ணன் திரௌபதியின் வருத்தம் போக்கி துச்சாதனன் புடவையை உரிக்க உரிக்க மீண்டும் மீண்டும் கண்ணன் அருளால் புடவை வளர்ந்து கொண்டே இருக்க துச்சாதனன் முடியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்தான். திரௌபதியின் துன்பத்தை நீக்கி மானம் காத்தான் நம் ஆனந்த கண்ணன்.

இந்திரன் சிறுவன் - இந்திரன் மகன் அர்ச்சுனன் (இதை பற்றிய ஒரு சிறு கதை)

முன்பு பாண்டு மன்னனுக்கு மனைவி குந்தியிடம் சேரகூடாது என்ற சாபம் இருக்கிறபடியால் துர்வாச முனிவர் உபதேசித்த மந்திர மகிமையால் எமனால் தருமரையும், வாயு தேவரால் பீமனையும், தேவர்களின் தலைவன் இந்திரனால் அர்ச்சுனனையும் பெற்றாள். என்பது புராண வரலாறு

1074
பரதனும் தம்பி சத்துருக்கனனும்* இலக்குமனோடு மைதிலியும்*
இரவும் நன் பகலும் துதி செய்ய நின்ற* இராவண அந்தகனை எம்மானை*
குரவமே கமழும் குளிர் பொழில் ஊடு* குயிலோடு மயில்கள் நின்றால*
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்து அறியாத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே*2.3.7


பரதனும் தம்பி சத்துருக்கனனும் - *பரதனும் (அவன்) தம்பி சத்துருக்கனும்
இலக்குமனோடு மைதிலியும்*- லட்சுமனோடு ஸ்ரீ ராமர் மனைவி சீதையும்
இரவும் நன் பகலும் துதி செய்ய நின்ற - இரவும் பகலும் இடைவிடாது போற்றி புகழ்ந்து வழிபட நின்ற
இராவண அந்தகனை எம்மானை - இராவணனுக்கு எமனான எம் பெருமானை
குரவமே கமழும் குளிர் பொழில் ஊடு - குரவ மலர்கள் நறுமணம் வீசும் குளிர்ந்த சோலைகளிலே
குயிலோடு மயில்கள் நின்று ஆல - - குயில்களோடு மயில்கள் நின்று ஆரவாரம் செய்ய
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்து அறியாத் - சூரிய ஒலி கதிர்கள் நுழைய முடியாத
திருவல்லிக்கேணிக் கண்டேனே - திருவல்லிக்கேணியில் கண்டேனே

விளக்கம்:-
பரதனும் அவன் தம்பி சத்துருக்கனனும், இலட்சுமனோடு ஸ்ரீ ராமரின் மனைவி சீதையும் இரவும் பகலும் இடைவிடாமல் போற்றி புகழ்ந்து வழிபட நின்ற இராவணனுக்கு எமனான எம் பெருமானை, குரவ மலர்கள் கம கமன்னு நல்ல வாசம் வீசும் (குளிர்ந்த மரம் செடிகள் சூழ்ந்த) சோலைகளுக்கு நடுவில் குயில்களோடு சேர்ந்து மயில்கள் நின்று ஆரவாரம் செய்ய, (சுற்றிலும் சோலைகள் சூழ்ந்து இருப்பதால்) சூரிய ஒலி கதிர்கள் நுழைய முடியாத(அழகான) திருவல்லிக்கேணியில் கண்டேனே. . (Hey Hey Jolly)

பாசுர விளக்கத்திற்கு ஒரு கதை
தசரத‌னி‌ன் முதல் மனைவி கோசலை ஆவாள். அவள் வயிற்றிலிருந்து திருமால் இராமராகப் பிறந்தார். இரண்டாம் மனைவி கைகேயி வயிற்றில் பரதன் பிறந்தான். மூன்றாம் மனைவி சுமத்திரை வயிற்றில் இலக்குவன், சத்துருக்கன் என்ற இருவரும் பிறந்தனர்.

1075
பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன்* வாயில் ஓர் ஆயிரம் நாமம்*
ஒள்ளிய ஆகிப் போத ஆங்கு அதனுக்கு* ஒன்றும் ஓர் பொறுப்பு இலன் ஆகி*
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண்ப் புடைப்ப* பிறை எயிற்று அனல் விழி பேழ் வாய்*
தெள்ளிய சிங்கம் ஆகிய தேவைத்* திருவல்லிக்கேணி கண்டேன்*.2.3.8

பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன் - பள்ளியில் கல்வி கற்று வந்த தன் மகன்
வாயில் ஓர் ஆயிரம் நாமம் - வாயில் ஓர் ஆயிரம் பெருமாள் பெயர்கள்
ஒள்ளிய ஆகிப் போத ஆங்கு அதனுக்கு - ஒளியுடன் ஆகி ஞானத்தால் (பிரகலாதன் கூற) அவ்விடத்தில் அதை
ஒன்றும் ஓர் பொறுப்பு இலன் ஆகி - சிறிதளவும் பொறுக்க இயலாதவன் ஆகி
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண்ப் படைப்ப - மகனை சீறி மிகவும் கோபப்பட்டு தூணை அடிக்க
பிறை எயிற்று அனல் விழி பேழ் வாய் - கூரான வளைந்த பற்களும், நெருப்பு போன்ற
கண்களும், பெரிய வாயும் (உடைய)
தெள்ளிய சிங்கம் ஆகிய தேவைத் - தெளிந்த தூய சிங்க தேவனை
திருவல்லிக்கேணி கண்டேன். - திருவல்லிக்கேணியில் கண்டேனே.

விளக்கம்:-

ஸ்கூலுக்கு சென்று கற்றுக்கொண்டு வந்த தன் மகன் (பிரகலாதன்) வாயில் ஆயிரம் பெருமாள் பெயர்கள் ஒளியுடன் அழகாக ஞானத்தால் (கூறுவதை பார்த்து) அந்த நேரம் சிறிதும் பொறுக்க இயலாதவன் ஆகி தன் மகனை சீறி வெகுண்டு (நாராயணன் எங்கே இருக்கிறான்டா என்று கேட்க, எங்கும் இருப்பான் என்று பிரகலாதன் கூற, எங்கே இந்த தூணில் காட்டுடா பார்ப்போம் என்று) தூணை அடிக்க, வளைந்த கூரான பற்களும், நெருப்பு போன்ற கண்களும், பெரிய வாயும் (உடைய) தெளிந்த தூய்மையான நரசிங்கம் ஆகிய (என் தேவாதி) தேவனை, திருவல்லிக்கேணியில் கண்டேனே. . (Hey Hey Jolly)


பாசுர விளக்கத்திற்கு ஒரு கதை
இரணியன் என்னும் அரக்கன், தன்னையே எல்லோரும் கடவுள் என தொழ வேண்டும் என்று எண்ணினான். இரணியனின் மகன் பிரகலாதன், அதை எதிர்த்தான். பிரகலாதன் ஸ்ரீமன் நாராயணன் ஒருவரையே கடவுள் என்று போற்றி, பூஜித்து வந்தான். இதையறிந்த இரணியன், மகனென்றும் பாராமல் பிரகலாதனை பல வகையில் துன்புறுத்தி, தன்னையே கடவுள் என பூஜிக்கும்படி வற்புறுத்தினான்.

ஒரு சமயத்தில் பள்ளி பாடத்தை முடித்து வந்த மகன் ஸ்ரீ ஹரி நாமம் சொல்வதை பார்த்த பிரகலாதன் மிகுந்த கோபம் கொண்டு எங்கேடா இருக்கிறான் ஹரி என்று கேட்க, அவன் எங்கும் இருப்பான் என்று பிரகலாதன் கூற, எங்கே இந்த தூணில் இருப்பான என்று எதேச்சையாக இரணியன் கேட்டு தூணை தட்ட, அங்கே அப்பொழுதே பரம்பொருளான ஸ்ரீமன் நாரயணன் சிம்ம முகமும் மானிட உருவமும் கலந்த நரசிம்ம உருவத்தில் தூணை பிளந்து வந்து இரணியனை அழித்தார். பிரகலாதனை காத்தார். பிரகலாதன் பக்தியை போன்றே நாமும் ஸ்ரீமன் நாராயணின் மேல் பக்தியோடு இருக்க ஸ்ரீமன் நாராயணனை வேண்டுவோம். அவர் நமக்கு நிச்சயம் தருவார்.



1076
மீன் அமர் பொய்கை நாள் மலர் கொய்வான்* வேட்கையினோடு சென்று இழிந்த
கான் அமர் வேழம் கை எடுத்து அலறக்* கரா அதன் காலினைக் கதுவ*
ஆனையின் துயரம் தீரப் புள் ஊர்ந்து*சென்று நின்று ஆழி தொட்டானை*
தேன் அமர் சோலை மாட மாமயிலைத்*திருவல்லிக்கேணிக் கண்டேனே*2.3.9


மீன் அமர் பொய்கை - மீன்கள் இருக்கும் குளத்தில்
நாள் மலர் கொய்வான் வேட்கையினோடு - நாள்தோறும் மலர் பரிப்பவனான (கஜேந்திர யானை ஒரு நாள்) ஆசையோடு
சென்று இழிந்த - போய் (குளத்தில்) இறங்கிய
கான் அமர் வேழம் கை எடுத்து அலறக் - காட்டில் இருக்கும் கஜேந்திர யானை தும்பிக்கை எடுத்து அலறும்படி
கரா அதன் காலினைக் கதுவ - முதலை அதன் காலினை கவ்வ
ஆனையின் துயரம் தீரப் புள் ஊர்ந்து - யானையின் துயரம் தீர்க்க கருட வாகனத்தில்
சென்று நின்று ஆழி தொட்டானை - சென்று நின்று (முதலை அழியும் படி) சக்கரத்தை செலுத்தியவனை
தேன் அமர் சோலை மாட மாமயிலைத் - தேன் இருக்கும் சோலைகளை உடைய மாடங்கள் சூழ்ந்த திருமயிலைத்
திருவல்லிக்கேணிக் கண்டேனே - திருவல்லிக்கேணியில் கண்டேனே.

விளக்கம்:-
மீன்கள் இருக்கும் குளத்தில் நாள்தோறும் புதிய மலர்களை பறிப்பவன் (கஜேந்திர யானை) , ஆசையோடு சென்று (பூ பறிக்க ஒரு நாள் குளத்தில்) இறங்க, காட்டில் வாழும் (அந்த கஜேந்திர) யானை தும்பிக்கை தூக்கி அலறும்படி, முதலை அதன் காலினை கவ்வ,
யானையின் துயரம் தீர்க்க கருட வாகனத்தில் சென்று (அங்கே) நின்று (முதலை அழியும் படி) சக்கரத்தை செலுத்தியவனை, தேன் (நிறைந்திருக்கும்) சோலைகளும், (விளக்கேற்றும் அழகான) மாடங்களும் (உள்ள) திரு மயிலை (அருகில் உள்ள) திருவல்லிக்கேணியில் கண்டேனே. . (Hey Hey Jolly)

பாசுர விளக்கத்திற்கு ஒரு கதை
பெருமாள் மீது பக்தியுடைய யானை ஒன்று தினமும் குளத்தில் இருந்து தாமரை மலர்களை பறித்து பெருமாளுக்கு சமர்பித்து கொண்டு இருந்தது. ஒரு சமயம் குளத்தில் இறங்கி தாமரையை பறித்த போது முதலை யானையின் காலை பிடிச்சுக்கிச்சி. உடனே யானை தன் உடலை பற்றி சிறிதும் கவலை படாமல் எப்படியாவது தாமரை மலரை பெருமாளுக்கு சமர்பிக்க வேண்டுமே என்ற ஏக்கத்தில் “ஆதி மூலமே” என்று நினைத்து பிளிறிய போது பெருமாள் கருட வாகனத்தில் விரைந்து வந்து முதலையை தன் சக்கரத்தால் அழித்து யானையை காப்பாற்றினார். யானைக்கு மறு பிறவி இல்லாத மோட்சத்தை பெருமாள் அருளினார். கஜேந்திர மோட்சம்

1077
மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும்* மாட மாளிகையும் மண்டபமும்*
தென்னன் தொண்டையர்க் கோன் செய்த நல் மயிலைத்*திருவல்லிக்கேணி நின்றானை* கன்னி நல் மாட மங்கையர் தலைவன்* காமரு சீர்க் கலிகன்றி*
சொன்ன சொல் மாலை பத்து உடன் வல்லார்* சுகம் இனிது ஆள்வர் வான் உலகே* 2.3.10


மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும் - சிறப்புவாய்ந்த குளிர்ந்த மரம் செடிகளும், நீர்நிலைகளும், வெளிப்புற சுற்று சுவர்களும்
மாட மாளிகையும் மண்டபமும் - மாட மாளிகையும், மண்டபமும் (இருக்கும்படி)
தென்னன் தொண்டையர்க் கோன் செய்த - பாண்டிய மன்னன் தொண்டைமான் சக்ரவர்த்தி செய்த
நல் மயிலைத் திருவல்லிக்கேணி நின்றானை - அழகான மயிலாப்பூர் (அருகில் உள்ள) திருவல்லிக்கேணியில் நின்றவனை (வேங்கட கிருஷ்ணனான பார்த்தசாரதியை)
கன்னி நல் மாட மங்கையர் தலைவன் - புதிய அழகான மாடங்கள் உடைய திருமங்கை நாட்டு தலைவன்
காமரு சீர்க் கலிகன்றி - திருமங்கை அழகு பெற்ற செய்யுளால்
சொன்ன சொல் மாலை பத்து உடன் வல்லார் - சொன்ன சொல் மாலை பத்துடன் (சொல்ல) வல்லவர்கள்
சுகம் இனிது ஆள்வர் வான் உலகே - இனிய சுகத்துடன் வான் உலகையே ஆள்வார்கள்.

விளக்கம்:-
சிறப்பு வாய்ந்த குளிர்ந்த (அழகான) மரம் செடிகளும், நீர் நிலைகளும், வெளிப்புற சுற்று சுவர்களும், மாட மாளிகையும், மண்டபமும், பாண்டிய மன்னன் தொண்டைமான் சக்ரவர்த்தி செய்த, அழகான மயிலாப்பூரின் (அருகில் உள்ள) திருவல்லிகேணியில் நின்றவனை (அழகான வேங்கட கிருஷ்ணனான பார்த்தசாரதியை) , புதிய் அழகான மாடங்கள் உடைய திருமங்கை நாட்டு மன்னன் திருமங்கையன் அழகு பெற்ற செய்யுளால் சொன்ன சொல்லால் (தொடுட்ட) மாலை பட்டுடன் (என்னை போலவே பெருமாள் மீது பாசத்துடன் சொல்ல) வல்லவர்கள், இனிய சுகத்துடன் வான் உலகையே ஆள்வார்கள்

திருவல்லிக்கேணி என் அன்பு ஸ்ரீ வேங்கட கிருஷ்ணா கோவில் வரலாறு

இந்த கோவிலில் வீற்றிருக்கும் பார்த்தசாரதி பெருமாள் ‌திரு‌முக‌த்‌தி‌ல் தழு‌ம்புக‌ள் இரு‌க்கு‌ம், மகாபாரத‌ப் போ‌ரி‌ல் அ‌ர்ஜூனனு‌க்கு தேரோ‌ட்டியாக வ‌ந்து, போ‌ரி‌ல் ஏற்ப‌ட்ட ‌விழு‌ப்பு‌ண்க‌‌ளி‌ன் தழு‌ம்புக‌ள்தான் அவை எ‌ன்று ஐதீகம். மேலு‌ம் ‌மீசையுட‌ன் உள்ள ‌கிருஷ‌்ண அவதாரமாகவும் இங்கு இருக்கிறார். மகாபாரத‌த்‌தி‌ல் தேரோ‌ட்டியாக (சார‌தி) வ‌ந்து அ‌ர்‌ஜூனனு‌க்கு (பா‌ர்‌த்தா) அ‌றிவுரை சொ‌ன்ன ‌கிரு‌ஷ‌்ண‌ரே (அவதாரம்) பா‌ர்‌த்தசார‌தி என்று அழைக்கப்பட்டார்.

மூலவரின் பெயர் வேங்கட கிருஷ்ணன். வலப் புறத்தில் ருக்மணி பிராட்டியாரும், வரதமுத்திரையுடன் கையில் கலப்பை ஏந்திய அண்ணன் பலராமனும், இடப்புறத்தில் தம்பி சாத்யகி, மகன் ப்ரத்யும்னன், பேரன் அநிருத்தன் ஆகியோரையும் கொண்டு மூலவர் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுகத்துடன் வீற்றிருக்கிறார். இத்திருத்தலத்தில் பா‌ர்‌த்தசார‌தி‌க்கு‌ம், நர‌சி‌ம்மரு‌க்கு‌ம் த‌னி‌த்‌த‌னி கொடிமர‌ங்க‌ள் அமை‌க்க‌ப்ப‌‌ட்டிருக்கின்றன.
பா‌ர்‌த்தசார‌தி ச‌‌ன்ன‌தி‌க்கு வலது புற‌த்‌தி‌ல் வேதவ‌ல்‌லி‌த் தாயா‌‌ரி‌ன் ச‌ந்ந‌தி அமை‌ந்து‌ள்ளது.

வேதவ‌ல்‌லி‌த் தாயா‌ர் ச‌ந்‌நி‌தி‌க்கு ‌பி‌ன்புற‌த்‌தி‌ல் ‌கிழ‌க்கு நோ‌க்‌கியபடி கஜே‌ந்‌திர வரதராஜ சுவா‌மிக‌ளி‌ன் ச‌ந்‌நி‌தி அமை‌ந்து‌ள்ளது. கஜே‌ந்‌திரா எ‌ன்ற யானை ‌நீ‌ர்‌நிலை ஒ‌ன்‌றி‌ல் த‌ண்‌ணீ‌ர் குடி‌க்க‌ச் செ‌ன்றபோது அ‌ங்‌கிரு‌ந்த முதலை‌யி‌ன் வா‌யி‌ல் ச‌ி‌க்‌கி‌க் கொ‌ண்டது, அப்போது அந்த யானை தனது உ‌யிரை‌க் கா‌ப்பா‌ற்றுமாறு பெருமாளை நினைத்து வே‌ண்டியது. அ‌ப்போது உடனடியாக கருட‌னி‌ல் வ‌ந்த பெருமா‌ள் முத‌லை‌யிட‌ம் சிக்கியிருந்த கஜே‌ந்‌திரனை ‌‌மீ‌ட்டா‌ர், யானை‌க்கு அரு‌ள் பா‌லி‌த்த ‌நிலை‌யி‌ல் இ‌ந்த ச‌ந்‌‌நி‌தி‌யி‌ல் கஜே‌ந்‌திர வரதராஜ சுவா‌மிகளாக வீற்றிருக்கிறார்.

பா‌‌ர்‌த்தசார‌தி ச‌ந்‌‌‌நி‌தி‌யி‌ன் இடது புர‌த்‌தி‌ல் ஆ‌ண்டா‌‌ள் ச‌ந்‌‌நி‌தி அமை‌ந்து‌ள்ளது. இவர் பூதே‌வி எ‌ன்று‌ம் அழை‌க்க‌ப்படு‌கிறா‌ர். இந்த கோவில் தீர்த்தத்தின் பெயர் கைரவினி, இ‌தி‌ல் இந்திர, சோம, மீன, அக்னி, விஷ்ணு ஆ‌‌கிய தீர்த்தங்கள் அடங்கியுள்ளன. இத்திருக்குளத்தில் அல்லி பூக்கள் அதிகமாக காணப்பட்டதால் அல்லிக்கேணி என்ற பெயரும் ஏற்பட்டது.


திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள அருள்மிகு பார்த்தசாரதி பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இ‌ந்த கோ‌விலை பிருந்தாரண்ய ஸ்தலம் பஞ்ச வீரத்தலம் என்றும் அழைக்கப்படுகிறது. வியாசரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆத்ரேயரால் வணங்கப்பட்ட திருத்தலமாகு‌ம். திருவல்லிக்கேணி இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இருக்கும் சென்னை மெரீனா கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளது.

இ‌‌த்‌திரு‌த்தல‌த்‌தி‌ல் பிருகு முனிவர், மார்க்கண்டேயர், மதுமான் மகரிஷி, சப்தரோம அத்ரி மகரிஷி, ஜாபாலி மகரிஷி, தொண்டைமான் சுமதி மன்னன் என பலருக்கு இறைவன் காட்சியளித்திருக்கிறார். திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமாகு‌ம்





திருவல்லிக்கேணி என் அன்பு ஸ்ரீ வேங்கட கிருஷ்ணா மலர் பாதங்களுக்கு சமர்ப்பணம்:

Thursday, December 2, 2010

வெண்ணை (திருடி) உண்டவன் இவன் என்று பெண்களால் (கேலி) பேச நின்ற எம்பெருமான் திருவள்ளூரில் படுத்து கொண்டிருக்கிறானே.

மூலவர்: எவ்வுள்கிடந்தான் (ஸ்ரீ வீரராகவ பெருமாள்)

பெரிய திருமொழி

1058
காசை ஆடை மூடி ஓடிக்* காதல் செய்தான் அவன் ஊர்*
நாசம் ஆக நம்ப வல்ல* நம்பி நம் பெருமான்*
வேயின் அன்ன தோள் மடவார்* வெண்ணெய் உண்டான் இவன் என்று*
ஏச நின்ற எம் பெருமான்* எவ்வுள் கிடந்தானே.2.2.1


விளக்கம்:-
(எம் செல்லமான அண்ணன் ஸ்ரீராமரின் மனைவியான சீதையை இராவணன் கடத்தி சென்று) காவி ஆடையை மூடி (கொண்டு மறைந்து ஒளிந்து) ஓடி காதல் செய்தான். அவனோட ஊரான (இலங்கையை) நாசம் ஆகும்படி (அழித்த என்றுமே நாம்) நம்ப தகுந்த இறைவனான நம்ம பெருமாள் (முன்பு கண்ணனாக அவதாரம் எடுத்து சிறிய வயதில் லூட்டி அடிச்சிக்கிட்டு அங்கிருப்பவர்களின் வீடுகளில் புகுந்து வெண்ணையை திருடி உண்டான். இதை பார்த்த) மூங்கில் போல (வழ வழன்னு அழகா இருக்கிற) அன்ன பறவை (போல மென்மையான தோள்களையுடைய இளமையான பொண்ணுங்க! (தோ இவன்தான்) வெண்ணை (திருடி) உண்டான் என்று (கேலி) பேச நின்ற எம்பெருமான் (திருவள்ளூர் என்ற திரு) எவ்வுளில் படுத்து கொண்டிருக்கிறானே.



1059
தையலாள் மேல் காதல் செய்த* தானவன் வாள் அரக்கன்*
பொய் இலாத பொன் முடிகள்* ஒன்பதோடு ஒன்றும்* அன்று
செய்த வெம்போர் தன்னில்* அங்கு ஓர் செஞ்சரத்தால் உருள*
எய்த எந்தை எம்பெருமான்* எவ்வுள் கிடந்தானே*2.2.2


விளக்கம்:-
(அழகான) பெண்ணான (சீதையின்) மேல் காதல் செய்த அசுரனும், (கையிலே கூரான) கத்தியை (வைத்திருக்கும்) அரக்கனுமான (இராவணனின்) உண்மையான (சுத்த) பொன்னால் (செய்யப்பட்ட கிரீடத்தை வைத்திருக்கும் அவனது) பத்து தலைகளையும் , முன்பு செய்தகொடிய போரில் (எங்க அண்ணன் ) இராமர் (சென்று) அங்கு ஒரே ஒரு
(அனல் பறக்கும்) சிவந்த அம்பினால் (அவனது பத்து தலைகளும் அறுத்து கீழே தரையில் கோலி உருட்டுவது போல) உருள விட்ட என் தந்தை எம்பெருமாள் (திருவள்ளூர் என்ற திரு) எவ்வுளில் படுத்து கொண்டிருக்கிறானே.

1060
முன் ஓர் தூது* வானரத்தின் வாயில் மொழிந்து* அரக்கன்
மன் ஊர் தன்னை* வாளியினால் மாள முனிந்து* அவனே
பின் ஓர் தூது* ஆகி மன்னருக்கு ஆகிப் பெரு நிலத்தார்*
இன்னார் தூதன் என நின்றான்* எவ்வுள் கிடந்தானே*2.2.3

விளக்கம்:-
முன்பு ஒரு செய்தியை ஆஞ்சனேயரிடம் கூறி (இராவணனிடம் தெரிவித்து விட்டு வருமாறு தூது அனுப்பியவனும்) , அரக்கன் (இராவணனின்) சிறந்த ஊரான (இலங்கையை நச் நச்ன்னு கூரான) அம்பினால் கோபப்பட்டு அழித்த (எங்கள் அன்பு அண்ணன் இராமன்) அவனே பின்பு ஓர் தூதனாகி, (அதாவது தருமன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் முதலான பஞ்ச பாண்டவ) மன்னருக்கு தூதனாகி, பெரும் நிலத்தை உடைய (செல்வந்தன் கொடுமைகாரன் அந்த) துரியோதனிடம் தான் பாண்டவர்களின் தூதன் என (கூறி) நின்றான் (என் அண்ணன் கண்ணன் திருவள்ளூர் என்ற திரு) எவ்வுளில் படுத்து கொண்டிருக்கிறானே.

1061
பந்து அணைந்த மெல் விரலாள்* பாவை தன் காரணத்தால்*
வெந்திறல் ஏறு ஏழும் வென்ற* வேந்தன் விரி புகழ் சேர்*
நந்தன் மைந்தன் ஆக ஆகும்* நம்பி நம் பெருமான்*
எந்தை தந்தை தம் பெருமான்* எவ்வுள் கிடந்தானே*2.2.4

பாசுர விளக்கத்திற்கு முன் கண்ணனின் மாமன் மகள்
அழகான பொண்ணு நப்பின்னை பற்றி தெரிந்து கொள்ளலாமா
!:__

கண்ணனின் மாமன் மகள் நப்பின்னை. மாமன் கும்பன் ஒரு நிபந்தனை வைத்தான். அவனிடம் ஏழு முரட்டுக் காளைகள் இருந்தன. இவற்றை அடக்குபவருக்கே தன் மகள் மாலை சூட்டுவாள் என்று சொன்னான். இதை அறிந்த கண்ணன் நப்பின்னையை திருமணம் செய்ய விரும்பி ஏழு முரட்டு எருதுகளை அடக்கி நப்பின்னையைக் கைப்பிடித்தான். நப்பின்னை - கடல்தாயின் அம்சம் - நீளா தேவி

இன்னொரு கதையும் பார்க்கலாமே பாசுர விளக்கத்திற்கு முன், கண்ணன் நந்த கோபரின் வளர்ப்பு மகன் ஆனது எப்படி?
மதுரா நகரத்தின் அரசனான கம்சன் தன் தங்கையான தேவகிக்கு வயது வந்தவுடன் யதுகுலத்தவரான வசுதேவருக்கு அவளை மணமுடித்தான். திருமணம் முடிந்து தானே மணமக்கள் இருவரையும் தேரில் வைத்து மதுரா நகரின் சாலைகளில் ஊர்வலமாக அழைத்துச் சென்றான். அப்போது திடீரென கம்சனின் செவிகளில், எந்தத் தங்கையை அரசன் ஊர்வலமாகக் கொண்டு செல்கின்றானோ, அதே தங்கையின் வயிற்றில் பிறக்கக்கூடிய எட்டாவது குழந்தை அரக்க சுபாவம் கொண்ட அந்த அரசனை கொல்லப் போகின்றது எனும் வார்த்தைகள் ஒலித்தன. அதைக் கேட்ட அரசன், தங்கை என்றும் பாராமல் உடனே தேவகியைக் கொல்ல முற்பட்டான். வசுதேவர், பிறக்கும் குழந்தைகளை உனக்கே தந்துவிடுகிறேன் ஆனால் என் மனைவியை ஒன்றும் செய்துவிடாதே, எனக் கம்சனிடம், கெஞ்சினார். அதற்கு மனம் இளகிய கம்சன், அவர்கள் இருவரையும் கொல்லவில்லை ஆனால் அதற்கு பதிலாக அவர்களைச் சிறையில் அடைத்து வைத்தான். குழந்தைகள் பிறக்கப் பிறக்க அவற்றை ஒவ்வொன்றாக கொல்லவும் செய்தான். பல ஆண்டுகளாக இது தொடர தேவகி எட்டாவதாக ஒரு ஆண் குழந்தையை பெற்றாள். இந்த குழந்தையும் கம்சனால் கொல்லப்படும் என்று பயந்து தேவகியின் கணவர் வாசுதேவர் இரவோடு இரவாக பால கிருஷ்ணரை நந்த குலத்திற்கு எடுத்து சென்றார் வசுதேவர்.விழித்திருந்த காவலர்கள் அனைவரும் மாயையால் உறங்கினர்; சிறைக்கதவுகள் தானாக திறந்து கொண்டன. வெள்ளம் கரை புரண்டு பய்ந்த யமுனை நதி இரண்டாகப் பிளந்து வசுதேவருக்கு பாதை அமைத்தது. மழையிலிருந்து கண்ணனைக் காப்பாற்ற ஆதி சேஷன் வந்து குடைப் பிடித்தான்.பெண் குழந்தை பெற்ற யசோதை தன் உணர்வின்றி உறங்கிக் கொண்டிருந்தாள். கண்ணனை அங்கு விட்டு, வசு தேவர் அந்த பெண் குழந்தையை எடுத்து சிறை திரும்பி வந்தார்; சிறைக்கதவுகள் பூட்டிக் கொண்டன. மாயை விலகி காவலர்கள் விழித்துக் கொண்டனர். அந்தக் குழந்தை அழுதது. குழந்தை பிறந்த செய்தி மன்னனுக்கு பறந்தது. ஆசையுடன் வரவேண்டிய தாய் மாமன் ஆயதத்துடன் வந்தான். ஈவு இரக்கமில்லாமல் பெண் குழந்தை என்றும் பாராமல் கொல்ல முற்பட்டான் . குழந்தை அம்மன் சக்தி வடிவமாக வானத்தில் நின்று உன்னைக் கொல்லப்பிறந்தவன் கோகுலத்தில் உள்ளான் என்னும் உண்மை நிலை உணர்த்தி மறைந்தது. அதன் பின் யசோதையும் நந்தகோபரும் கண்ணனை தன் குழந்தை போல பாசமாக வளர்த்தனர்

விளக்கம்:-
பூ சுற்றி வைத்துள்ள பந்து வைத்திருப்பது (போல) மிருதுவான விரல்களை (உடைய அழகான) பெண் (நப்பின்னையை கல்யாணம் செஞ்சுக்க வேண்டும் என்ற) காரணத்தினால் கொடிய (மூர்க்க தனமான) ஏழு ஆண் எருதுகளை (அடக்கி) வென்ற ராசா (என் அண்ணன் கண்ணன்) எங்கும் பெரும் புகழ் சேரும் (கோகுலத்தில் வசிக்கும்) நந்தனின் (வளர்ப்பு) மகன் ஆக ஆகியவன் (என்றுமே) நம்ப தகுந்தவன் நம் பெருமான் என் தந்தைக்கு தந்தை (தொண்டு செய்து வழிபட்ட) தம் பெருமான் (திருவள்ளூர் என்ற திரு) எவ்வுளில் படுத்து கொண்டிருக்கிறானே.

1062
பாலன் ஆகி ஞாலம் ஏழும் உண்டு* பண்டு ஆல் இலை மேல்*
சால நாளும் பள்ளி கொள்ளும்* தாமரைக் கண்ணன் எண்ணில்*
நீலம் ஆர் வண்டு உண்டு வாழும்* நெய்தல் தண் கழனி*
ஏல நாறும் பைம் புறவில்* எவ்வுள் கிடந்தானே* 2.2.5

விளக்கம்:-
வெகு காலத்திற்கு முன்பு (பிரபஞ்சமே பெரிய அழிவுக்கு உண்டான போது பரம்பொருளான இறைவன் கண்ணன்) குழந்தை ஆகி ஏழு உலகங்களையும் (அப்படியே அல்வா சாப்பிடறா மாதிரி விழுங்கி) உண்டு ஆலமரத்து இலையின் மேலே வெகு நாட்களாக (தேவர் முனிவர் பிரபஞ்சம் என யாருக்கும் எந்த ஆபத்தும் நெருங்காதவாறு தனது வயிற்றுக்குள் சுமந்து கொண்டு ஹாயாக) படுத்து கொள்ளும், தாமரை (மலர் போல அழகான கண்களை உடைய என் அண்ணன்) கண்ணன் (அழகான) எண்ணற்ற நீல நிறமுடைய வண்டுகள் (தேனை) உண்டு வாழும் லில்லி மலர்கள் (சூழ்ந்த) குளிர்ந்த வயல்வெளிகளும்., நல்ல வாசனை உடைய பசுமையான பயிர்கள் வளர்ந்த ( நிலமும் உடைய திருவள்ளூர் என்ற திரு) எவ்வுளில் படுத்து கொண்டிருக்கிறானே.




1063
சோத்த நம்பி என்று* தொண்டர் மிண்டித் தொடர்ந்து அழைக்கும்*
ஆத்த நம்பி செங்கண் நம்பி* ஆகிலும் தேவர்க்கு எல்லாம்*
மூத்த நம்பி முக்கண் நம்பி என்று* முனிவர் தொழுது*
ஏத்தும்* நம்பி எம்பெருமான்* எவ்வுள் கிடந்தானே*2.2.6

விளக்கம்:-
(நல்ல குணங்களை கொண்டவரே) வணங்குகிறோம் இறைவா! என்று தொண்டர்கள் வலிமையுடன் தொடர்ந்து அழைக்கும், (அனைவரும்) விரும்பும் இறைவன், சிவந்த கண்களையுடைய (அழகான) இறைவன், (இப்படிபட்ட சிறப்புகளை உடையவன்
என் அண்ணன் கண்ணன்), ஆகிலும் (அவனை பார்த்து) தேவர்க்கு எல்லாம் மூத்த இறைவனே , மூன்று கண்களுடைய (சிவனுக்கும்) இறைவனே என்று முனிவர்கள் தொழுது போற்றும் இறைவன், எம் பெருமான் (திருவள்ளூர் என்ற திரு) எவ்வுளில் படுத்து கொண்டிருக்கிறானே.

1064
திங்கள் அப்பு வான் எரி கால் ஆகி* திசை முகனார்*
தங்கள் அப்பன் சாமி அப்பன்* பாகத்திருந்த* வண்டுண்
தொங்கல் அப்பு நீள் முடியான்* சூழ் கழல் சூட நின்ற*
எங்கள் அப்பன் எம் பெருமான்* எவ்வுள் கிடந்தானே*2.2.7

விளக்கம்:-
(பரம்பொருளான இறைவன்) நிலவு நீர் வானம் நெருப்பு காற்று (முதலிய பஞ்ச பூதங்கள்)ஆகியவன், (அதுமட்டுமில்லாமல்) நான்கு முகங்களை உடைய பிரம்மனுக்கு அப்பன், சாம வேதங்களின் (ஹீரோவான) பொன் அப்பன், (என் அண்ணன் கண்ணனின் அழகான திருமேனியில் ஒரு) பாகத்தில் இருக்கும் (அது சரி பெருமாள் திருமேனியில் ஒரு பாகத்தில் இருப்பது யாரு? மகாலட்சுமி என்று நினைத்து இருப்பீர்களே! ஹி! ஹி! இன்னொருத்தர் அவர்! யார் தெரியுமா! இதோ!)வண்டுகள் (தேனை விரும்பி உண்ணக்கூடிய அழகான கொன்றை) பூமாலை (அணிந்து கங்கை) நீர் (சூடிய) நீளமான முடியுடைய (அன்புள்ளம் கொண்ட ஈசனின் தலையில் (பெருமாளின் பாதம் இருக்கிறதே! அடடே! என்ன ஒரு பாக்கியம் ஈசனுக்கு, கொடுத்து வச்சவருப்பா! நம்ம அன்பு சிவன், அது கூட தலையில் ஒரு பகுதி மட்டுமல்ல எங்கும் ) சூழ்ந்து (இருக்குமாறு தனது திரு) பாதத்தை சூட நின்ற எங்கள் அப்பன் எம் பெருமான் (திருவள்ளூர் என்ற திரு) எவ்வுளில் படுத்து கொண்டிருக்கிறானே.

1065
முனிவன் மூர்த்தி மூவர் ஆகி* வேதம் விரித்து உரைத்த
புனிதன்* பூவை வண்ணன் அண்ணல்* புண்ணியன் விண்ணவர் கோன்*
தனியன் சேயன் தான் ஒருவன் ஆகிலும்* தன் அடியார்க்கு
இனியன்* எந்தை எம்பெருமான்* எவ்வுள் கிடந்தானே*2.2.8

விளக்கம்:-
(பரம்பொருள் இறைவன்) பெருமாளே! (சிவன், பிரம்மன், பெருமாள் என) மூன்று மூர்த்திகளாகி (என்னாது பெருமாளே பெருமாள் ஆகி! என்று சொல்றாரா ஆழ்வார்!! என்றுதானே நினைக்கிறீங்க!.ஹி! ஹி! ஆமாங்க! அவனே அவனும் ஆகி, SO பெருமாளே மூன்று மூர்த்திகளாகி) வேதத்தை விரிவாக (விளக்கி) சொன்ன புனிதமானவன், காய மலர் போல (நீல) வண்ணமுடையவன், பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய (அண்ணல் என் அண்ணன் கண்ணன்), நல்ல செயல்களையே செய்யும் (புண்ணியன்), வானவர்களுக்கு அரசன், தனி ஒருவன் (யாருக்கும் ஒப்பில்லாதவன்) யாராலும் முழுவதும் அறியமுடியாதவன், (இறைவன்) தான் ஒருவனே ஆகிலும், தன் அடியார்க்கு இனிமையானவன், என் தந்தை, எம் பெருமான் (திருவள்ளூர் என்ற திரு) எவ்வுளில் படுத்து கொண்டிருக்கிறானே.

1066
பந்து இருக்கும் மெல் விரலாள்* பாவை பனி மலராள்*
வந்து இருக்கும் மார்வன்* நீலமேனி மணிவண்ணன்*
அந்தரத்தில் வாழும்* வானோர் நாயகனாய் அமைந்த*
இந்திரற்கும் தம் பெருமான்* எவ்வுள் கிடந்தானே*2.2.9

விளக்கம்:-
பூ சுற்றி வைத்துள்ள பந்து (போல) இருக்கும் மென்மையான (அழகான) விரலுடைய பெண்ணும், குளிர்ந்த தாமரை மலர் (மேல அமர்ந்திருக்கும்) பெண் (அட யாருப்பா இவ்ளோ அழகான்னு கேட்கிறீங்களா! ஹி ஹி மகாலட்சுமி) வந்து (தங்கி) இருக்கும் மார்பை உடையவனும், நீல (நிற அழகான திரு) மேனி ( உடைய நீல)மணி வண்ணன் (செல்லகுட்டி என் அண்ணன் கண்ணன் அதுமட்டுமில்ல) வானத்தில் வாழும் (சூரியன், நிலா, மழை மற்றும் பல) தேவர்களுக்கு தலைவனாய் அமைந்த இந்திரருக்கும் (இறைவன்) தம் பெருமான் (திருவள்ளூர் என்ற திரு)எவ்வுளில் படுத்து கொண்டிருக்கிறானே.

1067
இண்டை கொண்டு தொண்டர் ஏத்த* எவ்வுள் கிடந்தானை*
வண்டு பாடும் பைம் புறவின்* மங்கையர் கோன் கலியன்
கொண்ட சீரால் தண் தமிழ் செய் மாலை* ஈர் ஐந்தும் வல்லார்*
அண்டம் ஆள்வது ஆணை* அன்றேல் ஆள்வர் அமரர் உலகே*2.2.10

விளக்கம்:-
(பூ மற்றும் துளசி முதலிய) மாலைகள் கொண்டு தொண்டர்கள் போற்றி (வழிபடும் திருவள்ளூர் என்று திரு) எவ்வுளில் படுத்து கொண்டிருப்பவனை வண்டுகள் பாடும் பசுமையான வயல்கள் (சூழ்ந்த) திருமங்கை (நாட்டு) மன்னன் போர்வீரனான (திருமங்கை ஆழ்வான்) நேர்த்தியான அழகு கொண்ட குளிர்ந்த தமிழால் செய்த மாலை இரண்டு ஐந்தும் (என்னை போலவே உருக்கமாக பெருமாள் மேல் அன்பு கொண்டு பக்தியோடு சொல்ல) வல்லவர்கள் உலகம் ஆள்வது ஆணை அப்படி இல்லை என்றால் ஆள்வார்கள் தேவர் உலகே.

உற்சவர்: ஸ்ரீ வைத்திய வீர ராகவ பெருமாள்

திருமங்கை ஆழ்வார் பாடிய எவ்வுள் தற்போது காலமாற்றத்தால் திருவள்ளூர் என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் உள்ள சென்னையிலிருந்து 30 Km தொலைவில் திருவள்ளூர் அமைந்துள்ளது.
இங்கு பெருமாள் ஆதிசேஷன் மேல் படுத்த கோலத்தில் அழகாக காட்சியளிக்கிறார். பெருமாளின் பெயர் வீரராகவர். மக்களின் நோய்களை அடியோடு நீக்குபவர் ஆதலால் அன்போடு ஸ்ரீ வைத்திய வீரராகவர் என்று அழைக்க படுகிறார். தாயார் கனகவல்லி தாயார் .

திருமங்கை ஆழ்வார் பாடிய திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவ பெருமாளின் 10 பாசுரங்களின் தூய தமிழில் சொற்பொருள் .

மடவார் - இளமையுடைய பெண்
வேய் – மூங்கில்
தையலாள் - பெண்
தானவன் - அசுரன்
வாள் - ஒளி, கத்தி
பொய் இலாத - உண்மையான
முடிகள் - தலைகள்
வெம் - கொடிய
செஞ்சரம் எய்த - சிவந்த அம்பு விட்ட
எந்தை - என் தந்தை
தூது - செய்தி தெரிவிக்கும் பணி
மன் - சிறந்த
வாளி - அம்பு
வானரம் - குரங்கு, அனுமன், ஆஞ்சநேயர்
மொழிந்து - கூறியது
மாள - இறக்க
முனிந்து – சினந்து , வெறுத்து
பெருநிலத்தார் - அதிகமான நிலம் உடைய பணக்காரன், துரியோதனன்
இன்னார் - தன்னை யாரென்று அறிமுகபடுத்தி கொள்ளுதல்
பந்து அணைந்த - பந்தை தழுவிய (போல)
மெல் - மிருதுவான, மென்மையான, மெல்லிய
பாவை - பெண்
வெந்திறல் - கொடிய திறமை
ஏறு - ஆண் எருது
வேந்தன் - அரசன், மன்னன்
விரி புகழ் - பெரும் புகழ்
பண்டு - வெகு காலம் முன்பு, மிகவும் பழமை வாய்ந்த
ஆல் - ஆலமரம்
சால - மிகவும்,ரொம்ப
நாளும் - நாட்களாக
பள்ளி - படுத்து
எண்ணில் - எண்ணற்ற
ஆர் – பொருந்திய, ஒலி
நெய்தல் - நீரில் பூக்கும் வெள்ளை, நீல நிற லில்லி மலர்கள் உள்ள இடம் (ஆம்பல்)
தண் - குளிர்ந்த
கழனி - வயல் வெளி
ஏல - பொருந்த, இயல
நாறும் - நல்ல மணமிக்க
பைம் - பசுமை
புறவு - காடு, முல்லை நிலம், பயிர்கள் வளர்ந்த நிலம்,
சோத்தம் - வணக்கம்
மிண்டி - வலிமை
ஆத்தன் - விருப்பமானவன்
செங்கண் - சிவந்த கண்கள்
முக்கண் - சிவபெருமான்
நம்பி - இறைவன், நம்ப தகுந்தவர்
திங்கள் - நிலவு
அப்பு - நீர், அப்பா, அன்பாக கூறுவது
வான் - வானம்
எரி - நெருப்பு
கால் - காற்று
திசைமுகனார் - பிரம்மன், நான்கு முகங்களை கொண்டவர்
அப்பன் - தந்தை
சாமி - பொன் , சாமவேதம், இறைவன்
தொங்கல் - பூமாலை
நீள் - நீளமான
சூழ் - சுற்றி
கழல் - பாதம், திருவடி
சூட - அணிந்த
முனிவன் - இறைவன்
மூர்த்தி மூவர் - பிரம்மன், சிவன், திருமால்
அண்ணல் - வணக்கத்திற்கும் போற்றுதலுக்கும் உரியவர், தலைவன்
புண்ணியன் - நற்செயல்களை செய்பவன்
கோன் - அரசன்
தனியன் - தனி ஒருவன், ஒப்பில்லாதவன் தனக்கு இணையாக யாரும் இல்லாதவன்
சேயன் - அறிய முடியாதவன், முருகன்
பந்து - பூவை சுற்றி விட்டு இருப்பது, உருண்டை வடிவம்
பனிமலர் - குளிர்ந்த இடத்தில பூக்கும் மலர், தாமரை
அந்தரம் - நடுவெளி, ஆகாயம்
நாயகன் - தலைவன்
இண்டை - மாலை
ஏத்த - போற்ற
கலியன் - போர்வீரன்
சீர் - அழகு, நேர்த்தி,செய்யுளில் ஒரு வகை வரிசை
தண் - குளிர்ந்த
செய் - செய்த
அண்டம் - உலகம்
அன்றேல் - இல்லை என்றால் , வேண்டாம் என்றால்
அமரர் - வானோர் தேவர்





சரணு சரணு சரணு சரணு ஸ்ரீ வைத்திய வீரராகவர் திருவடியே சரணம்.
ஸ்ரீ வைத்திய வீரராகவருக்கு சமர்ப்பணம். கோவிந்தா! கோவிந்தா! கோவிந்தா!