பொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா? "ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா! நோaயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்.

Saturday, September 25, 2010

சிங்கவேள்குன்றமே!- திருமங்கை ஆழ்வார் (1008-1117)


சத்ரவட நரசிம்மர்


பெரிய திருமொழி


1008
அங்கண் ஞாலம் அஞ்ச அங்கோர் ஆளரியாய்*
அவுணன் பொங்க ஆகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிடம்*
பைங்கண் ஆனைக் கொம்பு கொண்டு பத்திமையால்* அடிக்கீழ்
செங்கண் ஆளி இட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றமே. 1.7.1

விளக்கம்:-
அப்பப்பா! அப்போது உலகமே அஞ்சும்படி (சும்மா அதிருதுல்ல!) அங்கு ஒரு தூணில் நரசிம்ம பெருமாள் (தோன்றியதும் அதை பார்த்த அசுரன்) இரணியன் கோபத்துடன் வெகுண்டெழ (டேய்1 டேய்! ஓவரா பொங்காதடா! என்று சொல்வது போல! அவன் அலறும்படி) அவன் மார்பை நல்லா கூரான நகங்களால் பொளந்த தூயவனான (என் செல்லம் நரசிம்ம பெருமாள்) இருக்குமிடம்,குளிர்ச்சியான (cool eye) கண்களை உடைய யானையின் தந்தங்களை பிடுங்கி கொண்டு வந்து பக்தியால் சிவந்த கண்களுடைய சிங்கங்கள் (எங்கள் நரசிம்ம பெருமாளின் பாதத்தில் வைத்து) வழிபடும் சிங்கவேல்குன்றமே!.

1009
அலைத்த பேழ்வாய் வாள் எயிற்றோர் கோளரியாய்* அவுணன்
கொலைக் கையாளன் நெஞ்சிடந்த கூருகிராளனிடம்*
மலைத்த செல் சாத்தெறிந்த பூசல் வன்துடிவாய் கடுப்ப*
சிலைக்கை வேடர் தெழிப்பெறாத சிங்கவேள்குன்றமே*1.7.2

விளக்கம்:-

(பயங்கரமான சத்ததுடன்)கர்ஜனையை வெளிபடுத்தும் பெரிய வாயையும், ஒளியுடைய கத்தி போல கூரான பற்களையும் கொண்டு நரசிம்மமாய் (தூணிலிருந்து) வெளிவந்து (அநியாயமாக) பலரை கொலை செய்யும்(வீணா போன அந்த) கை உடைய அசுரன் (இரணியன்) நெஞ்சை பொளந்த கூர்மையான நகங்களை உடைய (என் செல்லம் நரசிம்ம பெருமாள்) இருக்குமிடம், (வேடர்கள் தாக்கியதால்) வழியில் செல்பவர்களும் (வேடர்களும்)ஒருவரை ஒருவர் அடித்து சண்டை போட்டு கொண்டும், (வேடர்கள்) கடுமையாக தாள வாத்தியங்களை ஒலித்து கொண்டும், கையில் வில்லை வைத்து கொண்டிருக்கும் வேடர்களின் இரைச்சல் நீங்காத சிங்கவேல்குன்றமே!


1010
ஏய்ந்த பேழ்வாய் வாளெயிற்றோர் கோளரியாய் அவுணன்
வாய்ந்த ஆகம் வள்ளுகிரால் வகிர்ந்த அம்மானதிடம்
ஓய்ந்த மாவும் உடைந்த குன்றும் அன்றியும் நின்றழலால்
தேய்ந்த வேயும் அல்லதில்லாச் சிங்கவேள் குன்றமே 1.7.3

விளக்கம்:-

உருவத்துக்கு பொருத்தமான பெரிய வாயையும், கத்தி போல (கூர்மையான) பற்களும் கொண்டு நரசிம்மமாய் (தூணிலிருந்து வெளிவந்து) அசுரன் (இரணியனின் பெரிசா வளர்ந்த) மார்பை பொளந்த அம்மான் (என் இறைவன்) (என் செல்லம் நரசிம்ம பெருமாள்) இருக்குமிடம், (அங்கேயும் இங்கேயும் உணவுக்காக அலைந்து) களைத்த விலங்குகளும், உடைந்த சிறிய மலைகளும், அதுமட்டும் இல்லாமல் எரிந்து நின்ற நெருப்பால் கருகி போன மூங்கில்களையும் தவிர வேறொன்றும் இல்லாத சிங்கவேல்குன்றமே!


1011
எவ்வம் வெவ்வேல் பொன் பெயரோன் ஏதலன் இன்னுயிரை
வவ்வி*ஆகம் வள்ளுகிரால் வகிர்ந்த அம்மானதிடம்*
கவ்வும் நாயும் கழுகும் உச்சிப்போதொடு கால் சுழன்று*
தெய்வம் அல்லால் செல்ல வொண்ணாச் சிங்கவேள்குன்றமே*.
1.7.4

விளக்கம்:-

(மற்றவர்களுக்கு) துன்பத்தையே (தரக்கூடிய) கூரான ஆயுதத்தை (வேலை) கையில் கொண்டுள்ள பொன் (என்னும் அர்த்தம் தரக்கூடிய) பெயருள்ளவவன் (ராஸ்கல் பேர்ல ஒன்னும் குறைச்சல் இல்ல! அதாங்க அந்த இரணியனான) எதிரியின் உயிரை வாங்கி, அவன் உடலை (தனது) கூரான நகங்களால் பொளந்த (என் இறைவன்) என் அம்மான் (என் செல்லம் நரசிம்ம பெருமாள்) இருக்குமிடம், (கண்ணில் பட்டவரை எல்லாம் பார்த்து லொள்! லொள்! என்று குலைத்து) கடிக்கும் நாய்களும், கழுகுகளும், (இருக்கு அதோடு )உச்சி (வெயில் வெப்பத்தோடு) சேர்ந்து (அடிக்கும்) சுழல் காற்றும் அப்பப்பா!) தெய்வ (துணை) இல்லாமால் செல்ல முடியாத சிங்கவேல்குன்றமே!

1012
மென்ற பேழ்வாய் வாள் எயிற்றோர் கோளரியாய்* அவுணன்
பொன்ற வாகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிடம்*
நின்ற செந்தீ மொண்டு சூறை நீள் விசும்பூடிரிய*
சென்று காண்டர்க்கரிய கோயில் சிங்கவேள்குன்றமே. 1.7.5

விளக்கம்:-
ஆஹா! நல்ல கமுக்கமா அழகா பெரிய வாயையும், கத்தி போல கூரான பெரிய பற்களும் கொண்ட (பரம்பொருளாகிய எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன்) நரசிம்மமாய் (தூணிலிருந்து வெளிவந்து) அசுரனாகிய (இரணியனின்) மார்பின் பகுதியை (தனது) கூரான நகங்களால் பொளந்த தூய்மையானவன் (எம் செல்லம் நரசிம்ம பெருமாள்) இருக்குமிடம், கொழுந்து விட்டு எரிகின்ற தீயானது , சூறாவளி காற்றால் முரண்டு தகதகன்னு வானத்தில் பறந்து சிதறி அடிக்குது! (அச்சோ இப்ப நான் என்ன பண்றது!
(என் நரசிம்மர் கிட்டக்க) சென்று பார்ப்பதற்கு அரிய கோவில் சிங்கவேல்குன்றமே!



I think Thirumangai aalwar seen this type of situvation Location in Ahobilam





1013
எரிந்த பைங்கண் இலங்கு பேழ்வாய் எயிற்றோடு இது எவ்வுருவென்று*
இரிந்து வானோர் கலங்கியோட இருந்த அம்மானதிடம்*
நெரிந்த வேயின் முழையுள் நின்று நீணெறிவாய் உழுவை*
திரிந்த ஆனைச் சுவடு பார்க்கும் சிங்கவேள்குன்றமே*. 1.7.6


விளக்கம்:-

(Any time நாராயணன் நாரயணன் நாராயணன் உன் நாராயணன் எங்கேடா இருக்கிறான் என்று இரணியன் கோபத்தில் கேட்க, தூணிலும் இருப்பான்! துரும்பிலும் இருப்பான்! என்னிலும் இருப்பான்! உன்னிலும் இருப்பான்! எங்கும் இருப்பான்! என்று பிரகலாதன் கூற எங்கே காமிடா பார்க்கலாம் என்று இரணியன் தூணை தட்ட அங்கே அப்பொழுதே தூணை பிளந்து கொண்டு தோன்றிய எம் நரசிம்ம பெருமாளின் கண்கள்) குளிர்ந்த கண்கள் (தெரியுமா! ஆனா அந்த ராஸ்கல் இரணியனால வந்த கோபத்துல) செவசெவன்னு நெருப்பு போல கண்களும், பிரகாசமான பெரிய வாயையும், (கூரான) பற்களையும் (பார்த்து) இது எந்த வடிவம் என்று வானத்தில்உள்ளவர்களும் நிலைகெட்டு (துண்ட காணோம் துணிய காணோம் என்பது போல அலறி அடிச்சிக்கிட்டு என்ன செய்வதன்றே தெரியாம) கலங்கி ஓடும்படி இருந்த என் இறைவன் (என் அம்மான்) என் செல்லம் நரசிம்ம பெருமாள் இருக்குமிடம் ஒன்றோடொன்று சேர்ந்து கிடந்த அடர்த்தியாக குகை போல இருக்கும் மூங்கில்களில் (மறைந்து) நின்று புலிகள் பெரிய வழி பாதையில் அலைந்து திரிந்த (யானைகள் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்ள யானைகள்)காலடி தடத்தை பார்க்கும் சிங்கவேல்குன்றமே!

1014
முனைத்த சீற்றம் விண்சுடப் போய் மூவுலகும் பிறவும்*
அனைத்தும் அஞ்ச ஆளரியாய் இருந்த அம்மானதிடம்*
கனைத்த தீயும் கல்லுமல்லா வில்லுடை வேடருமாய்*
தினைத்தனையும் செல்ல வொண்ணாச் சிங்கவேள்குன்றமே*. 1.7.7

விளக்கம்:-

(அந்த ராஸ்கல் இரணியன் பண்ண அக்கிரமத்தால் வந்த) உச்சகட்ட கோபத்தால் விண்ணுலகமே வெப்பமாகுது! மூன்று உலகங்களும் , மற்ற உலகங்களும், அனைத்தும் பயப்படும்படி மனிதனும் சிங்கமும் கலந்ததுபோல உருவம் எடுத்த (என் இறைவன் நரசிம்ம பெருமாள்) இருக்குமிடம், தக தகன்னு (சத்தமிட்டு கொண்டே எரிகின்ற) தீயும், கற்களும், அதுமட்டுமில்லாம வில்லை உடைய வேடர்களும் (சுற்றி கொண்டிருப்பதால் இதற்க்கு மேல்) சிறிதளவும் செல்ல முடியாத சிங்கவேல்குன்றமே!


Ahobilam one of the narasimmar Temple

1015
நாத்தழும்ப நான்முகனும் ஈசனுமாய் முறையால்
ஏத்த*அங்கோர் ஆளரியாய் இருந்த அம்மானதிடம்*
காய்த்த வாகை நெற்று ஒலிப்பக் கல் அதர் வேய்ங்கழை போய்*
தேய்ந்த தீயால் விண்சிவக்கும் சிங்கவேள்குன்றமே. 1.7.8

விளக்கம்:-

நாக்கு தழு தழுக்க (உணர்ச்சி பெருக்கோட) நான்கு முகமுடைய பிரம்மனும், ஈசனும், (எங்க பெருமாளின் மீது அன்பு கொண்டு அவர் புகழ் பாடி) வழிபட, அங்கு (ஓர் தூணில்) மனிதனும் சிங்கமும் கலந்தார் போல உருவம் கொண்டு எழுந்தருளிய (எனது அருமை நண்பன் நரசிங்க பெருமாள்) இருக்குமிடம், வாகை மரத்தில் நன்கு முதிர்ந்து வளர்ந்த காய்கள் (சல சல என்று) சத்தமிட, (அடடே! அப்புறம்) கற்களின் (இடுக்குகளின்) வழியில் (ஓங்கி வளர்ந்த) மூங்கில் மரங்கள் (ஒன்றோடு ஒன்று) உரசியதால் (வந்த) தீயால் வானம் சிவந்து காணப்படும் சிங்கவேல்குன்றமே!

1016
நல்லை நெஞ்சே நாம் தொழுதும் நம்முடை நம்பெருமான்*
அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரம் தோளன் இடம்*
நெல்லி மல்கிக் கல் உடைப்பப் புல் இலை ஆர்த்து* அதர்வாய்ச்
சில்லு சில்லென்று ஒல்லறாத சிங்கவேள்குன்றமே 1.7.9


விளக்கம்:-

நல்ல நெஞ்சே! நாம் வழிபடும் நம்மை (சொத்தாக) உடைய நம் பெருமாள்,
(மாலையில் நீரில் பூக்கும்) அல்லி (மலரை போல அழகாக இருக்கும்)
மகாலட்சுமியை கட்டி பிடிச்சிக்கிட்டு நின்ற,ஆயிரம் தோள்கள் (போல வலிமை ) உடைய (எமது தாயும் தந்தையும் குருவும் தெய்வமும் ஆன நரசிம்ம பெருமாள்) இருக்குமிடம், நெல்லிக்காய் (மரங்கள்) நிறைய வளர்ந்து (மலை) கல்லை உடைக்க, (இந்த பக்கம் பார்த்தா!) பனை மற்றும் தென்னை ஓலைகள் (சல சலன்னு) சத்தம் போட, (இந்த அழகை பார்த்து கொண்டே போனால் வழியில்) சில் (வண்டுகளின்) சில்ல் என்ற சத்தம் நீங்காத சிங்கவேல்குன்றமே!


1017
செங்கண் ஆளி இட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றுடைய*
எங்கள் ஈசன் எம்பிரானை இருந்தமிழ் நூல் புலவன்*
மங்கையாளன் மன்னு தொல் சீர் வண்டறை தார் கலியன்*
செங்கையாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே. 1.7.10

விளக்கம்:-

சிவந்த கண்களுடைய சிங்கங்கள் (வேட்டையாடி கிடைக்கும் பொருள்களை எம் நரசிம்ம பெருமானின் பாதத்தில் வைத்து வழிபடும்) சிங்கவேல்குன்றில் வசிக்கும் எம் ஈசன் எம் தலைவருமான (எம் சிங்கக்குட்டி, சுஜ்ஜ்ஹு குட்டி என் செல்லம், என் குழந்தை, என் நண்பன், எமக்கு தாய், தந்தை, குரு , தெய்வம், பரம்பொருளுமான நரசிங்கபெருமாளை பற்றி ) பெருமைக்குரிய தமிழ் நூல் புலவனாகிய திருமங்கை மன்னன் என்றுமே நிலைத்து நிற்கும் சிறந்த பழமை வாய்ந்த அழகான செய்யுள் வரிகளை கொண்டு, வண்டுகள் சத்தமிடகூடிய (இடத்தில்) கழுத்தில் மாலை அணிந்துள்ள கலியன் (கொடுத்து கொடுத்து) சிவந்த கைகளுக்கு சொந்தகாரனுமாகிய (நான் பாடிய) இலக்கண சொல்மாலையை (என்னை போலவே பெருமாளை அன்போடு எண்ணி சொல்ல) வல்லவர் குற்றம் இல்லாதவர்!


I Love Narasimmar

திருமங்கை ஆழ்வார் சொன்ன சிங்கவேள்குன்றம்
அகோபிலம் என்று அழைக்கப்படுகிறது. இது சென்னை - மும்பை ரயில் பாதையில் கடப்பா ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து 32 கி.மீ. சென்றால் இத்தலத்ததை அடையலாம். இத்தலம் ஆந்திரமாநிலத்தில் உள்ளது. இதற்கு நவநரசிம்ம க்ஷேத்திரம் என்னும் பெயரும் உண்டு. இங்கு மலையடிவாரத்தில் ஒரு கோயிலும் மலையின் மேல் ஒரு கோயிலும் உண்டு. இது அகோபில மடத்தின் தலைமையிடமாகும்.
வராக நரசிம்மர், மாலோல நரசிம்மர், யோகானந்த நரசிம்மர், பாவனா நரசிம்மர், கராஞ்ச நரசிம்மர்,சத்ரவட நரசிம்மர், பார்கவா நரசிம்மர், ஜ்வால நரசிம்மர், அஹோபில நரசிம்மர் என்று நவ நரசிம்மர்களை சேவிக்க மூன்று நாட்கள் தேவைப்படும்,

அனைவருக்கும் நரசிம்மரின் அருளும் ஆசிர்வாதமும் பெற்று நலமோடு
வாழ வாழ்த்துக்கள்!

Tuesday, September 14, 2010

நைமிசாரணியத்துள் எந்தாய்!- திருமங்கை ஆழ்வார் (998-1007)


Sri Hari - Naimi Saaranyam



பெரிய திருமொழி

998
வாணிலா முறுவல் சிறுநுதல் பெருந்தோள் மாதரார் வனமுலைப் பயனே பேணினேன்*
அதனைப் பிழையெனக் கருதிப் பேதையேன் பிறவி நோயருப்பான்*
ஏணிலேன் இருந்தேன் எண்ணினேன் எண்ணி இளையவர் கலவியின் திறத்தை* நாணினேன்
வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய்!. 1.6.1

விளக்கம்:-
நைமிசாரணியத்துள் வசிக்கும் என் தந்தையே! ஒளியுடைய நிலா போல (சிநேகா மாதிரி)
மெலிசா சிரிப்பையும், (லைலா மாதிரி) சிறிய நெற்றியும், (குஷ்பூ மாதிரி) பெரிய
தோளையும் , பெண்களின் பெரிய செழிப்பான முலைகளை ( ஆன்னு பார்த்து ஜொள்ளு
விட்டு கொண்டு இவைகளே பேரின்பம் என்று இதுநாள்வரை)கருதினேன் . இதெல்லாம் தப்புன்னு கருதி உலக உண்மையை அறியாமல் பிறவி என்னும் நோயை அறுக்கும் உன் எண்ணமே இல்லாமல் இருந்தேன்.ஆனா இப்போ எண்ணினேன் முன்பு பெண்களின் உடலுறவில் (ஈடுபட்டதை) எண்ணிவெட்கி தலை குனிந்தேன். உடனே வந்து உன் திருவடியை அடைந்தேன்.நைமிசாரணியத்துள் வசிக்கும் என் தந்தையே!

999
சிலம்படி உருவிற் கருநெடுங் கண்ணார் திறத்தனாய் அறத்தையே மறந்து*
புலம்படிந்துண்ணும் போகமே பெருக்கிப் போக்கினேன் பொழுதினை வாளா*
அலம்புரி தடக்கை ஆயனே! மாயா! வானவர்க்கரசனே!*
வானோர் நலம் புரிந்து இறைஞ்சும் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய். 1.6.2


விளக்கம்:-
நைமிசாரணியத்துள் வசிக்கும் என் தந்தையே! சிலம்புகளை காலில் போட்டுக்கிட்டு
(நமிதா கணக்கா டான்ஸ் ஆடும்) கறுத்த நீண்ட கண்களையுடைய பெண்களிடமே மனம்
செலுத்தியதால் ஒழுக்கத்தை மறந்தேன். புலன்களால் உண்டான இன்பங்களை பெருக்கி
வீணாக நாட்களை கழித்தேன். சஞ்சலம் உள்ளவர்களுக்கு மனம் நிறைந்து சந்தோசபடும்படி கொடுக்க கூடிய (கொடுத்து கொடுத்து சிவந்த) பெரிய கையப்பா நீ! (என் கண்ணனே!)
மாடுகளை மேய்ப்பவனே! மாயவனே! வானவர்களின் அரசனே! வானத்தில் இருப்பவர்களும் தங்கள் நலனை வேண்டி வணங்கும்உன் திருவடி அடைந்தேன். நைமிசாரணியத்துள் வசிக்கும் என் தந்தையே

1000
சூதினைப் பெருக்கிக் களவினைத் துணிந்து சுரிகுழல் மடந்தையர் திறத்து*
காதலே மிகுத்துத் கண்டவா திரிந்த தொண்டனேன் நமன் தமர் செய்யும்*
வேதனைக் கொடுங்கி நடுங்கினேன் வேலை வெண்திரை அலமரக் கடைந்த *நாதனே
வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய். 1.6.3

விளக்கம்:-

நைமிசாரணியத்துள் வசிக்கும் என் தந்தையே! (உள்ளே வெளியே என்று மங்காத்தா
கணக்கா) சூதாட்டம் ஆடிகிட்டு இருந்தேன், கூடவே தைரியமா திருடவும் செய்தேன்.
(அதுமட்டுமா அழகா) சுருள் முடி உடைய டீன் ஏஜ் பொண்ணுங்களின்
தொடர்பினால் காதலே மிகுந்து, கண் போன போக்கிலே ஊரை சுத்திக்குனு இருந்தேன்.
தங்களின் தொண்டன் (அச்சோ! நான் செஞ்ச தப்புக்கெல்லாம்) யமனின் தூதர்கள் செய்யும் வேதனைகளை நினைத்து பார்த்து அடங்கி (திகு திகுன்னு பயத்துல) நடுங்கினேன். தேவர்களின் சஞ்சலம் தீர்ப்பதற்காக (நுரையுடன் பொங்கும் வெண்மை நிற) அலைகள்
பிச்சிக்கிட்டு அடிக்கும் கடலை கடைந்த நாதனே! வந்து உன் திருவடி அடைந்தேன். நைமிசாரணியத்துள் வசிக்கும் என் தந்தையே!

1001
வம்புலாங் கூந்தல் மனைவியைத் துறந்து பிறர் பொருள் தாரமென்று இவற்றை*
நம்பினார் இறந்தால் நமன் தமர் பற்றி ஏற்றி வைத்து*
எரி எழுகின்ற செம்பினால் இயன்ற பாவையைப் பாவீ தழுவென மொழிவதற்கு அஞ்சி*
நம்பனே வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய். 1.6.4

விளக்கம்:-

நைமிசாரணியத்துள் வசிக்கும் என் தந்தையே! வாசனையுள்ள அழகான கூந்தலை
உடைய பொண்டாட்டிய விட்டு மற்றவங்க பொருளையும் , இன்னொருத்தரோட
பொண்டாட்டிய (பார்த்து ஜொள்ளு விட்டு கொண்டு) இவற்றையெல்லாம் நம்பி (ஆசைபட்டு) இறந்தவர்களை , யம தூதர்கள் புடிச்சிக்கிட்டு போய் ஓரிடத்தில் வைத்து நல்லா
கொழுந்து விட்டு எரிகின்ற செம்பால் (Copper) செய்யப்பட்ட பெண்ணை (டேய் பாவீ)
இதை கட்டி தழுவி கொள்! என்று சொல்வதற்க்கு பயந்து , (நான் செய்த
குற்றகளை நீக்கி எம்மை பரிசுத்தமாக்குபவனே!) என்றுமே நம்ப தகுந்தவனே!
உன் திருவடி அடைந்தேன்.நைமிசாரணியத்துள் வசிக்கும் என் தந்தையே!

1002
இடும்பையால் அடர்ப்புண்டு இடுமினோ துற்றேன்று இரந்தவர்க்கு இல்லையே என்று*
நெடுஞ்ச்சொலால் மறுத்த நீசனேன் அந்தோ! நினைக்கிலேன் வினைப்பயன் தன்னை*
கடுஞ்ச்சொலார் கடியார் காலனார் தமரால் படுவதோர் கொடுமிறைக்கு அஞ்சி*
நடுங்கி நான் வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய்*. 1.6.5

விளக்கம்:-

நைமிசாரணியத்துள் வசிக்கும் என் தந்தையே! துன்பத்தால் மிகவும் வருத்தம் கொண்டு
பசி என்று கேட்டு வந்தவர்க்கு (போ! போ! என்னிடம்) இல்லை என்று கடுமையான
சொல்லால் மறுத்த கீழ்த்தரமானவன் நான்! ஐயோ! இதனால் எனக்கு ஏற்படும் தீமையான
விளைவுகளை நினைக்க வில்லையே! கோபத்துடன் கடுமையான வார்த்தைகளை
பேசும் காவல் பொருந்திய எமனார் அனுப்பிய தூதர்களால் படும் கொடுமைக்கு
பயந்து நடுங்கி நான் வந்து உன் திருவடி அடைந்தேன்.
நைமிசாரணியத்துள் வசிக்கும் என் தந்தையே

1003
கோடிய மனத்தால் சினத்தொழில் புரிந்து திரிந்து நாய் இனத்தொடும் திளைத்திட்டு*
ஓடியும் உழன்றும் உயிர்களே கொன்றேன் உணர்விலேன் அதனால்*
நமனார் பாடியைப் பெரிதும் பரிசழித்திட்டேன் பரமனே! பாற்கடல் கிடந்தாய்*
நாடி நான் வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் *. 1.6.6

விளக்கம்:-

நைமிசாரணியத்துள் வசிக்கும் என் தந்தையே! ஒழுக்கமே இல்லாத மனச வச்சிக்கிட்டு
தவறான செயல்களை செய்து, ஊரை சுற்றிக்கொண்டு, (அச்சச்சோ யப்பப்பா)
நாயை போல (தெரு தெருவா சுற்றும் இனத்தவரோடு) சேர்ந்து இங்கேயும் அங்கேயும்
ஓடி அலைந்து திரிந்து சுய புத்தி இல்லாமல் உயிர்களை கொன்றேன்.அதனால் யமனின் (நரகமென்னும்) ஊரை (பரிசாக கிடைத்திருக்க வேண்டியது! மனம் திருந்தி உன்னிடம் சரண் அடைந்ததால் இப்போது அந்த நரகமென்னும் பரிசை) பெரிதும் அழித்துவிட்டேன். பரமனே!
பாற்கடலில் (ஹாயாக) படுத்து கொண்டிருப்பவனே! நாடி நான் வந்து உன் திருவடி அடைந்தேன்.


1004
நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும் நீதியல்லாதன செய்தும்*
துஞ்சினார் செல்லும் தொல்நெறி கேட்டே துளங்கினேன் விளங்கனி முனிந்தாய்*
வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில் பிரியா வானவா தானவர்க் கென்றும் நஞ்சனே*
வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய்* 1.6.7

விளக்கம்:-

நைமிசாரணியத்துள் வசிக்கும் என் தந்தையே! தப்பு தப்பான காரியங்களை மனசுல
நினைத்தும்,வாயினால் சொல்லியும், நியாயம் இல்லாததை செய்தும், (இப்படியெல்லாம்
வீணான வாழ்க்கை வாழ்ந்து) இறந்தவர்கள் செல்லும் (நரகம் பற்றி) பெரியவர்கள்
சொல்ல கேட்டு (பயந்து போய்) நடுங்கினேன். விளா மரமாகி (நின்ற அசுரனை) அழித்தாய்!
(எம்கண்ணனே!) தீய எண்ணங்கள் உடைய அடியேனின் நெஞ்சினில்பிரியாமல் இருக்கும்
வானவனே!(தேவாதி தேவனே!) அசுரர்களுக்கு என்றும் விஷமானவனே!
வந்து உன் திருவடி அடைந்தேன்.


1005
ஏவினார் கலியார் நலிக வென்று என் மேல் எங்கனே வாழுமாறு?*
ஐவர் கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன் குறுங்குடி நெடுங்கடல் வண்ணா!
பாவினார் இன்சொல் பன்மலர் கொண்டு உன் பாதமே பரவி நான் பணிந்து*
என் நாவினால் வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய்*. 1.6.8


விளக்கம்:-

நைமிசாரணியத்துள் வசிக்கும் என் தந்தையே! தளர்ச்சியடைந்து (நொந்து போடா! என்று )
கலியனார் (என் மேல் ஐம்புலன்களால் ஆன ஆசையை) ஏவி விட்டார் . (நான் உன்னிடம் சரணடைந்து விட்டேன் ஹி ஹி) இனிமேல் அவர் எங்கே வாழ போகிறார்!
(கண், காது, மூக்கு, நாக்கு, தோல் முதலான) ஐம்புலன்களால் (ஆன ஆசை என்னை) அரசாண்டு செய்யும் கொடுமையை (அடியோடு) அழித்து விட்டேன். திருக்குறுங்குடியில்
(வசிக்கும்) நெடுங்கடல் (நிற) வண்ணா! என் வாயினால் இனிமையான சொல்லெடுத்து
பாடி, பல வித விதமான மலர்களை கொண்டு, உன் பாதத்தில் தூவி, நான் பணிந்து வந்து
உன் திருவடி அடைந்தேன்.

1006
ஊனிடைச் சுவர்வைத்து என்பு தூண் நாட்டி உரோமம் வேய்ந்த ஒன்பது வாசல்*
தானுடைக் குரம்பைப் பிரியும் போது உன் தன் சரணமே சரணம் என்றிருந்தேன்
தேனுடைக் கமலத் திருவினுக்கரசே! திரைகொள் மாநெடுங்கடல் கிடந்தாய்*
நானுடைத் தவத்தால் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய்*. 1.6.9

விளக்கம்:-

நைமிசாரணியத்துள் வசிக்கும் என் தந்தையே! தசைகளை சுவராக வைத்து, எலும்புல
தூணை நட்டு,(அடடே நீ பெரிய Architect போல) முடியினால் கூரை கட்டி, (இரண்டு கண்கள்,
இரண்டு காதுகள் + இரண்டு மூக்குத் துவாரங்கள் + வாய் + சிறுநீர்ப்பாதை + மலப்பாதை)
ஆக ஒன்பது வாசல் உடைய உடல் பிரியும்போதுஉன்னுடைய (திருவடி) சரணமே சரணம்
என்று இருந்தேன். தேன் உடைய தாமரையில் (அமர்ந்துள்ள) மகாலட்சுமியின் அரசே! அலைகள் உள்ள பெரிய நீளமான கடலில் (அழகாக பாம்பு படுக்கையில்) படுத்து கொண்டு இருப்பவனே! (உன் திருவடியை பாசத்துடன் உள்ளத்திலேயே வைத்து இருந்தேன்)
நான் வைத்திருந்த (அந்த) தவத்தால் உன் திருவடி அடைந்தேன்

1007
ஏதம் வந்து அணுகா வண்ணம் நாம் எண்ணி எழுமினோ தொழுதும் என்று *
இமையோர் நாதன் வந்து இறைஞ்சும் நைமிசாரணியத்து எந்தையை ச் சிந்தையுள் வைத்து*காதலே மிகுத்த கலியன் வாயொலி செய் மாலை தாம் கற்று வல்லார்கள்*
ஓத நீர் வையகம் ஆண்டு வெண்குடைக்கீழ் உம்பரும் ஆகுவர் தாமே. 1.6.10

விளக்கம்:-

துன்பம் வந்து சேராம இருக்கணும்னு நாம் எண்ணினால் எழுந்துருங்கள், வழிபடுவோம்
என்று தேவர்கள் தலைவன் இந்திரன் (தேவர்களுடன்)வந்து வழிபடும் நைமிசாரணியத்தில்
வசிக்கும் என் தந்தையை உள்ளத்தில் வைத்து அவர் மேல் காதல் அதிகமாகி களியனாகிய
நான் வாயால் பாடிய இந்த சொல் மாலையை (நீங்கள்) கற்று (என்னை போலவே பாசத்துடன்
பெருமாளை எண்ணி இந்த பாசுரங்களை கூறினால்) கடல் சூழ்ந்த உலகம் ஆண்டு
வெள்ளை நிற குடையின் கீழே தேவர்களும் நீங்க ஆவீர்கள்!

Naimi Saaranyam Temple


திருமங்கை ஆழ்வார் சொன்ன திருநைமிசாரண்யம்
உத்திராஞ்சல மாநிலத்தில் உள்ளது. கல்கத்தா-டோராடூன் ரயில் பாதைaயில் உள்ள பாலமாவ் என்னும் ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து சீதாப்பூர் செல்லும் புகைவண்டியில் ஏறி நைமி சாரண்யம் என்னும் ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும். ரயிலடியிலிருந்து 3கி.மீ. தொலைவில் கோயில் உள்ளது. அயோத்தியிலிருந்து 3 மணி நேரம் பேருந்துப் பயணம் ஆகும்.

பெருமாள்:- தேவராஜன், or ஸ்ரீ ஹரி (நின்ற கோலம்)
தாயார்:- ஸ்ரீ ஹரி லட்சுமி, or ஸ்ரீ புண்டரீகவல்லி தாயார்